LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் -யுனெஸ்கோ (Thirukkural for UNESCO)

1962ல் வெளிவந்த ஆங்கில நூலில் திருக்குறள் -யுனெசுகோ குறிப்பு

1962ல் வெளிவந்த ஆங்கில நூலில் திருக்குறள் -யுனெசுகோ குறித்த குறிப்பை Chinnasamy Rajendiran அவர்கள் நேற்று பகிர்ந்தார்.
தொடர்ந்து நாம் நம் அறிவை, இலக்கியங்களை, அதில் உள்ள உயர்ந்த விழுமியங்களை நமக்குள் பழங்கதைகளாகப் பேசி மகிழ்ந்து வருகிறோமே தவிர இன்னும் உலக மக்களுக்கு , தமிழ்நாட்டுக்கு வெளியே பிற மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளுமளவுக்கு பெரும் அளவில் நிதி ஒதுக்கி கூர்மையான இலக்கோடு செய்யவேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளது என்பதே என் புரிதல்.
தமிழில் திருக்குறள் மட்டுமே ஓரளவு பேசுபொருளாகியுள்ளது. அதுவும் இன்னும் தேசிய நூல் அளவுக்குக்கூட செல்லவில்லை. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் நம் முன்னோர்கள் வைத்த கோரிக்கை இன்றும் கோரிக்கை அளவிலேயே உள்ளது.
திருக்குறள் தவிர்த்து பிற சங்க இலக்கியங்கள் தமிழ்நாட்டுக்கு வெளியே குறிப்பிடும்படி செல்லவில்லை. நம் மொழியில் உள்ள கருத்துகளை தமிழ் மக்களிடமே கொண்டுசேர்க்க பல நூறு பேர் உழைக்கவேண்டியது தேவையுள்ளது. பெரும் நிதியை செலவிடவேண்டிய தேவை உள்ளது.
தமிழ்ச்சமூகம் உள்வாங்காத , உணராத ஒன்றை பிற சமூகம் ஏற்றுக்கொள்ளும் என்று கருதுவது சரியான பார்வையன்று. திருக்குறளை தமிழ்ச் சமூகம் முழுமையாக உள்வாங்கவேண்டும். வீடுதோறும் திருக்குறள் நூல் இருப்பதும், வாரத்தில் குறிப்பிட்ட நாட்களில் குடும்பதோடு அமர்ந்து வாசிப்பதும் அவசியம். குழந்தைகளை முற்றோதல் செய்யவைத்து , அதன் பொருளை வயதிற்கு ஏற்ப உள்வாங்கச் செய்வது அவசியம்..
1. தமிழ்ச் சமூகம் அதன் கடமையை செய்யவேண்டும்.
2. திருக்குறள் மொழிபெயர்ப்புகள் பரவலாக்கப்படவேண்டும்.
3. திருக்குறள் மொழிபெயர்ப்புகள் வாழும் அனைத்து மொழிகளிலும் கொண்டுவரவேண்டும்.
4. திருக்குறள் அனைத்து நாடுகளிலும், அனைத்து உயர்மட்ட சந்திப்புகளிலும் பரிசளிக்கும் இடத்தை பெறவேண்டும்.
5. திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படவேண்டும்.
6. திருக்குறள் யுனெசுகோவில் அங்கீகரிக்கப்பட்டு , திருவள்ளுவர் சிலை யுனெசுகோ வளாகத்தில் வைத்து , ஆண்டுதோறும் உலக மாணவர்கள் கற்க வாய்ப்பு ஏற்படவேண்டும்.
தொடர்ந்து சாதி, மத, அரசியல் எல்லைகளைக் கடந்து உலகப்பொதுமறையான திருக்குறள் கருத்துகள் உலக மக்களுக்கு சென்றுசேர வேண்டும் என்று தொடர்ந்து உழைப்போம்..
 
 
 
by Swathi   on 19 Sep 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
உலக அளவில் திருக்குறள் பரவலாக்கலும் , வலைத்தமிழ் பங்களிப்பும் - ச.பார்த்தசாரதி உலக அளவில் திருக்குறள் பரவலாக்கலும் , வலைத்தமிழ் பங்களிப்பும் - ச.பார்த்தசாரதி
அதிகரித்து வரும் திருக்குறள் முற்றோதல் சதவீதம் அதிகரித்து வரும் திருக்குறள் முற்றோதல் சதவீதம்
அனைத்து திருக்குறள் உரைகளும் வலைத்தமிழில் அனைத்து திருக்குறள் உரைகளும் வலைத்தமிழில்
திருக்குறள் உரைகள் - முனைவர் தெ.ஞானசுந்தரம் திருக்குறள் உரைகள் - முனைவர் தெ.ஞானசுந்தரம்
சுவீடன் நாட்டின் ஸ்வீடிஷ்(Swedish) மொழியில் வெளிவந்த திருக்குறள் நூல் வலைத்தமிழ் தொகுப்பில் இணைந்தது சுவீடன் நாட்டின் ஸ்வீடிஷ்(Swedish) மொழியில் வெளிவந்த திருக்குறள் நூல் வலைத்தமிழ் தொகுப்பில் இணைந்தது
திருக்குறளாய்வுகள்...- சுபா சுப்ரமணியம் திருக்குறளாய்வுகள்...- சுபா சுப்ரமணியம்
பேரறிஞர் அண்ணா குறள் பணிகள் - சி. இராஜேந்திரன் பேரறிஞர் அண்ணா குறள் பணிகள் - சி. இராஜேந்திரன்
சமரசம் செய்து கொள்ளாமல் அறம் பேசியதால் தான் திருக்குறளை பேரரசர்கள் எவரும் கொண்டாடவில்லை! ஆர்.பாலகிருஷ்ணன் IAS சமரசம் செய்து கொள்ளாமல் அறம் பேசியதால் தான் திருக்குறளை பேரரசர்கள் எவரும் கொண்டாடவில்லை! ஆர்.பாலகிருஷ்ணன் IAS
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.