லத்திகா என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் டாக்டர் சீனிவாசன்.
படம் பத்து நாட்கள் கூட ஓடவில்லை என்றாலும் பணத்தை வாரி இறைத்து 300 நாட்கள் வரை ஒட்டினர். இதை அடுத்து தனக்குத்தானே பவர்ஸ்டார் என்கிற பட்டத்தை சூட்டிக்கொண்டு அதை பிரபலப்படுத்தவே லட்சம் லட்சமாக செலவு செய்தார். பிறகு சந்தானம், சேதுவுடன் இணைந்து நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் அவருக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
ஆனால், பின்னர் அவர் மோசடி வழக்குகளில் சிக்கி சிறை கம்பிகளை என்ன சென்றார். இதனால், வேகமாக வளர வேண்டிய பவர்ஸ்டாரின் சினிமா பயணம் தடைபட்டது. இருப்பினும் தற்போது சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். அதோடு, ஷங்கர் இயக்கியுள்ள ஐ படத்தில் ஒரு ரோபோ வேடத்தில் காமெடியனாக நடித்திருக்கிறாராம் பவர்ஸ்டார்.
ஐ படம் தொடங்கப்பட்டபோதே பவர்ஸ்டார் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாம். அதனால் இப்போது இந்த படத்தை ரொம்பவே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறாராம் பவர் ஸ்டார். ஐ படம் வரும் பொங்கலுக்கு வருவதை ஒட்டி, தன்னை புதிய படங்களுக்காக புக் பண்ண வரும் தயாரிப்பாளர்களிடம், ஐ படம் வந்தா எனது மார்க்கெட் எகிறி விடும். அதன்பிறகு ஒரு நாள் கால்சீட்டுக்கே நான் ஒரு கோடி கேட்பேன் என்றும் பில்டப் கொடுத்து வருகிறாராம் நம்ம பவர்.
|