LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    உலகத் தமிழ் மாநாடுகள் Print Friendly and PDF
- முதல் உலகத் தமிழ் மாநாடு

இதுவரை நடத்தப்பட்ட மாநாடுகள்

// உலகத் தமிழாராய்ச்சி மன்றம் என்று அமைப்பின் பெயர் இருந்தாலும், இதுவரை நடத்தப்பட்ட மாநாடுகள் யாவும் "உலகத் தமிழ் மாநாடு" என்ற பெயரில் மட்டுமே நடத்தப்பட்டது. மாநாட்டு மலர்களும் "உலகத் தமிழ் மாநாட்டு மலர்" என்றுதான் வெளியிடப்பட்டன. //
 
International Association of Tamil Research (IATR) என்பதன் தமிழ் - உலகத் தமிழாராய்ச்சி மன்றம். இவ்வமைப்பானது ஈழத்தைச் சேர்ந்த தனிநாயக அடிகளாரினால் 1952-1966 இடைப்பட்ட காலத்தில் ஆங்கில மொழியில் நடாத்தப்பட்ட Tamil Culture ஆய்விதழின் தொடர்ச்சி ஆகும். Tamil Culture ஆய்விதழின் அடிநாதமென்பது தமிழ்மொழிக்குரிய சிறப்பான விடயங்களை ஆங்கிலத்தில் உலகிற்குக் கொண்டுசெல்லுதலாகும். 1950களில் ஆங்கிலமொழியில் எழுதப்பட்ட இந்திய வரலாறுகளில் தமிழ் மொழி, இனம் தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்காத ஒரு இருட்டடிப்பு நிகழ்ந்துகொண்டிருந்தவேளையில் தமிழ் தொடர்பான உண்மைகளை உலகிற்கு உரத்துச் சொல்லவேண்டிய தேவையின்பொருட்டு Tamil Culture ஆங்கிலத்தில் ஆராய்ச்சிபூர்வமான கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்தது. இவ்விதழில் தங்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டு வந்த உலகளாவிய ஆராய்ச்சியாளர்களையும் தமிழைப் பல்கலைக்கழங்களில் கற்பித்துக்கொண்டிருந்த ஆசிரியர்களையும் ஒரே குடையின்கீழ் ஒருங்கிணைத்து நேரடியான கருத்துப் பரிமாற்றம் நிகழ்வதற்குரிய களமாக உலகத் தமிழாராய்ச்சி மன்றம் செயலாற்றத் தொடங்கியது. 1966 ஆண்டில் முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மலேசியாவில் நடைபெற்றபோது ''தமிழ்த்துறைகளின் உலக ஆராய்ச்சிக் கருத்தரங்கு'' எனுந் தலைப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது, இது IATR இன் உத்தியோகபூர்வ வெளியீடு.
 
மாநாட்டில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் ''Proceedings of the First International Conference Seminar of Tamil Studies'' என்ற தலைப்பில் இரு தொகுதிகளாக வெளியிடப்பட்டன. 1966 மாநாட்டின்போது IATR அமைப்பானது வெளியிட்டவை அனைத்துமே ஆங்கிலத்திற்றான். 6 ஆராய்ச்சிக் கட்டுரைகள் தமிழில் வாசிக்கப்பட்டன, எனினும் தமிழில் ஆய்வுத் தொகுதி எதுவும் தனியாக வெளியிடப்படவில்லை. தனிநாயக அடிகளாரின் சிந்தனையே தமிழ் ஆராய்ச்சியினை(Tamil Studies) மையமாகக்கொண்டதுதான். முதலாவது மாநாட்டின்போது ஆராய்ச்சிப் பெறுமதிமிக்க ஒன்பது நூல்களும் வெளியிடப்பட்டிருந்தன. ஆனால் மாநாட்டு நினைவு மலர் என்று எதுவும் தமிழில் வெளியிடப்பட்டதான தகவல்கள் எதையும் நான் இன்னமும் பார்வையிடவில்லை.
 
