LOGO
  முதல் பக்கம்    மற்றவை    அறிவியல் Print Friendly and PDF
- செய்திகள்

முல்லைப் பெரியாறு ஒரு பார்வை !

     “116 வருட சுண்ணாம்பு அணை இன்னும் எவ்வளவு நாள் தாங்கும்?  தங்கள் இடத்திலேயே, தங்கள் செலவிலேயே, புதிய அணையைக் கட்டி, தமிழ் நாட்டிற்கு அதே அளவு தண்ணீரைத் தருவதாக கேரளா சொல்கிறதே. மேலும் ஒப்பந்தம் எழுதிக்தருகிறோம் என்கிறார்களே. இதை ஏற்றுக் கொள்ள தமிழ் நாடு ஏன் மறுக்கிறது? இது என்ன வீண் பிடிவாதம்? இது என்ன பைத்தியக்காரத்தனம்?” என சில ஊடகங்கள் கூறுகின்ன்றன. கேரளா இதுவரை செய்த அநியாயங்கள்,புதிய அணை கட்டி இனி செய்ய உத்தேசித்திருக்கும் அயோக்கியத்தனங்கள் இவை எதுவுமே வெளி உலகுக்குத் தெரியவில்லை.ஏன்தமிழ் நாட்டிலேயே சென்னையிலேயேகூட, படித்தவர்கள் பலருக்கு கூட தெரியவில்லை! புதியஅணை கட்டுவதில் என்ன தவறு?  அதான்அதே அளவு தண்ணீர் தருகிறேன் என்கிறார்களே என்று தமிழர்களே கேட்கிறார்கள். தமிழ்நாளிதழ்களும், அரசியல் கட்சிகளும்தொலைக்காட்சிகளும் கூட தமிழ் மக்களைதயார் படுத்துவதில் தவறி விட்டன என்று தான்சொல்ல வேண்டும். 

 

     இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும். முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது பிரிட்டிஷ் ஆண்ட காலத்தில்- 1895ல்.அப்போது இந்த அணை கட்டும் இடம் திருவாங்கூர்சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததாககருதப்பட்டது(உண்மை அது அல்ல.தமிழ் நாட்டின்வரையரைக்குள் தான் இருந்தது).

 

     எனவே பிரிட்டிஷார் திருவாங்கூர் மஹாராஜாவுடன் இந்த அணை கட்டப்படும், மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு பகுதியான சுமார் 8000 ஏக்கர் நிலத்தை999 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து (ஆண்டுக்குரூபாய் 40,000/- குத்தகைப் பணம்) இந்தஅணையை 1887ல் கட்ட ஆரம்பித்து 1895ல்கட்டி முடித்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால், இதில் அடிப்படையான பெரியாறு உற்பத்தியாவது தமிழ் நாட்டில்தான். அணையும் தமிழ் நாட்டிற்கு சொந்தமானது. அதை நிர்வகிப்பதும் தமிழ் நாடு தான். ஆனால் இடம் மட்டும் கேரளாவிற்கு சொந்தம்.அதிகாரம் செலுத்துவதும் அவர்களே! இந்த அணையின் உயரம்-கொள்ளளவு 152அடி. இதன் மூலம் பாசனம் பெறும் நிலம் சுமார் 2,08,000 ஏக்கர். மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த10 லட்சம் விவசாயிகள்பாசனத்திற்கும்,60 லட்சம் மக்கள் குடிநீருக்கும் இந்த அணையை நம்பி இருக்கிறார்கள். இந்த அணை பறிக்கப்பட்டால் இத்தனை இடங்களும் பாலைவனங்கள்ஆகும். இத்தனை ஜனங்களும் பிழைப்பு எங்கே போவார்கள்.பிரச்சினை ஆரம்பித்ததுஎப்படி? எப்போது?

 

     கேரளா, இதற்கு சுமார் 50 கிலோமீட்டர் கீழே, இடுக்கியில் 1976ல் ஒரு அணையும் நீர்மின்நிலையமும் கட்டியது. பின்னர் தான் ஆரம்பித்தன அத்தனை தொல்லைகளும். பெரியாறு அணையின் மொத்த கொள்ளளவே15.66 டிஎம்சி தான்.அதிலும் சுமார் 10 டிஎம்சியை தான் பயன்படுத்த முடியும்.(104அடி வரை டெட் ஸ்டோரேஜ்.)

 

     ஆனால் இடுக்கி இதைப் போல் 7 மடங்கு பெரியது. கொள்ளளவு 70டிஎம்சி.பெரிய அணையைக் கட்டி விட்டார்களே தவிர அதுநிரம்பும் வழியாகக் காணோம். 3 வருடங்கள் பொறுத்துப் பார்த்தார்கள். பெரியாறு வருடாவருடம் நிரம்பிக் கொண்டு இருந்தது.ஆனால் இடுக்கிநிரம்பவே இல்லை.

