123 அடி உயரத்தில் சிவபெருமான் நான்கு கைகளுடன் அமர்ந்த நிலையில் உலகின் இரண்டாவது பெரிய சிவன் சிலை வடிக்கப்பட்டுள்ளது.திருமணத்தடை
விலகவும், குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு கிடைக்கவும், கல்வியில் மேம்படுவதற்கும் 108 கலச அபிஷேகம் செய்யப்படுகிறது. பக்தர்களை குடும்பத்துடன்
மண்டபத்தில் அமரவைத்து சர்வதேவ பூஜை என்னும் தோஷம் நீக்கும் பூஜை நடத்துகின்றனர். இந்த பூஜையில் சுவாமிக்கு நைவேத்யமாக எள், நெய், வெல்லம்,
பச்சைப்பயறு பொடி, ஏலக்காய் சேர்த்த பஞ்ச கஜ்ஜாய பிரசாதம் படைக்கப்படுகிறது. ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் நாகர் சந்நிதியில் பாக்குப் பூ செலுத்தி
பரிகாரம் செய்கின்றனர். எமபயம் நீங்க சுவாமிக்கும், பார்வதி அம்பாளுக்கும் ருத்ராபிஷேகம் செய்கின்றனர். முர்டேஸ்வராசந்நிதியில் அணையா விளக்கு உள்ளது.
இதில் எண்ணெய் ஊற்றி, காசு போட்டுபக்தர்கள் தங்கள் முகத்தை எண்ணெயில் பார்க்கின்றனர். இவ்வாறு செய்தால் செல்வவிருத்தி உண்டாகும்என
நம்புகின்றனர்.
123 அடி உயரத்தில் சிவபெருமான் நான்கு கைகளுடன் அமர்ந்த நிலையில் உலகின் இரண்டாவது பெரிய சிவன் சிலை வடிக்கப்பட்டுள்ளது. திருமணத்தடை விலகவும், குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு கிடைக்கவும், கல்வியில் மேம்படுவதற்கும் 108 கலச அபிஷேகம் செய்யப்படுகிறது. பக்தர்களை குடும்பத்துடன் மண்டபத்தில் அமரவைத்து சர்வதேவ பூஜை என்னும் தோஷம் நீக்கும் பூஜை நடத்துகின்றனர்.
இந்த பூஜையில் சுவாமிக்கு நைவேத்யமாக எள், நெய், வெல்லம், பச்சைப்பயறு பொடி, ஏலக்காய் சேர்த்த பஞ்ச கஜ்ஜாய பிரசாதம் படைக்கப்படுகிறது. ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் நாகர் சந்நிதியில் பாக்குப் பூ செலுத்தி பரிகாரம் செய்கின்றனர். எமபயம் நீங்க சுவாமிக்கும், பார்வதி அம்பாளுக்கும் ருத்ராபிஷேகம் செய்கின்றனர். முர்டேஸ்வராசந்நிதியில் அணையா விளக்கு உள்ளது. இதில் எண்ணெய் ஊற்றி, காசு போட்டுபக்தர்கள் தங்கள் முகத்தை எண்ணெயில் பார்க்கின்றனர். இவ்வாறு செய்தால் செல்வவிருத்தி உண்டாகும்என நம்புகின்றனர். |