|
||||||||
நான்காம் திருமுறை-80 |
||||||||
4.080.கோயில் - திருவிருத்தம்
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர்.
தேவியார் - சிவகாமியம்மை.
770 பாளை யுடைக்கமு கோங்கிப்பன் மாடம்
நெருங்கியெங்கும்
வாளை யுடைப்புனல் வந்தெறி வாழ்வயற்
றில்லைதன்னுள்
ஆள வுடைக்கழற் சிற்றம் பலத்தரன்
ஆடல்கண்டாற்
பீளை யுடைக்கண்க ளாற்பின்னைப் பேய்த்தொண்டர்
காண்பதென்னே.
4.080.1
பாளையை உடைய பாக்கு மரங்கள் உயர்ந்து வளர்ந்தமாடவீடுகள் நெருக்கமாக அமைய, வாளை மீன் குதிக்கும் தண்ணீர் அலை எறியும் வயல்களையுடைய தில்லை நகரிலே, நம்மை ஆட்கொள்ளுதலுக்காக அமைந்த திருவடிகளை உடைய சிற்றம் பலத்துப் பெருமானுடைய ஆடலைக் காணும் வாய்ப்பினைப் பெற்றால், அதன்பின் பீளை ஒழுகும் கண்களால், பிடித்ததனை விடாத பேய் போன்றஇயல்பை உடைய அடியார்கள், தம் கண்களால் காணத்தக்க மேம்பட்ட பொருள் யாதுள்ளதோ!
771 பொருவிடை யொன்றுடைப் புண்ணிய மூர்த்தி
புலியதளன்
உருவுடை யம்மலை மங்கை மணாள
னுலகுக்கெல்லாம்
திருவுடை யந்தணர் வாழ்கின்ற தில்லைச்சிற்
றம்பலவன்
றிருவடி யைக்கண்ட கண்கொண்டு மற்றினிக்
காண்பதென்னே.
4.080.2
போரிடும் காளை ஒன்றினையுடைய புண்ணிய வடிவினனாய், புலித்தோல் ஆடையனாய், அழகிய பார்வதி மணாளனாய், அந்தணர்கள் வாழ்கின்ற பதியாய் உலகத்தவருக்கெல்லாம் பேரின்பச் செல்வத்தை நல்கும் தில்லையிலுள்ள சிற்றம்பலத்துக் கூத்து நிகழ்த்தும் பெருமானுடைய திருவடிகளைக் கண்ட கண்களால், காண்பதற்குப் பிறிதொருபொருள் யாதுள்ளதோ!
772 தொடுத்த மலரொடு தூபமுஞ் சாந்துங்கொண்
டெப்பொழுதும்
அடுத்து வணங்கு மயனொடு மாலுக்குங்
காண்பரியான்
பொடிக்கொண் டணிந்துபொன் னாகிய தில்லைச்சிற்
றம்பலவன்
உடுத்த துகில்கண்ட கண்கொண்டு மற்றினிக்
காண்பதென்னே.
4.080.3
மாலையாகத் தொடுக்கப் பட்ட மலரொடு புகைக்கு உரியனவும் சந்தனமும் கைகளிற் கொண்டு, எப்பொழுதும் அணுகி வந்து வணங்கும் பிரமனுக்கும் திருமாலுக்கும் தம் முயற்சியினாற் காண்பதற்கு அரியவனாய்த் திகழ்பவனாகித் திருநீறணிந்து பொன் மயமான தில்லைச் சிற்றம்பலத்து ஆடும் பெருமான் அணிந்த புலித்தோலாடையைக் கண்ட கண் கொண்டு காண்பதற்குப் பிறிது பொருள் யாதுள்ளதோ!
773 வைச்ச பொருணமக் காகுமென் றெண்ணி
நமச்சிவாய
அச்ச மொழிந்தே னணிதில்லை யம்பலத்
தாடுகின்ற
பிச்சன் பிறப்பிலி பேர்நந்தி யுந்தியின்
மேலசைத்த
கச்சி னழகுகண் டாற்பின்னைக் கண்கொண்டு
காண்பதென்னே.