 

     அப்போது போடப்பட்ட சதித்திட்டம் தான் பெரியாறு அணைக்கு ஆபத்து என்கிறகுரல் கூக்குரல். சுண்ணாம்பு அணை உடைந்து விடும், அதிலிருந்து வெளிவரும் நீரால்35லட்சம்மக்கள் செத்துப் போவார்கள். எனவே உடனடியாக புதிய அணை கட்டுவதே தீர்வு! புதிய அணையினால் அவர்களுக்கு என்ன லாபம்? மேலே இருக்கும்பழைய அணையை இடிப்பதால், நீர்பிடிப்பு பகுதியிலிருந்து அத்தனை நீரும் நேராக இடுக்கிக்கு வந்து அதை நிரப்பும் சரி நிரம்பட்டுமே. நல்லது தானே! அதான் தமிழ்நாட்டுக்கு இதே அளவுதண்ணீர் தருகிறேன் என்று சொல்கிறார்களே என்று உடனே மக்கள் கேட்கிறார்க்ள்.அங்கே தான் இருக்கிறது அவர்கள் சாமர்த்தியம்.

 

     பெரியாறு அணை இருப்பது கடல் மட்டத்திலிருந்து 2709 முதல் 2861 அடி உயரம் வரை. இதிலிருந்து மலையைக் குடைந்து குகைப்பாதை வழியாகதண்ணீர் தமிழ் நாட்டை நோக்கி கொண்டு வரப்படுகிறது. புதிய அணையை கட்டப்போவது 1853 அடிஉயரத்தில்.இந்த அணை கட்டப்படும் உயரத்திலிருந்து தமிழ் நாட்டிற்கு தண்ணீரைத் திருப்பி விட முடியாது. நமக்கு பெரியாறு அணையிலிருந்து நீர் எடுத்து வரும்பாதை இதை விட உயரத்தில் ஆரம்பித்து, ஒரு கிலோமீட்டர் பயணத்திற்கு பிறகு 5704 அடி நீளமுள்ள மலையைக் குடைந்த குகை வழியாக திசை மாறிவந்து பின்னர் கீழே வைகையில் கலக்கிறது.

 

     அணையைக் கட்டிய பிறகு, இவர்கள் உண்மையாகவே விரும்பினாலும் நீரைத்திருப்ப முடியாது. மேலும் புதிய அணையிலிருந்து ஆண்டு முழுவதும் நீர்மின்சாரம் உற்பத்தி செய்யநீரை வெளியேற்றிக் கொண்டே இருக்கப் போகிறார்கள். எனவே அணை எப்போதுமே முழுவதுமாக நிரம்பிஇருக்காது. தமிழ் நாட்டிற்கு தண்ணீர் நிச்சயமாககிடைக்காது.புதிய அணையினால் தமிழ் நாட்டிற்கு பயன் இல்லை.

 

     பழைய சுண்ணாம்பு அணை எப்போது வேண்டுமானாலும் உடைந்து விடும். 35 லட்சம் மக்கள் செத்து விடுவார்கள் என்கிறார்களே?அயோக்கியத்தனம். வடிகட்டிய அயோக்கியத்தனம்.

 

     முதலாவதாக – பெரியாறு அணை உடைந்தால் தண்ணீர் மலைப் பள்ளத்தாக்குகள் வழியாகப் பாய்ந்து நேராக கீழே உள்ள இடுக்கி அணையைத் தான்வந்தடையும்.பெரியாறு அணையிலிருந்து அதன் முழு நீரும்(10 டிஎம்சி) ஒரே நேரத்தில் வெளியேறினாலும்,நேராக அதைப்போல் 7 மடங்கு கொள்ளளவு உடைய இடுக்கி அணையைத் தான் வந்தடையபோகிறது. இடையில் எந்த நாடு, நகரமும் இல்லை.

 

     வாதத்திற்காக இடுக்கி அணை ஏற்கெனவே நிரம்பி இருந்தாலும் வெளியேறும் நீர் பெரியாறுஅணையிலிருந்து இடுக்கி வந்து சேர 4 மணி நேரம்ஆகும். அதற்குள்ளாக இடுக்கியிலிருந்துதேவையான நீரை வெளியேற்றி விட முடியும்! எனவே வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்கிற பேச்சே அபத்தமானது.

 

     இரண்டாவதாக – 1976ல் இடுக்கி அணையை கட்டினார்கள். 1979ல் பெரியாறு அணை உடையப்போகிறது என்று குரல் எழுப்பினார்கள்.பயத்தைக் கிளப்பினார்கள்.சுப்ரீம் கோர்ட் வரை போனார்கள். 2000 ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் நிபுணர் குழுவைஅமைத்தது. நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி அணை அனைத்து விதங்களிலும் பலப்படுத்தப்பட்டது. கேரளா சொல்வது போல் இது வெறும் சுண்ணாம்பு அணை அல்ல.ஏற்கெனவேயே முதல் தடவையாக 1933ல்40 டன் சிமெண்ட் கலவை சுவரில் துளையிட்டு உள்ளே செலுத்தப்பட்டது. மீண்டும் 1960ல் 500 டன் சிமெண்ட்உள் செலுத்தப்பட்டது.2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் சென்ற பிறகு நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி லேடஸ்ட் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி,கேபிள் ஆன்கரிங் முறையில் அணையுள் கான்க்ரீட் கலவை செலுத்தப்பட்டது.

