|
|||||
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வங்கி கணக்கு !! |
|||||
சிறு, குறு வர்த்தகர்கள், குறைந்த வருவாய் பெறும் குடும்பத்தினருக்கான நிதி சேவைகள் குறித்து ஆராய, ரிசர்வ் வங்கி, சில மாதங்களுக்கு முன்பு, நச்சிகேத் மோர் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. இந்த குழு பல்வேறு துறைகளை ஆராய்ந்து தனது பரிந்துரைகளை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பியுள்ளது.
ரிசர்வ் வங்கிக்கு அனுப்பியுள்ள பரிந்துரைகளின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு,
வரும் 2016ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்குள், நாட்டில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், பாதுகாப்பான மின்னணு வங்கி கணக்கு வழங்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த கணக்கில், பணம் செலுத்துவது, பணம் எடுப்பது உள்ளிட்ட முழு வங்கி சேவையும் இருக்க வேண்டும்.
இந்த வங்கி சேவை குறைந்த தூரத்தில் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும்.
இந்த வங்கி கணக்கை துவங்குவதற்கு, ஆதார் அட்டையை பயன்படுத்தலாம்.
விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் மற்றும் வட்டி போன்றவற்றை தள்ளுபடி செய்வதை கைவிட்டு, அதற்கு பதிலாக, இந்த பலன்கள் விவசாயிகளுக்கு நேரடியாக கிடைக்கும் வகையில் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். |
|||||
by Swathi on 08 Jan 2014 0 Comments | |||||
Tags: வங்கி கணக்கு 2016 ரிசர்வ் வங்கி RBI panel Bank Accounts | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|