4.080.4
நமக்குச் சேமவைப்பாக இருக்கின்ற பொருள் திருவைந்தெழுத்தே என்று விருப்புற்று நினைத்துப் பேரின்ப வாழ்வு குறைவற நடக்கும் என்று துணிந்து அச்சம் ஒழிந்தேன். அழகான தில்லை நகரிலே உள்ள சிற்றம்பலத்தில் கூத்து நிகழ்த்துகின்றவனாய், அடியவர் திறத்துப் பித்தனாய், பிறப்பு அற்றவனாய் நந்தி என்ற பெயரினனாய் உள்ள பெருமானுடைய கொப்பூழின் மேல் இடுப்பைச் சுற்றிக்கட்டப்பட்ட உதரபந்தமாகிய கச்சின் அழகைக் காணப் பெற்றால் பின்னைக் காணவேண்டிய உயர்ந்த பொருள் யாதுள்ளதோ!
774 செய்ஞ்ஞின்ற நீல மலர்கின்ற தில்லைச்சிற்
றம்பலவன்
மைஞ்ஞின்ற வொண்கண் மலைமகள் கண்டு
மகிழ்ந்துநிற்க
நெய்ஞ்ஞின் றெரியும் விளக்கொத்த நீல
மணிமிடற்றான்
கைஞ்ஞின்ற வாடல்கண் டாற்பின்னைக் கண்கொண்டு
காண்பதென்னே.
4.080.5
வயலிலே காண்கின்ற பூங்கொடியில் நீலோற்பல மலர்கள் மலரும் வளமுள்ள தில்லைப்பதியில் உறையுஞ் சிற்றம்பலவனாய்நெய்யில் நின்றெரியும் தீபச்சுடர் போன்று ஒளிவிடும் நீலமணி மிடற்றனுமாய பெருமான், கருமை நிலைபெற்ற ஒளிமிக்க கண்களை உடைய சிவகாமியம்மையார் கண்டு மகிழ்ந்து நிற்க வைத்துச் செய்வதும் என்று வந்தாய் எனும் திருக்குறிப்புப் புலப்பட நின்று இயற்றுவதுமான ஆடலைக் கண்டபின் காணத்தகும் பொருள் வேறு யாதுளதோ!
775 ஊனத்தை நீக்கி யுலகறி யவென்னை
யாட்கொண்டவன்
றேனொத் தெனக்கினி யான்றில்லைச் சிற்றம்
பலவனெங்கோன்
வானத் தவருய்ய வன்னஞ்சை யுண்டகண்
டத்திலங்கும்
ஏனத் தெயிறுகண் டாற்பின்னைக் கண்கொண்டு
காண்பதென்னே.
4.080.6
அவைதிக சமயத்தைச் சார்ந்தவனாயினேன் என்ற என் குறையைப் போக்கி, அடியேனைச் சூலைநோய் அருளி ஆட்கொண்டு, அடியேனுக்குத் தேனை ஒத்து இனியனாய்த் தில்லைச் சிற்றம்பலவனாய் உள்ள எம் தலைவன், தேவர்கள் உயிர் பிழைக்கு மாறு கொடிய விடத்தை உண்டு இருத்திய கழுத்தில் அணிந்திருக்கும் மகாவராகத்தின் கொம்பின் வனப்பைக் கண்டால் பின், காண்பதற்கு மேம்பட்ட பொருள் பிறிது யாதுள்ளதோ!
776 தெரித்த கணையாற் றிரிபுர மூன்றுஞ்செந்
தீயின்மூழ்க
எரித்த விறைவ னிமையவர் கோமா
னிணையடிகள்
தரித்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச்சிற்
றம்பலவன்
சிரித்த முகங்கண்ட கண்கொண்டு மற்றினிக்
காண்பதென்னே.
