சென்னை அண்ணாநகரில் வசிக்கும், திருக்குறள் கவனகர் சி.வெற்றிவேல், எஸ்.பி.ஓ.ஏ. என்ற தனியார் பள்ளியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
எம்.ஏ., பி.எட்., எம்.பில்., பி.எச்.டி., முடித்த இவர், தமிழ்நாட்டிலேயே அதிக அளவில் பழைய இதழ்களைச் (5300) சேகரித்து, இதழ்களின் காவலராகத் திகழ்பவர். அதேபோல 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களைப் பாதுகாத்து தமிழ்த்தொண்டு செய்து வருபவர். எல்லாவற்றுக்கும் மேலாக திருக்குறள் கவனகராக இருந்து திருக்குறளின் சிறப்புகளை தமிழுலகுக்கு எடுத்துரைத்து வருபவர்.
உயர் படிப்புகள் முடித்தவராகவும், திருக்குறள் கவனகராகவும். இதழ்களின் காவலராகவும், தமிழ்த் தொண்டு புரிபவராகவும் விளங்குகிறார் திரு. சி.வெற்றிவேல்
|