|
||||||||||||||||||
வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. ராமலிங்கம் கோவிந்தராஜ் |
||||||||||||||||||
சமூக ஆர்வலர்: அமெரிக்காவில் வசித்து வரும் திரு. ராமலிங்கம் கோவிந்தராஜ் அவர்கள் தன் தாய்நாட்டிற்காக பல்வேறு சமூகப் பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறார். ஒரு கூட்டு முயற்சியாக பல்வேறு நபர்களிடம் இருந்து நன்கொடை வாங்கி அதைத் தமிழ் நாட்டில் உள்ள கிராம மக்களின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்துகிறார். பொறியியல் படித்துள்ள இவர் தற்போது அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். சமூக சேவைகள்: சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டம், சூரிய மின்சக்திகளைக் கிராமங்களில் பொருத்துவது போன்ற திட்டங்களைக் கிராமங்களில் திரு. ராமலிங்கம் கோவிந்தராஜ் அவர்களின் குழு திறம்படச் செய்திருக்கின்றது. மேலும் கிராமங்களில் இருக்கக் கூடிய அரசுப் பள்ளிகளை புணரமைத்து, குழந்தைகளுக்கு ஏற்ற முறையில், அவர்களின் கற்றல் ஆர்வத்தை அதிகப்படுத்தும் விதமாகப் பல மாற்றங்களைச் செயல்படுத்தியது. கண் பார்வையற்றோருக்கு ஊன்றுகோல் வழங்கும் திட்டத்தையும் அக்குழு செயல்படுத்தியது. இதில் மனநிறைவும் கண்டது. கஜா புயலின் போது வீடுகளை இழந்த மக்களுக்கு வீடு கட்டி தந்தது அக்குழு. 33 வீடுகள் இத்திட்டத்தில் கட்டப்பட்டன. ஏழை எளியோருக்கு உணவு கொடுக்கும் திட்டத்தையும் தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு மேல் அக்குழு செய்து வருகிறது. மேலும் கிராமங்களில் ஏரிகள் புணரமைக்கும் திட்டத்தையும் செய்து அதில் வெற்றியும் கண்டது. குழு: யார் வேண்டுமானாலும் சேவை செய்யும் அவரது குழுவில் இணையலாம். ‘இது அவருடைய குழு அல்ல. இது மக்களுக்கான ஒரு குழு’ என்று திரு. ராமலிங்கம் கோவிந்தராஜ் அவர்கள் கூறுகிறார். இங்குக் கட்டளைகள் திணிக்கப்படுவதில்லை. தன்னார்வலர்கள் தாங்களாகவே பங்கேற்கின்றனர். மனிதனுக்கு மனிதன் கரம் கொடுத்து ஒன்றிணைகின்றனர். நம்மைப் போல் பிறரும் நலமுடன் வாழ வேண்டு்ம் என்ற எண்ணம் கொண்டவர்கள் தொண்டு செய்யவும், நன்கொடை அளிக்கவும் முன் வருகின்றனர். ஆலோசனைகள்: இது போன்ற சேவைகள் செய்ய முன்வருவோருக்கு அவர் கூறும் ஆலோசனைகளாவன.. எந்த திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்ற எடுத்துக் கொள்கிறோமோ, அத்திட்டத்தை எத்தனை இடையூறுகள் வந்தாலும் கைவிட்டுவிடக் கூடாது. அத்திட்டத்தால் விளையப்போகும் நன்மையை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். அணியில் இருக்கும் யாரேனும் தவறு செய்தால் அவரை ஒருமுறை மன்னித்து விட வேண்டும். கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது. தான் சார்ந்த நம்பிக்கைகளைத் திணிக்கக் கூடாது. ‘தான் தலைமை தாங்குகிறேன்’ என்ற கர்வம் வரக் கூடாது. வெளிப்படைத் தன்மை வேண்டும். வரவு, செலவு கணக்கை நிர்வகிக்கத் தனி நபர் வேண்டும். கேள்வி கேட்பதற்கென்றே ஒரு நபர் வேண்டும். அப்போது தான் நாம் செய்யும் தவறு என்ன என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். செய்து முடிக்கப்பட்ட திட்டமாக இருந்தாலும் அதைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும். உடன் பணிபுரியும் அனைவரையும் நண்பர்களாகப் பார்க்க வேண்டும். |
||||||||||||||||||
by Lakshmi G on 08 Oct 2020 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|