4.080.7
ஆராய்ந்து எடுத்த அம்பாலே வானத்தில் உலவிய மதில்கள் மூன்றும் நெருப்பில் மூழ்குமாறு தீக்கு இரையாக்கிய தலைவனாய், தேவர்கள் மன்னனாய் உள்ள சிவபெருமானுடைய திருவடிகளைத் தம்முள் கொண்டு தாங்கும் மனத்தை உடைய அடியவர்கள் வாழ்கின்ற தில்லை நகரிலே சிற்றம்பலத்தில் கூத்து நிகழ்த்தும் அப்பெருமானுடைய சிரித்த முகத்தைக் கண்ட கண்களால் இனிக் காண்பதற்கு மேம்பட்ட பொருள் பிறிது யாதுள்ளதோ!
777 சுற்று மமரர் சுரபதி நின்றிருப்
பாதமல்லாற்
பற்றொன் றிலோமென் றழைப்பப் பரவையுள்
நஞ்சையுண்டான்
செற்றங் கநங்கனைத் தீவிழித் தான்றில்லை
யம்பலவன்
நெற்றியிற் கண்கண்ட கண்கொண்டு மற்றினிக்
காண்பதென்னே.
4.080.8
சுற்றிச் சூழும் தேவர்களும், இந்திரனும் 'உன் திருவடிகளைத் தவிர எங்களுக்கு வேறு பற்றுக்கோடு இல்லை' என்று கூறி ஆலகால விடத்தை அடக்குமாறு சிவபெருமானை வேண்டியபோது அவர்கள் வேண்டுகோளுக்கு இரங்கிக் கடலில் தோன்றிய விடத்தை உண்டவனாகி தில்லை நகரில் சிற்றம்பலத்தில் கூத்து நிகழ்த்தும் பெருமான், மன்மதனை வெகுண்டு சாம்பலாகுமாறு விழித்த நெற்றிக்கண்ணைக் கண்ட கண்ணால் இனிக் காண்பதற்கு மேம்பட்ட பொருள் பிறிது யாது உளதோ!
778 சித்தத் தெழுந்த செழுங்கம லத்தன்ன
சேவடிகள்
வைத்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச்சிற்
றம்பலவன்
முத்தும் வயிரமு மாணிக்கம் தன்னுள்
விளங்கியதூ
மத்த மலர்கண்ட கண்கொண்டு மற்றினிக்
காண்பதென்னே.
4.080.9
உள்ளத்திலே முளைத்துச் செழித்து மலர்ந்த செழுந்தாமரை மலர்களை ஒத்த திருவடிகளை நிலையாக மனத்தில் இறுத்திய சான்றோர்கள் வாழும் தில்லையம்பதியில் உள்ள சிற்றம்பலத்தானுடைய முத்தும் வயிரமும் மாணிக்கமும் தூய மலர்களும் அணிந்த திருச்சென்னியின் மலரழகைக் கண்ட கண்களால் இனி மேம்பட்டதாகக் காண்பதற்குரிய பொருள் பிறிது யாதுள்ளதோ!
779 தருக்கு மிகுத்துத்தன் றோள்வலி யுன்னித்
தடவரையை
வரைக்கைக ளாலெடுத் தார்ப்ப மலைமகள்
கோன்சிரித்து
அரக்கன் மணிமுடி பத்து மணிதில்லை
யம்பலவன்
நெருக்கி மிதித்த விரல்கண்ட கண்கொண்டு
காண்பதென்னே.
4.080.10
இராவணன் செருக்கு மிகுந்துத் தன் தோள் வலிமையை மிகுதியாகக் கருதிப் பெரிய கயிலைமலையைத் தன் மலைபோன்ற கைகளால் எடுத்து ஆரவாரம் செய்ய அதனைக் கண்டு பார்வதி கொழுநனாகிய தில்லைச் சிற்றம்பலவன் சிரித்து இராவணனுடைய கிரீடங்கள் அணிந்த தலைகள் பத்தினையும் நெருக்கி மிதித்த திருக்கால் விரலைக் கண்ட கண்களால் காண்பதற்கு மேம்பட்ட பொருள் பிறிது யாதுள்ளதோ!
