இத்தல முருகன் குன்றின் மீது அமைந்துள்ள கோயிலில் அருள்பாலிக்கிறார். பழநியைப் போலவே இத்தலத்தில் முருகன், மேற்கு நோக்கி காட்சி தருகிறார்.
கோயிலுக்கு வெளியே சிறிய குன்று ஒன்றுள்ளது. இதன் மேல் இடும்பன் சன்னதி உள்ளது. இவர் தோளில் காவடி தூக்கியபடி, தெற்கு நோக்கி காட்சி
தருகிறார். இங்குள்ள வல்லப விநாயகர் மிக விசேஷமானவர். இவர் 10 கைகளுடன் அருளுகிறார். கோயில் முன்மண்டபத்தில் அருணகிரியார் இருக்கிறார்.
ஆனி மாதம் மூலம் நட்சத்திரத்தில் இவருக்கு "ஜெயந்திவிழா' வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. கால பைரவருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. தேய்பிறை
அஷ்டமியின்போது இவருக்கு 108 சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது. சிவபார்வதியின் மகன் முருகன் நின்ற ஊர் என்பதால் "மகனூர்' என்றழைக்கப்பட்ட
இத்தலம், "மோகனூர்' என்று மருவியதாக சொல்கிறார்கள்.பழநியைப் போலவே இத்தலத்தில் முருகன், மேற்கு நோக்கி காட்சி தருகிறார். இவர் வலது
கையில் தண்டம் வைத்து, ஆவுடையார் மீது நின்ற கோலத்தில் இருக்கிறார்.
இத்தல முருகன் குன்றின் மீது அமைந்துள்ள கோயிலில் அருள்பாலிக்கிறார். பழநியைப் போலவே இத்தலத்தில் முருகன், மேற்கு நோக்கி காட்சி தருகிறார். கோயிலுக்கு வெளியே சிறிய குன்று ஒன்றுள்ளது. இதன் மேல் இடும்பன் சன்னதி உள்ளது. இவர் தோளில் காவடி தூக்கியபடி, தெற்கு நோக்கி காட்சி தருகிறார். இங்குள்ள வல்லப விநாயகர் மிக விசேஷமானவர். இவர் 10 கைகளுடன் அருளுகிறார். கோயில் முன்மண்டபத்தில் அருணகிரியார் இருக்கிறார். ஆனி மாதம் மூலம் நட்சத்திரத்தில் இவருக்கு "ஜெயந்திவிழா' வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது.
கால பைரவருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. தேய்பிறை அஷ்டமியின்போது இவருக்கு 108 சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது. சிவபார்வதியின் மகன் முருகன் நின்ற ஊர் என்பதால் "மகனூர்' என்றழைக்கப்பட்ட இத்தலம், "மோகனூர்' என்று மருவியதாக சொல்கிறார்கள். பழநியைப் போலவே இத்தலத்தில் முருகன், மேற்கு நோக்கி காட்சி தருகிறார். இவர் வலது கையில் தண்டம் வைத்து, ஆவுடையார் மீது நின்ற கோலத்தில் இருக்கிறார். |