|
||||||||
திருக்குறள் உரைகள் - முனைவர் தெ.ஞானசுந்தரம் |
||||||||
தமிழிலக்கியங்களில் மிகுதியாக உரை வரையப்பட்ட பெருமைக்குரிய நூல் திருக்குறள். அதற்குத் தருமர் அவற்றுள்; வ.உ.சி. கோ.வடிவேலுச்செட்டியார் இவை தவிரக் திருக்குறள் குறித்துப் பல்வேறு நோக்கில் வந்துள்ள நூல்களுக்கு அளவில்லை. அவற்றுள்; தமிழறிஞர்களும், ஆர்வலர்களும் எந்த வகையிலேனும் திருக்குறள் தொடர்பான நூல் படைப்பதில் தணியாத ஆர்வம் உடையவர்களாக விளங்குகிறார்கள். இப்போக்கு மகிழ்ச்சிக்குரியதே. ஆனால், பெரும்பாலான உரைகள் முன் வந்த உரைகளையே பெரிதும் சார்ந்து உரையாசிரியர்களின் பங்களிப்பு ஏதுமின்றி காணப்படுகின்றன. எந்தப் போக்கில் அமைந்த உரையாக இருந்த போதிலும் அதில் ஐம்பது விழுக்காட்டிற்கு மேல் பரிமேலழகரின் உரை பின்பற்றப்பட்டிருத்தல் காணலாம். ஒரு சிலவற்றிலேயே புதிய விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன. பரிமேலழகரை நச்சுக்கருத்துகளை விதைத்தவர் என்று குற்றஞ் சுமத்தும் அறிஞர் தேவநேயபாவாணர்கூட அவருடைய பதசாரங்களையும் நுட்பவுரைகளையும் அங்கங்கே அப்படியே ஏற்றுத் தனித்தமிழ்ப்படுத்திப் போற்றிக்கொள்வது காணலாம். ஒரு குறளுக்குப் பல பொருள் சொல்லப்படும்போது எது சரியான பொருள் என்பதைத் தெளிய வேண்டிய அவசியம் நேரிடுகிறது. இந்த முயற்சியில் ஈடுபட்டுப் பண்டைய உரைகளோடு பின் வந்த உரைகள் பலவற்றையும் ஒப்பநோக்கி, அவற்றில் நிலவும் உரை வேற்றுமைகளை ஆய்ந்து தம்முடிபினைத் தந்து "திருக்குறள் உரை வேற்றுமை" என்னும் நூலை முனைவர் இரா. சாரங்கபாணி உருவாக்கியுள்ளார். பல தெளிவுகளைத் தருவது அந்நூல். இத்தனை முயற்சிக்குப் பின்னும் சில குறட்பாக்கள் பெரும்பாலோர் தெரிவிக்கும் விளக்கத்துக்கு வேறான புதிய விளக்கம் காண்பதற்கு இடம் அளிக்கின்றன. பண்டைய உரையாசிரியர்களையும் இன்றைய அறிஞர்களையும் மயங்கச் செய்யும் குறள்களில் ஒன்றாக அமைச்சு அதிகாரத்தின் இரண்டாவது குறள் அமைந்துள்ளது. அமைச்சர்க்கு இருத்தற்குரிய இயல்புகளைத் தெரிவிக்கும் அக்குறள்:
பரிதியார் குடிகாத்தல் என்பதைப் பிரிக்காமல், கற்றறிதல் என்பதைக் "கற்று" என்றும் "அறிதல்" என்றும் இரண்டாகப் பிரித்து, ஏனையவற்றோடு கூட்டி, "தருகணாண்மை, குடிகாத்தல், கல்வி, அறிவுடைமை, உத்தியோகம் என்னும் அஞ்சு குணமுள்ளவன் மந்திரி என்றவாறு," என்று உரைகண்டுள்ளார். தொல்காப்பிய உரையாசிரியராகிய பேராசிரியரும் இவ்வாறே இக்குறளுக்குப் பொருள் கண்டுள்ளார் என்பது தொல்காப்பியப் பொருளதிகார 273ம் நூற்பாவுக்கு அவர் வரைந்துள்ள உரைப்பகுதியில் தெரிகிறது.
