வருடத்தில் 12 நாள் மட்டும் அம்மன் தரிசனம்: இத்தலத்தில் உள்ள பார்வதி சன்னதி வருடத்தில் 12 நாள் மட்டும் திறக்கப்படுகிறது. இதற்கு ஒரு
புராணக்கதை கூறப்படுகிறது. ஆரம்பகாலத்தில் இங்கு பார்வதிதேவியே மகாதேவருக்கு நைவேத்தியம் செய்து வழிபாடு செய்து வந்தாள். எனவே
மடப்பள்ளி பகுதிக்கு யாரும் செல்லமாட்டார்கள். ஒரு நாள் கோயில் நிர்வாக நம்பூதிரிக்கு மடப்பள்ளி ரகசியம் தெரிந்து கொள்ள ஆவல். அங்கு சென்று
பார்த்தபோது, ஜகன்மாதாவான பார்வதிதேவி நைவேத்தியம் தயார் செய்வதை கண்டவுடன் பக்திபெருக்கால், ""அம்மா தாயே! ஜகன்மாதா'என கூவி
அழைத்தார். இதைக்கேட்டவுடன் பார்வதி கோபத்துடன்,""இனி நான் இங்கிருக்க மாட்டேன்,'என்றாள். வருந்திய நம்பூதிரி,""தாயே! என்னை மன்னித்து,
இங்கிருந்து எங்களை காத்தருள வேண்டும்,'என மன்றாடுகிறான். மனமிறங்கிய தேவி, ""சிவனுக்குரிய நாளான மார்கழி திருவாதிரையில் மாலை
வேளைக்கு பின் நான் சர்வ அலங்காரத்துடன் இங்கு அருள்பாலிப்பேன். அன்று முதல் 12 நாட்களுக்கு என்னை தரிசிக்கலாம்,'என கூறி மறைந்தாள்.
அதேபோல் இன்றும் அம்மன் சன்னதி வருடத்தில் 12 நாட்கள் மட்டும் திறக்கப்பட்டு திருவிழா கொண்டாடப்படுகிறது. 12 நாள் முடிந்தவுடன் நடை
அடைக்கப்படுகிறது.
வருடத்தில் 12 நாள் மட்டும் அம்மன் தரிசனம், இத்தலத்தில் உள்ள பார்வதி சன்னதி வருடத்தில் 12 நாள் மட்டும் திறக்கப்படுகிறது. இதற்கு ஒரு புராணக்கதை கூறப்படுகிறது. ஆரம்பகாலத்தில் இங்கு பார்வதிதேவியே மகாதேவருக்கு நைவேத்தியம் செய்து வழிபாடு செய்து வந்தாள். எனவே மடப்பள்ளி பகுதிக்கு யாரும் செல்லமாட்டார்கள். ஒரு நாள் கோயில் நிர்வாக நம்பூதிரிக்கு மடப்பள்ளி ரகசியம் தெரிந்து கொள்ள ஆவல்.
அங்கு சென்று பார்த்தபோது, ஜகன்மாதாவான பார்வதிதேவி நைவேத்தியம் தயார் செய்வதை கண்டவுடன் பக்திபெருக்கால், ""அம்மா தாயே! ஜகன்மாதா'என கூவி அழைத்தார். இதைக்கேட்டவுடன் பார்வதி கோபத்துடன்,""இனி நான் இங்கிருக்க மாட்டேன்,'என்றாள். வருந்திய நம்பூதிரி,""தாயே! என்னை மன்னித்து, இங்கிருந்து எங்களை காத்தருள வேண்டும்,'என மன்றாடுகிறான்.
மனமிறங்கிய தேவி, ""சிவனுக்குரிய நாளான மார்கழி திருவாதிரையில் மாலை வேளைக்கு பின் நான் சர்வ அலங்காரத்துடன் இங்கு அருள்பாலிப்பேன். அன்று முதல் 12 நாட்களுக்கு என்னை தரிசிக்கலாம்,'என கூறி மறைந்தாள். அதேபோல் இன்றும் அம்மன் சன்னதி வருடத்தில் 12 நாட்கள் மட்டும் திறக்கப்பட்டு திருவிழா கொண்டாடப்படுகிறது. 12 நாள் முடிந்தவுடன் நடை அடைக்கப்படுகிறது. |