ஹொய்சாளேஸ்வரர், சாந்தளேஸ்வரர் என இரண்டு மூலவர் சன்னதிகள் உள்ளன.கோயில் வாசலில் விநாயகப்பெருமான் கம்பீரமாக வீற்றிருக்கிறார். மேலே
உள்ள இருகைகளில் பாச அங்குசம் உள்ளது. வலதுகரம் இஸ்லாமியப் படையெடுப்பில் (மாலிக்காபூர் படையெடுப்பு) உடைக்கப்பட்டு விட்டது. இடக்கரம்
மோதகத்தை தாங்குகிறது. துதிக்கையால் மோதகத்தைச் சுவைத்தபடி காட்சி தருகிறார். விநாயகரின் கிரீடமும், யாளியால் ஆன திருவாட்சியும் நுட்பமான
வேலைப்பாடு மிக்கவை. கால்கள் இரண்டையும் மடித்து அமர்ந்திருக்கிறார். கழுத்தில் அணிந்திருக்கும் தாழ்வடம் பாதத்திற்கும் கீழே தரையில் கிடக்கிறது.
வெயிலும் மழையும் பாராமல் வெட்டவெளியில் வெயிலுகந்த விநாயகராக காட்சியளிக்கிறார்.ஹோய்சாளேஸ்வரருக்கும், சாந்தளேஸ்வரருக்கும் நேராக நந்தி
மண்டபங்கள் உள்ளன. நந்தியும், மண்டபத் தூண்களும் கலைநயம் மிக்கவை. நந்தி மண்டபத்தைச் சுற்றி மரச்செப்பு கடசல் போல கல்லில் வடித்த கலைநயம்
மிக்க தூண்கள் உள்ளன.
ஹொய்சாளேஸ்வரர், சாந்தளேஸ்வரர் என இரண்டு மூலவர் சன்னதிகள் உள்ளன. கோயில் வாசலில் விநாயகப்பெருமான் கம்பீரமாக வீற்றிருக்கிறார். மேலே உள்ள இருகைகளில் பாச அங்குசம் உள்ளது. வலதுகரம் இஸ்லாமியப் படையெடுப்பில் உடைக்கப்பட்டு விட்டது. இடக்கரம் மோதகத்தை தாங்குகிறது. துதிக்கையால் மோதகத்தைச் சுவைத்தபடி காட்சி தருகிறார். விநாயகரின் கிரீடமும், யாளியால் ஆன திருவாட்சியும் நுட்பமான வேலைப்பாடு மிக்கவை. கால்கள் இரண்டையும் மடித்து அமர்ந்திருக்கிறார்.
கழுத்தில் அணிந்திருக்கும் தாழ்வடம் பாதத்திற்கும் கீழே தரையில் கிடக்கிறது. வெயிலும் மழையும் பாராமல் வெட்டவெளியில் வெயிலுகந்த விநாயகராக காட்சியளிக்கிறார். ஹோய்சாளேஸ்வரருக்கும், சாந்தளேஸ்வரருக்கும் நேராக நந்தி மண்டபங்கள் உள்ளன. நந்தியும், மண்டபத் தூண்களும் கலைநயம் மிக்கவை. நந்தி மண்டபத்தைச் சுற்றி மரச்செப்பு கடசல் போல கல்லில் வடித்த கலைநயம் மிக்க தூண்கள் உள்ளன. |