திருச்சிற்றம்பலம்
4.080.கோயில் - திருவிருத்தம் திருவிருத்தம் திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர். தேவியார் - சிவகாமியம்மை.
770 பாளை யுடைக்கமு கோங்கிப்பன் மாடம் நெருங்கியெங்கும் வாளை யுடைப்புனல் வந்தெறி வாழ்வயற் றில்லைதன்னுள் ஆள வுடைக்கழற் சிற்றம் பலத்தரன் ஆடல்கண்டாற் பீளை யுடைக்கண்க ளாற்பின்னைப் பேய்த்தொண்டர் காண்பதென்னே. 4.080.1
பாளையை உடைய பாக்கு மரங்கள் உயர்ந்து வளர்ந்தமாடவீடுகள் நெருக்கமாக அமைய, வாளை மீன் குதிக்கும் தண்ணீர் அலை எறியும் வயல்களையுடைய தில்லை நகரிலே, நம்மை ஆட்கொள்ளுதலுக்காக அமைந்த திருவடிகளை உடைய சிற்றம் பலத்துப் பெருமானுடைய ஆடலைக் காணும் வாய்ப்பினைப் பெற்றால், அதன்பின் பீளை ஒழுகும் கண்களால், பிடித்ததனை விடாத பேய் போன்றஇயல்பை உடைய அடியார்கள், தம் கண்களால் காணத்தக்க மேம்பட்ட பொருள் யாதுள்ளதோ!
771 பொருவிடை யொன்றுடைப் புண்ணிய மூர்த்தி புலியதளன் உருவுடை யம்மலை மங்கை மணாள னுலகுக்கெல்லாம் திருவுடை யந்தணர் வாழ்கின்ற தில்லைச்சிற் றம்பலவன் றிருவடி யைக்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே. 4.080.2
போரிடும் காளை ஒன்றினையுடைய புண்ணிய வடிவினனாய், புலித்தோல் ஆடையனாய், அழகிய பார்வதி மணாளனாய், அந்தணர்கள் வாழ்கின்ற பதியாய் உலகத்தவருக்கெல்லாம் பேரின்பச் செல்வத்தை நல்கும் தில்லையிலுள்ள சிற்றம்பலத்துக் கூத்து நிகழ்த்தும் பெருமானுடைய திருவடிகளைக் கண்ட கண்களால், காண்பதற்குப் பிறிதொருபொருள் யாதுள்ளதோ!
772 தொடுத்த மலரொடு தூபமுஞ் சாந்துங்கொண் டெப்பொழுதும் அடுத்து வணங்கு மயனொடு மாலுக்குங் காண்பரியான் பொடிக்கொண் டணிந்துபொன் னாகிய தில்லைச்சிற் றம்பலவன் உடுத்த துகில்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே. 4.080.3
மாலையாகத் தொடுக்கப் பட்ட மலரொடு புகைக்கு உரியனவும் சந்தனமும் கைகளிற் கொண்டு, எப்பொழுதும் அணுகி வந்து வணங்கும் பிரமனுக்கும் திருமாலுக்கும் தம் முயற்சியினாற் காண்பதற்கு அரியவனாய்த் திகழ்பவனாகித் திருநீறணிந்து பொன் மயமான தில்லைச் சிற்றம்பலத்து ஆடும் பெருமான் அணிந்த புலித்தோலாடையைக் கண்ட கண் கொண்டு காண்பதற்குப் பிறிது பொருள் யாதுள்ளதோ!
