குருவாயூரப்பனை தரிசனம் செய்பவர்கள் மம்மியூர் மகா தேவனையும் வணங்கினால்தான் இவ்வூருக்கு வந்த முழுபலனும் கிட்டும் என்பது பக்தர்களின் திடமான
நம்பிக்கை. கேரள பாணியில் ஓடு வேய்ந்த இக்கோயிலில், மகாவிஷ்ணு, கணபதி, சுப்ரமணியன், சாஸ்தா, பிரம்மராட்சஸ், நாகங்கள், பகவதியம்மன்
ஆகியோருக்கு சன்னதி உள்ளது. வேறு எங்கும் இல்லாத வகையில் "ரிக்வேத தாரை' என்னும் விசேஷ பூஜை இங்கு நடத்தப்படுகிறது. வேதங்களில்
முதலாவதான ரிக்வேதத்திலிருந்து மந்திரங்கள் ஓதப்படுகின்றன. இந்த பூஜை தினமும் காலை 6.45 முதல் 7.25 வரை நடக்கிறது.கிருஷ்ணபகவான் தன் அவதாரம்
முடித்து வைகுண்டம் சென்றதும் துவாரகை நகரம் கடலில் மூழ்கியது. கிருஷ்ணனால் வடிவமைக்கப்பட்ட அவரது சொந்த வடிவம் கொண்ட விக்ரகம் கடலில்
மிதந்தது. அதை குரு பகவானும், வாயுவும் சுமந்துகொண்டு, பூலோகத்தில் அதை பிரதிஷ்டை செய்வதற்குரிய இடத்தை தேடி சஞ்சரித்தனர். அவர்கள்
பரசுராமனால் உருவாக்கப்பட்ட கேரள பகுதிக்கு வந்தனர். அங்கிருந்த ருத்ர தீர்த்தக்கரையில் விக்ரகத்தை வைத்தனர். அவ்விடத்தில் சிவபெருமான்
குடிகொண்டிருந்தார். தன் கோயிலின் அருகிலேயே மகாவிஷ்ணுவின் சிலையும் இருக்கட்டும் என அவர் அருள்பாலித்தார். அவ்வூரே குருவாயூர் ஆயிற்று.
சிவபெருமான் குடியிருந்த தலம் மகிமை பொருந்தியது என்பதால், "மகிமையூர்' என அழைக்கப்பட்டு காலப்போக்கில் மம்மியூராக மாறிவிட்டது.
குருவாயூரப்பனை தரிசனம் செய்பவர்கள் மம்மியூர் மகா தேவனையும் வணங்கினால்தான் இவ்வூருக்கு வந்த முழுபலனும் கிட்டும் என்பது பக்தர்களின் திடமான நம்பிக்கை. கேரள பாணியில் ஓடு வேய்ந்த இக்கோயிலில், மகாவிஷ்ணு, கணபதி, சுப்ரமணியன், சாஸ்தா, பிரம்மராட்சஸ், நாகங்கள், பகவதியம்மன் ஆகியோருக்கு சன்னதி உள்ளது. வேறு எங்கும் இல்லாத வகையில் "ரிக்வேத தாரை' என்னும் விசேஷ பூஜை இங்கு நடத்தப்படுகிறது.
வேதங்களில் முதலாவதான ரிக்வேதத்திலிருந்து மந்திரங்கள் ஓதப்படுகின்றன. இந்த பூஜை தினமும் காலை 6.45 முதல் 7.25 வரை நடக்கிறது. கிருஷ்ணபகவான் தன் அவதாரம் முடித்து வைகுண்டம் சென்றதும் துவாரகை நகரம் கடலில் மூழ்கியது. கிருஷ்ணனால் வடிவமைக்கப்பட்ட அவரது சொந்த வடிவம் கொண்ட விக்ரகம் கடலில் மிதந்தது.
அதை குரு பகவானும், வாயுவும் சுமந்துகொண்டு, பூலோகத்தில் அதை பிரதிஷ்டை செய்வதற்குரிய இடத்தை தேடி சஞ்சரித்தனர். அவர்கள் பரசுராமனால் உருவாக்கப்பட்ட கேரள பகுதிக்கு வந்தனர். அங்கிருந்த ருத்ர தீர்த்தக்கரையில் விக்ரகத்தை வைத்தனர். அவ்விடத்தில் சிவபெருமான் குடிகொண்டிருந்தார். தன் கோயிலின் அருகிலேயே மகாவிஷ்ணுவின் சிலையும் இருக்கட்டும் என அவர் அருள்பாலித்தார். அவ்வூரே குருவாயூர் ஆயிற்று. |