 

     வெளிப்புறமாக ஒரு கவசம் போல், கிட்டத்தட்ட புது அணையே போல்,கான்க்ரீட் போடப்பட்டு, ஒரு புத்தம்புதிய கான்க்ரீட்அணையே உருவாக்கப்பட்டு விட்டது.   கீழே உள்ள வரைபடத்தைப்பார்த்தால் நன்றாகப் புரியும். பிரச்சினை ஆரம்பித்ததுஎப்படி? எப்போது?

 

     இதன் பிறகு தான், 27/02/2006 அன்று, சுப்ரீம் கோர்ட், இனி அணைக்கு எந்த ஆபத்தும் இல்லைஎன்பதை நிபுணர் குழுவின் மூலம் உறுதி செய்துகொண்டு,156 அடிவரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்று அனுமதியே கொடுத்தது விட்டது.

 

     நமது கேரள சகோதரர்கள் மீண்டும் சதி. ஒரு மாதத்திற்குள்ளாக, கேரள சட்டமன்றத்தில் புதிய சட்டம் இயற்றி, சுப்ரீம் கோர்ட் உத்திரவையே செல்லாததாக்கிவிட்டார்கள்.வழக்கம் போல் தமிழன் இளிச்சவாயன் ஆகி விட்டான். மீண்டும் கோர்ட் பின்னால் அலைகிறோம். இப்போது, இன்னும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டின் பரிசீலனையில் இருக்கும்போதே தீர்ப்பு அவர்களுக்கு பாதகமாக இருக்குமோ என்கிற தவிப்பில் மீண்டும் நாடகம் ஆடுகிறார்கள். அணைக்கு ஆபத்து புதிய அணை கட்ட வேண்டும் என்று.

 

     பாராளுமன்றத்தில்குரல் கொடுக்கிறார்கள்.பிரதமரை போய்ப் பார்க்கிறார்கள்.உண்ணாவிரதம் இருக்கிறார்கள். பந்த் நடத்துகிறார்கள். இப்போதைக்கு அவர்கள் குரல் தான் பலமாகக்கேட்கிறது. வெளிமக்கள் அவர்கள் பக்கம் நியாயம் இருக்கிறது என்று நினைக்கத் தொடங்கி விட்டார்கள். தமிழ் நாடு ஏமாந்தது போதும். உடனடித் தேவை பலமான பதில் தாக்குதல்.தமிழகம் முழுவதும் சேர்ந்து பதிலடி கொடுக்க வேண்டும். ஒரே குரலில் பேச வேண்டும்.

 

     உண்மையை உரக்கச் சொல்ல வேண்டும்.அகில இந்தியாவிற்கும் தெரியும்படி சொல்ல வேண்டும். நம் தரப்பு நியாயம் அனைவருக்கும் புரியும்படி சுப்ரீம் கோர்ட்டுக்கு புரியும்படி சொல்ல வேண்டும்! நல்ல தீர்ப்பு விரைவில் கிடைக்கும்படி செய்ய வேண்டும். கேரளாவிற்கு எங்கே அடித்தால் வலிக்குமோ அங்கே அடிக்க வேண்டும். எப்படிச் சொன்னால் புரியுமோ அப்படிச் சொல்ல வேண்டும். நாடகமாடினால் இனியும் தமிழர்கள் ஏமாற மாட்டார்கள் என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

 

காணொளி:

http://valaitamil.com/video_view.php?catid=47&subpid=50&vid=400
http://valaitamil.com/video_view.php?catid=47&subpid=50&vid=401

நன்றி: இராமமூர்த்தி

by Ilakkiyan   on 21 Dec 2011  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அறிவியல் தமிழ் அறிவியல் தமிழ்
அறிவியல் தமிழ் அறிவியல் தமிழ்
நீர் உடும்பு நீர் உடும்பு
அறிவியல் தமிழ் முனைவர். ஆர். ராஜராஜன் , சென்னை அறிவியல் தமிழ் முனைவர். ஆர். ராஜராஜன் , சென்னை
மனித நோய்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு குளோனிங் முறையில் 5 குரங்குகளை சீனா உருவாக்கியது மனித நோய்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு குளோனிங் முறையில் 5 குரங்குகளை சீனா உருவாக்கியது
சனிக்கோள் தனது அழகிய வளையங்களை இழந்து வருகிறது- நாசா விஞ்ஞானிகள் தகவல்! சனிக்கோள் தனது அழகிய வளையங்களை இழந்து வருகிறது- நாசா விஞ்ஞானிகள் தகவல்!
நிலத்தடி நீர் குறைந்துவரும் அபாயம்! - பேராசிரியர் கே. ராஜு நிலத்தடி நீர் குறைந்துவரும் அபாயம்! - பேராசிரியர் கே. ராஜு
ஆழ்கடல் உயிரினங்களுக்கு ஆபத்து - பேராசிரியர் கே. ராஜு ஆழ்கடல் உயிரினங்களுக்கு ஆபத்து - பேராசிரியர் கே. ராஜு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.