773 வைச்ச பொருணமக் காகுமென் றெண்ணி நமச்சிவாய அச்ச மொழிந்தே னணிதில்லை யம்பலத் தாடுகின்ற பிச்சன் பிறப்பிலி பேர்நந்தி யுந்தியின் மேலசைத்த கச்சி னழகுகண் டாற்பின்னைக் கண்கொண்டு காண்பதென்னே. 4.080.4
நமக்குச் சேமவைப்பாக இருக்கின்ற பொருள் திருவைந்தெழுத்தே என்று விருப்புற்று நினைத்துப் பேரின்ப வாழ்வு குறைவற நடக்கும் என்று துணிந்து அச்சம் ஒழிந்தேன். அழகான தில்லை நகரிலே உள்ள சிற்றம்பலத்தில் கூத்து நிகழ்த்துகின்றவனாய், அடியவர் திறத்துப் பித்தனாய், பிறப்பு அற்றவனாய் நந்தி என்ற பெயரினனாய் உள்ள பெருமானுடைய கொப்பூழின் மேல் இடுப்பைச் சுற்றிக்கட்டப்பட்ட உதரபந்தமாகிய கச்சின் அழகைக் காணப் பெற்றால் பின்னைக் காணவேண்டிய உயர்ந்த பொருள் யாதுள்ளதோ!
774 செய்ஞ்ஞின்ற நீல மலர்கின்ற தில்லைச்சிற் றம்பலவன் மைஞ்ஞின்ற வொண்கண் மலைமகள் கண்டு மகிழ்ந்துநிற்க நெய்ஞ்ஞின் றெரியும் விளக்கொத்த நீல மணிமிடற்றான் கைஞ்ஞின்ற வாடல்கண் டாற்பின்னைக் கண்கொண்டு காண்பதென்னே. 4.080.5
வயலிலே காண்கின்ற பூங்கொடியில் நீலோற்பல மலர்கள் மலரும் வளமுள்ள தில்லைப்பதியில் உறையுஞ் சிற்றம்பலவனாய்நெய்யில் நின்றெரியும் தீபச்சுடர் போன்று ஒளிவிடும் நீலமணி மிடற்றனுமாய பெருமான், கருமை நிலைபெற்ற ஒளிமிக்க கண்களை உடைய சிவகாமியம்மையார் கண்டு மகிழ்ந்து நிற்க வைத்துச் செய்வதும் என்று வந்தாய் எனும் திருக்குறிப்புப் புலப்பட நின்று இயற்றுவதுமான ஆடலைக் கண்டபின் காணத்தகும் பொருள் வேறு யாதுளதோ!
775 ஊனத்தை நீக்கி யுலகறி யவென்னை யாட்கொண்டவன் றேனொத் தெனக்கினி யான்றில்லைச் சிற்றம் பலவனெங்கோன் வானத் தவருய்ய வன்னஞ்சை யுண்டகண் டத்திலங்கும் ஏனத் தெயிறுகண் டாற்பின்னைக் கண்கொண்டு காண்பதென்னே. 4.080.6
அவைதிக சமயத்தைச் சார்ந்தவனாயினேன் என்ற என் குறையைப் போக்கி, அடியேனைச் சூலைநோய் அருளி ஆட்கொண்டு, அடியேனுக்குத் தேனை ஒத்து இனியனாய்த் தில்லைச் சிற்றம்பலவனாய் உள்ள எம் தலைவன், தேவர்கள் உயிர் பிழைக்கு மாறு கொடிய விடத்தை உண்டு இருத்திய கழுத்தில் அணிந்திருக்கும் மகாவராகத்தின் கொம்பின் வனப்பைக் கண்டால் பின், காண்பதற்கு மேம்பட்ட பொருள் பிறிது யாதுள்ளதோ!
