இங்குள்ள பத்ராம்பிகை சிலை மரகதக்கல்லால் ஆனது.இத்தலவிநாயகர் சக்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
வீரபத்திரர் தனிக்கோயில் மூர்த்தியாக அருளும் இத்தலத்தில், சுவாமிக்கு நேரே கொடிமரம் இருக்கிறது. முற்காலத்தில் இவருக்கு தனியே
பிரம்மோற்ஸவம் நடந்துள்ளது. காலப்போக்கில் கோயில் சிதிலமடையவே திருவிழாவும் நின்றுவிட்டது. தற்போது சித்ராபவுர்ணமியன்று ஒருநாள் விழா
மட்டும் நடக்கிறது. சிவன் கோயில்களில் விசேஷ நாட்களின்போது, சுவாமி தனது வாகனமான நந்தியின் மீது சோமாஸ்கந்த வடிவில் எழுந்தருளுவார்.
ஆனால் இத்தலத்தில் சித்ரா பவுர்ணமியின்று காலையில் வீரபத்திரர், அம்பாள் மற்றும் விநாயகருடன் நந்தி வாகனத்தில் எழுந்தருளி, கோயிலில்
இருந்து சற்று தூரத்திலுள்ள குற்றலை நதிக்கு செல்கிறார். விநாயகருக்கு முக்கியத்துவம் தரும்விதமாக, அவர் சுவாமியுடன் எழுந்தருள்வதாக
சொல்கிறார்கள்.
இங்குள்ள பத்ராம்பிகை சிலை மரகதக்கல்லால் ஆனது. இத்தலவிநாயகர் சக்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். வீரபத்திரர் தனிக்கோயில் மூர்த்தியாக அருளும் இத்தலத்தில், சுவாமிக்கு நேரே கொடிமரம் இருக்கிறது. முற்காலத்தில் இவருக்கு தனியே பிரம்மோற்ஸவம் நடந்துள்ளது. காலப்போக்கில் கோயில் சிதிலமடையவே திருவிழாவும் நின்றுவிட்டது. தற்போது சித்ராபவுர்ணமியன்று ஒருநாள் விழா மட்டும் நடக்கிறது.
சிவன் கோயில்களில் விசேஷ நாட்களின்போது, சுவாமி தனது வாகனமான நந்தியின் மீது சோமாஸ்கந்த வடிவில் எழுந்தருளுவார். ஆனால் இத்தலத்தில் சித்ரா பவுர்ணமியின்று காலையில் வீரபத்திரர், அம்பாள் மற்றும் விநாயகருடன் நந்தி வாகனத்தில் எழுந்தருளி, கோயிலில் இருந்து சற்று தூரத்திலுள்ள குற்றலை நதிக்கு செல்கிறார். விநாயகருக்கு முக்கியத்துவம் தரும்விதமாக, அவர் சுவாமியுடன் எழுந்தருள்வதாக சொல்கிறார்கள். |