இங்கு ராமரால் கடலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவபாஷாண நவக்கிரகம் சிறப்பானது.புராணகாலத்தில் மகிஷாசுரன் என்னும் அசுரன் நான் பெற்ற வரத்தைக்
கொண்டு தேவலோகத்தில் உள்ள தேவர்களை துன்புறுத்தினான். தேவர்களோ பயந்து என்ன செய்வது என்று தெரியாமல், இறுதியாக பராசக்தி தேவியிடம்
தங்களை காத்து அருளும்படி முறையிடுகின்றனர். உடனே பராசக்தி தேவியும் அரக்கனுடன் யுத்தம் செய்ய வருகிறாள். இது கண்டு அரக்கன் பயந்து ஒடி வந்து
தேவிபட்டினத்திலுள்ள சக்ர தீர்த்தத்தில் மறைந்து கொள்கிறான். சக்கரதீர்த்தத்தினை பராசக்தி தன்சக்தியால் வற்றச் செய்து மகிஷாசுரனை சம்ஹாரம் செய்து
அவனுக்கு சாப விமோசனம் தருகிறாள். இது கண்டு உளமகிழ்ந்து தேவர்கள் அமிர்தத்தைப் பொழிய, தர்மதேவதையும் அருள் வழங்கினாள். அன்று முதல்
தேவிபுரம் தேவிபட்டினமாக வழங்கிவருகிறது.படைக்கும் கடவுளான பிரம்மாவை நோக்கி கடுந்தவம் புரிந்து அத்தவத்தின் பலனாக தேவ அசுரர்களால் தனக்கு
மரணம் ஏற்படக்கூடாது என்ற வரத்தினை பெறுகிறான் ராவணன். ஆனால் ராவணன் தனக்கு மனிதனால் மரணம் ஏற்படக் கூடாது என்று கேட்கவில்லை, இதுவே
ராம அவதாரம் தோன்றக் காரணமாக அமைந்தது.
இங்கு ராமரால் கடலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவபாஷாண நவக்கிரகம் சிறப்பானது. புராணகாலத்தில் மகிஷாசுரன் என்னும் அசுரன் நான் பெற்ற வரத்தைக் கொண்டு தேவலோகத்தில் உள்ள தேவர்களை துன்புறுத்தினான். தேவர்களோ பயந்து என்ன செய்வது என்று தெரியாமல், இறுதியாக பராசக்தி தேவியிடம் தங்களை காத்து அருளும்படி முறையிடுகின்றனர். உடனே பராசக்தி தேவியும் அரக்கனுடன் யுத்தம் செய்ய வருகிறாள்.
இது கண்டு அரக்கன் பயந்து ஒடி வந்து தேவிபட்டினத்திலுள்ள சக்ர தீர்த்தத்தில் மறைந்து கொள்கிறான். சக்கரதீர்த்தத்தினை பராசக்தி தன்சக்தியால் வற்றச் செய்து மகிஷாசுரனை சம்ஹாரம் செய்து அவனுக்கு சாப விமோசனம் தருகிறாள். இது கண்டு உளமகிழ்ந்து தேவர்கள் அமிர்தத்தைப் பொழிய, தர்மதேவதையும் அருள் வழங்கினாள். அன்று முதல் தேவிபுரம் தேவிபட்டினமாக வழங்கிவருகிறது.
படைக்கும் கடவுளான பிரம்மாவை நோக்கி கடுந்தவம் புரிந்து அத்தவத்தின் பலனாக தேவ அசுரர்களால் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்ற வரத்தினை பெறுகிறான் ராவணன். ஆனால் ராவணன் தனக்கு மனிதனால் மரணம் ஏற்படக் கூடாது என்று கேட்கவில்லை, இதுவே ராம அவதாரம் தோன்றக் காரணமாக அமைந்தது. |