1968 ஆண்டில் சென்னையில் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின்போதுதான் ''உலகத் தமிழ் மாநாடு - விழா மலர்'' வெளியிடப்படும் வழக்கம் தொடங்கப்பட்டது. ஆனால் இவ்விழா மலரினை IATR அமைப்பு வெளியிடுவதில்லை. மாறாக மாநாட்டினை நடாத்துவதற்கு பொருளுதவியும் அரவணைப்பும் தந்த அரசின் வெளியீடாகவே இது காணப்படுகிறது. இதற்கு ஆய்வுப் பெறுமதி இருப்பதில்லை. அரச பிரதானிகளினதும் ஆதரவாளர்களினதும் ஆக்கங்கள் பெரும்பாலும் இடம்பெறும், ஒருசில ஆய்வுக் கட்டுரைகளும்கூட இடம்பெற்றுள்ளன. இவ்விழா மலரானது பல நிறத்தில் சித்திரப் படங்களுடன் கூடியவாறு, வழுவழுப்பான தாளில் உயரிய தயாரிப்பான ஒன்றாகும். பெரும் எண்ணிக்கையில் அச்சிடப்பட்டு மாநாட்டிற்கு வருகிறவர்கள் அனைவருக்கும் கிடைக்கூடியவாறு இம்மலர் வழங்கப்படும். மாநாட்டினை நடத்தும் கட்சியின் புகழ்பரப்பும் ஒரு வெளியீடு. அதில் ஆராய்ச்சி இல்லையென்பதாலேயே அதன் தலைப்பிற்கூட ''ஆராய்ச்சி'' இடம்பெறுவதில்லை.
 
இவ்வாறான மலர்களையே கட்டுரையாளர் தே மொ ழி தந்துள்ளார். IATR அமைப்பு வெளியிடாத இம்மலர்களை IATR இற்கு உரித்துடையதாகக் காட்டுதல் ''வரலாற்றில் பொய்கள்'' பக்கங்களில் இடம்பெறவேண்டிய ஒன்றாகும்.
by Swathi   on 02 Mar 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழர்கள் கவனத்திற்கு ஒரு திறந்த கடிதம் : தேமொழி தமிழர்கள் கவனத்திற்கு ஒரு திறந்த கடிதம் : தேமொழி
10வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் வலைத்தமிழ் வைத்த பதாகை 10வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் வலைத்தமிழ் வைத்த பதாகை
இரண்டாவது உலகத்தமிழ் மாநாட்டில் தீவுத்திடலில் பேரறிஞர் அண்ணா  ஆற்றிய உரையின் சுருக்கம் இரண்டாவது உலகத்தமிழ் மாநாட்டில் தீவுத்திடலில் பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரையின் சுருக்கம்
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு - நோக்கவுரை உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு - நோக்கவுரை
IATR – 2ND INTERNATIONAL CONFERENCE OF TAMIL STUDIES CHENNAI, TAMILNADU, INDIA - JAN 1968 IATR – 2ND INTERNATIONAL CONFERENCE OF TAMIL STUDIES CHENNAI, TAMILNADU, INDIA - JAN 1968
IATR – 2ND INTERNATIONAL CONFERENCE OF TAMIL STUDIES CHENNAI, TAMILNADU, INDIA - JAN 1968 IATR – 2ND INTERNATIONAL CONFERENCE OF TAMIL STUDIES CHENNAI, TAMILNADU, INDIA - JAN 1968
உலகத்‌ தமிழ்‌ ஆராய்ச்சி மாநாடு - நோக்கவுரை! உலகத்‌ தமிழ்‌ ஆராய்ச்சி மாநாடு - நோக்கவுரை!
10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக் குறிப்புகள் மற்றும் அமர்வுகள் 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக் குறிப்புகள் மற்றும் அமர்வுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.