முருகன் கோயிலான இங்கு, முருகனின் வாகனமான மயில் அதிக அளவில் இருப்பது சிறப்பு. ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அற்புதமாகத் திகழ்கிறது
கோயில். உள்ளே நுழைந்ததுமே அஷ்டலட்சுமியரும் சன்னதி கொண்டிருப்பது தனிச்சிறப்பு! கந்தசஷ்டி, வைகாசி, ஆடிக் கிருத்திகை என கந்தக் கடவுளுக்கு
உரிய விசேஷ தினங்களில், இந்தத் தலத்துக்கு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பலமுறை வந்து, சுப்ரமணியரை கண்ணாரத் தரிசித்து,
கதாகாலட்சேபங்களை நிகழ்த்தியுள்ளார் என்கின்றனர் பக்தர்கள். இளம் வயதில், இந்த ஊரிலேயே அவர் சில வருடங்கள் தங்கி இருந்ததாகவும், அப்போது
முருகனின் சன்னதிக்கு அடிக்கடி வந்து தரிசித்தாகவும் சொல்கின்றனர் ஊர்க்காரர்கள். எனவே, அவரைப் போற்றும் வகையில், வாரியார் சுவாமிகளின்
திருவுருவச் சிலையும் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு முருகப்பெருமானின் திருநாமம் சுப்ரமணியர், வள்ளி-தெய்வானையுடன், பன்னிரண்டு
திருக்கரங்களும் ஆறு முகங்களுமாக, வேலும் மயிலும் கொண்டு கருணையும் கனிவும் பொங்கக் காட்சி தருகிறார்.
முருகன் கோயிலான இங்கு, முருகனின் வாகனமான மயில் அதிக அளவில் இருப்பது சிறப்பு. ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அற்புதமாகத் திகழ்கிறது கோயில். உள்ளே நுழைந்ததுமே அஷ்டலட்சுமியரும் சன்னதி கொண்டிருப்பது தனிச்சிறப்பு! கந்தசஷ்டி, வைகாசி, ஆடிக் கிருத்திகை என கந்தக் கடவுளுக்கு உரிய விசேஷ தினங்களில், இந்தத் தலத்துக்கு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பலமுறை வந்து, சுப்ரமணியரை கண்ணாரத் தரிசித்து, கதாகாலட்சேபங்களை நிகழ்த்தியுள்ளார் என்கின்றனர் பக்தர்கள்.
இளம் வயதில், இந்த ஊரிலேயே அவர் சில வருடங்கள் தங்கி இருந்ததாகவும், அப்போது முருகனின் சன்னதிக்கு அடிக்கடி வந்து தரிசித்தாகவும் சொல்கின்றனர் ஊர்க்காரர்கள். எனவே, அவரைப் போற்றும் வகையில், வாரியார் சுவாமிகளின் திருவுருவச் சிலையும் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு முருகப்பெருமானின் திருநாமம் சுப்ரமணியர், வள்ளி-தெய்வானையுடன், பன்னிரண்டு திருக்கரங்களும் ஆறு முகங்களுமாக, வேலும் மயிலும் கொண்டு கருணையும் கனிவும் பொங்கக் காட்சி தருகிறார். |