"கருவியும் காலமும் செய்கையும் செய்யும் இரண்டாம் குறளில் இடம்பெற்றுள்ள ஐந்து என்பது அதற்கு முன்னுள்ள குறளில் இடம் பெற்றுள்ளவற்றைச் சுட்டுவதாகக் காட்டினார். ஆனால் அதிலும் ஐந்து பொருள்கள் இல்லை. கருவி பரிமேலழகர் இரண்டாவது குறளில் நான்கு பண்புகளே சுட்டப்படுகின்றன என்று சொல்வது பொருத்தமாக இருக்கிறது. ஆனால் இக்குறளை மேற்குறளோடு இணைத்து உரை கண்டிருப்பது இயல்பாக இல்லை. திருக்குறள் நூல் முழுவதிலும் ஒவ்வொரு குறளும் ஒவ்வொரு தனிக்கருத்தைத் தெரிவிக்கும் தனித்தனி அலகாகவே அமைந்திருக்கிறது. அதனால்தான் பண்டைய உரையாசிரியர்கள் அதிகாரக் குறள்வரிசையினைத் தங்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொண்டுள்ளனர். எனவே பரிமேலழகர் தரும் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
திருக்குறளில் சில இடங்களில் "ஐந்து" என்னும் தொகைச்சொல் இடம்பெற்றுள்ளது. அங்கெல்லாம் அஃது எப்பொருளைச் சுட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்து கொள்வது இங்கு அஃது உணர்த்தும் பொருளை அறுதியிடத் துணைபுரியும். திருவள்ளுவர் ஐந்து என்னும் தொகைச்சொல்லால் சுட்டப்படுவன புதியனவாக இருந்தால் அவற்றை விரித்துக் கூறி ஐந்து என்று தொகைச்சொல் கொடுத்து முடிக்கிறார். ஐந்து என்னும் தொகைச் சொல்லால் சுட்டப்படுவன பலருக்கும் எளிதில் அறியக் கூடிய பொருள்களாக இருந்தால் ஐந்து என்று மட்டும் குறித்துச் செல்கிறார். இது திருவள்ளுவர் மேற்கொண்ட நெறியாக அமைந்துள்ளது.
உரன் என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் (24) இதனால் ஐம்பொறிகளை விளக்கிக் கூறாமல் ஐந்து என்று குறித்துச் செல்வது திருவள்ளுவரிடம் காணப்படுவதோர் இயல்பு என்பது தேற்றம். இதனை மனதில் கொண்டு "வன்கண்" என்று தொடங்கும் குறட்பாவினை நோக்கினால், "வன்கண்மையும் (தளரா முயற்சியும்) குடிகாத்தலும், கற்றறிதலும் ஆள்வினையும் ஆகிய நான்கும் பொறிகள் ஐந்துடனே செம்மையாக உடையவனே அமைச்சனாவான்," என்பதே இதன் பொருள் என்பது விளங்கும். அமைச்சன் குறையில்லா ஐம்பொறிகளையும் அவற்றை அடக்கிக் காக்கும் திறனும் உடையவனாக இருப்பதே அவனுக்கு மாட்சியாகும். அரசியல் தலைமை ஏற்போர்க்குப் பொறிகளில் குறை இருத்தல் கூடாது என்பதனால்தான் திருதராட்டிரன் அரசாள முடியவில்லை என்பது பாரதத்தால் விளங்குகிறது. பொறிகளில் குறைபாடுடைய அமைச்சனின் செயற்பாட்டில் இடர்பாடு நேரிடும். பொறிகளின் ஆசைக்கு இடம் கொடுக்கும் அமைச்சன் இடறி விழுந்து தான் அழிவதோடு, தன் அரசனுக்கும் அழிவினை ஏற்படுத்துவான். பெண்ணிடம் கொண்ட காமத்தால் நெறி தவறிய அமைச்சர் சிலரை வரலாறு கண்டிருக்கிறது. இக்கருத்துக்கு ஏலாதி எனும் நூலும் வலிமை சேர்க்கிறது. "நாற்றம் சுவைவெஃகி நல்லார் இனம்சேர்தல் தேற்றானேல் தேறும் அமைச்சு" (17) என்கிறது ஏலாதி. இவ்வாறு இக்குறளுக்குப் பொருள் கண்டவர் யாரேனும் உண்டோ என்று தேடியபோது, பின்னாளைய உரையாசிரியர்களுள் கடவுள் மறுப்புக் கொள்கை என்னும் தளத்தில் நின்று தம் போக்கில் உரைகண்ட புலவர் குழந்தை ஒருவர் மட்டும் பொருள் கண்டுள்ளார் என்பது தெரிய வருகிறது. "வன்கண் முதலிய நான்கும், ஐம்பொறித் தூய்மையும் திருந்த உடையவனே அமைச்சனாவான். ஐந்து - தொகைக்குறிப்புச் சொல். வன்கண் முதலிய நான்கோடு ஐம்பொறித் தூய்மையும் உடையவனென்க," என்பது அவரது உரை. திருக்குறளில் எழும் ஐயங்களுக்குத் திருக்குறளின் துணைகொண்டு தெளிவு தேடினால் தகுந்த விளக்கம் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. முனைவர் தெ.ஞானசுந்தரம், |
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
by Swathi on 21 Sep 2023 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|