நவில்தொறும் நூல்நயம் வெள்ளி தோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-6
நாள்: 31/03/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6:30-07:45 மணி
நூல்: குறள் வாசிப்பு நூலாசிரியர்: பேராசிரியர் முனைவர் செ.வை. சண்முகம்
"குறள் வாசிப்பு" திருக்குறளில் இடம்பெறும் ஐந்திலக்கணக் கூறுகளை முழுமையாக எடுத்துரைக்கும் ஓர் ஆய்வு நூல். இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் திருக்குறளை முதன்மை தரவாகவும், திருக்குறள் உரைகள், இலக்கண ஆசிரியர்கள் சான்று காட்டும் திருக்குறள் பகுதிகள், திருக்குறளுக்கு இதுவரை வெளிவந்த ஆய்வு நூல்கள் முதலியவற்றை கருத்தில் கொண்டும் எழுதப்பட்டுள்ளன. வெவ்வேறு சூழலில் வெவ்வேறு காலகட்டத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள் ஒருங்கே இங்கு நூலாக்கம் பெற்ற நிலையில், திருக்குறள் குறித்த முழுமையான புரிதலைப் பெற துணை செய்கிறது. மூன்றாம் பதிப்பாக வெளிவரும் இந்நூலை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
நூல் அறிமுகம் செய்வார்: முதுமுனைவர் மு.கஸ்தூரி
தற்போது, தருமமூர்த்தி இராவ்பகதூர் கலவல கண்ணன்செட்டி இந்துக் கல்லூரி தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியரகப் பணியாற்றும் முதுமுனைவர் மு.கஸ்தூரி அவர்கள், பத்துப்பாட்டு யாப்பியல், குமரகுருபரர் யாப்பியல், தமிழ் யாப்பியல் பன்முக வாசிப்பு, தமிழில் ஆய்வுகள் முதலிய நூல்களை இயற்றியவர். முப்பதுக்கும் மேற்பட்ட பன்னாட்டு, தேசியப் பயிலரங்குகளில் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இதழ்களிலும் தொடர்ந்து ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருகிறார். தமிழ் யாப்பிலக்கணம் மற்றும் சங்க இலக்கிய ஆய்வுகள் குறித்து தொடர்ச்சியான ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர்.
|