தென் பிரகாரத்தில் உள்ள பாறையின் மேல் பெரியபாதங்கள், சிறிய பாதங்கள் உள்ளன. பெரிய பாதம் கிராத மூர்த்திக்கும் (சிவனின் ஒரு வடிவம்),
சிறிய பாதங்கள் உன்னி கிருஷ்ணனுக்கும் உரியவை. இந்தப் பாதங்கள் இருப்பதால் தான், இப்பகுதியில் விவசாயமும், தொழிலும் செழிப்பாக
இருப்பதாக மக்கள் நம்புகின்றனர்.இங்குள்ள சிவனின் உக்கிரத்தை குறைக்க, மூலவர் சந்நிதி எதிரில், நவநீதகிருஷ்ணனை பிரதிஷ்டை செய்து உள்ளனர்.
இவர் சங்கு, சக்கரம், வெண்ணெய் வைத்துள்ளார். இடக்கையை இடுப்பில் ஊன்றியுள்ளார். மூலவர் மகாதேவரின் மேல், தாரா பாத்திரம் கட்டப்பட்டு
ஜலதாரை செய்யப்படுகிறது. ஒரு பாத்திரத்தில் புனிதநீர் நிறைத்து, அதன் கீழுள்ள சிறிய துவாரம் வழியாக, சொட்டு சொட்டாக லிங்கத்தின் மீது விழ
வைக்கும் வழிபாடே ஜலதாரை. சிவராத்திரி உள்ளிட்ட விசேஷ நாட்களில் புனிதநீருக்கு பதிலாக நெய்விட்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த
வழிபாட்டை, பக்தர்கள் உபயமாகச் செய்தால் நோய் நீங்கும். சுவாமிக்கு வஸ்திரம் சாத்தி பூஜிப்பவர்களுக்கு ஆயுள், ஆரோக்கியம், செல்வம், குழந்தை
பாக்கியம் கிடைக்கும். எதிரிகள் செயலிழந்து போவார்கள் என்பது நம்பிக்கை.
தென் பிரகாரத்தில் உள்ள பாறையின் மேல் பெரியபாதங்கள், சிறிய பாதங்கள் உள்ளன. பெரிய பாதம் கிராத மூர்த்திக்கும் சிறிய பாதங்கள் உன்னி கிருஷ்ணனுக்கும் உரியவை. இந்தப் பாதங்கள் இருப்பதால் தான், இப்பகுதியில் விவசாயமும், தொழிலும் செழிப்பாக இருப்பதாக மக்கள் நம்புகின்றனர். இங்குள்ள சிவனின் உக்கிரத்தை குறைக்க, மூலவர் சந்நிதி எதிரில், நவநீதகிருஷ்ணனை பிரதிஷ்டை செய்து உள்ளனர்.
இவர் சங்கு, சக்கரம், வெண்ணெய் வைத்துள்ளார். இடக்கையை இடுப்பில் ஊன்றியுள்ளார். மூலவர் மகாதேவரின் மேல், தாரா பாத்திரம் கட்டப்பட்டு ஜலதாரை செய்யப்படுகிறது. ஒரு பாத்திரத்தில் புனிதநீர் நிறைத்து, அதன் கீழுள்ள சிறிய துவாரம் வழியாக, சொட்டு சொட்டாக லிங்கத்தின் மீது விழ வைக்கும் வழிபாடே ஜலதாரை. சிவராத்திரி உள்ளிட்ட விசேஷ நாட்களில் புனிதநீருக்கு பதிலாக நெய்விட்டு அபிஷேகம் செய்யப்படுகிறது.
இந்த வழிபாட்டை, பக்தர்கள் உபயமாகச் செய்தால் நோய் நீங்கும். சுவாமிக்கு வஸ்திரம் சாத்தி பூஜிப்பவர்களுக்கு ஆயுள், ஆரோக்கியம், செல்வம், குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிரிகள் செயலிழந்து போவார்கள் என்பது நம்பிக்கை. |