776 தெரித்த கணையாற் றிரிபுர மூன்றுஞ்செந் தீயின்மூழ்க எரித்த விறைவ னிமையவர் கோமா னிணையடிகள் தரித்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச்சிற் றம்பலவன் சிரித்த முகங்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே. 4.080.7
ஆராய்ந்து எடுத்த அம்பாலே வானத்தில் உலவிய மதில்கள் மூன்றும் நெருப்பில் மூழ்குமாறு தீக்கு இரையாக்கிய தலைவனாய், தேவர்கள் மன்னனாய் உள்ள சிவபெருமானுடைய திருவடிகளைத் தம்முள் கொண்டு தாங்கும் மனத்தை உடைய அடியவர்கள் வாழ்கின்ற தில்லை நகரிலே சிற்றம்பலத்தில் கூத்து நிகழ்த்தும் அப்பெருமானுடைய சிரித்த முகத்தைக் கண்ட கண்களால் இனிக் காண்பதற்கு மேம்பட்ட பொருள் பிறிது யாதுள்ளதோ!
777 சுற்று மமரர் சுரபதி நின்றிருப் பாதமல்லாற் பற்றொன் றிலோமென் றழைப்பப் பரவையுள் நஞ்சையுண்டான் செற்றங் கநங்கனைத் தீவிழித் தான்றில்லை யம்பலவன் நெற்றியிற் கண்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே. 4.080.8
சுற்றிச் சூழும் தேவர்களும், இந்திரனும் 'உன் திருவடிகளைத் தவிர எங்களுக்கு வேறு பற்றுக்கோடு இல்லை' என்று கூறி ஆலகால விடத்தை அடக்குமாறு சிவபெருமானை வேண்டியபோது அவர்கள் வேண்டுகோளுக்கு இரங்கிக் கடலில் தோன்றிய விடத்தை உண்டவனாகி தில்லை நகரில் சிற்றம்பலத்தில் கூத்து நிகழ்த்தும் பெருமான், மன்மதனை வெகுண்டு சாம்பலாகுமாறு விழித்த நெற்றிக்கண்ணைக் கண்ட கண்ணால் இனிக் காண்பதற்கு மேம்பட்ட பொருள் பிறிது யாது உளதோ!
778 சித்தத் தெழுந்த செழுங்கம லத்தன்ன சேவடிகள் வைத்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச்சிற் றம்பலவன் முத்தும் வயிரமு மாணிக்கம் தன்னுள் விளங்கியதூ மத்த மலர்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே. 4.080.9
உள்ளத்திலே முளைத்துச் செழித்து மலர்ந்த செழுந்தாமரை மலர்களை ஒத்த திருவடிகளை நிலையாக மனத்தில் இறுத்திய சான்றோர்கள் வாழும் தில்லையம்பதியில் உள்ள சிற்றம்பலத்தானுடைய முத்தும் வயிரமும் மாணிக்கமும் தூய மலர்களும் அணிந்த திருச்சென்னியின் மலரழகைக் கண்ட கண்களால் இனி மேம்பட்டதாகக் காண்பதற்குரிய பொருள் பிறிது யாதுள்ளதோ!
779 தருக்கு மிகுத்துத்தன் றோள்வலி யுன்னித் தடவரையை வரைக்கைக ளாலெடுத் தார்ப்ப மலைமகள் கோன்சிரித்து அரக்கன் மணிமுடி பத்து மணிதில்லை யம்பலவன் நெருக்கி மிதித்த விரல்கண்ட கண்கொண்டு காண்பதென்னே. 4.080.10
இராவணன் செருக்கு மிகுந்துத் தன் தோள் வலிமையை மிகுதியாகக் கருதிப் பெரிய கயிலைமலையைத் தன் மலைபோன்ற கைகளால் எடுத்து ஆரவாரம் செய்ய அதனைக் கண்டு பார்வதி கொழுநனாகிய தில்லைச் சிற்றம்பலவன் சிரித்து இராவணனுடைய கிரீடங்கள் அணிந்த தலைகள் பத்தினையும் நெருக்கி மிதித்த திருக்கால் விரலைக் கண்ட கண்களால் காண்பதற்கு மேம்பட்ட பொருள் பிறிது யாதுள்ளதோ!
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 19 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|