எதிரில் பக்தஆஞ்சநேயராக 8 அடி உயரத்தில் தனிச்சன்னதியில் அருளுகிறார். அவதாரங்கள் பல எடுத்த மகாவிஷ்ணு தன்னை ஆணாகவும், உலகில் பிறந்த ஆண், பெண் உட்பட அனைத்து உயிர்களையும் பெண்ணாகவுமே கருதுகிறார். பெண், ஆணின் துணையின்றி வாழ முடியாது என்பதைப்போல, நாம் அப்பரம்பொருளின் துணையின்றி வாழமுடியாது என இதன் மூலம் உணர்த்தப்படுகிறது.
இதை வலுப்படுத்தும் விதமாகவே அவரது கிருஷ்ணாவதாரமும் விளங்கியது. கோபியராக இருந்த பெண்கள் அனைவரும், ராமவதாரத்தில் அவர் மீது அளவிலாத பக்தி கொண்டிருந்த ரிஷிகளே. பாதி ஆணும், பாதி பெண்ணுமாக காட்சி தரும் இவரது சிற்பம், லட்சுமியை இத்தலத்தில் திருமணம் செய்து தன் மார்பில் மீண்டும் தாங்கியதால் இந்த வடிவம் ஏற்பட்டதாகவும் கூறலாம்.
சுவாமி விமானத்தில் உள்ளது.தான் கொண்ட அகங்காரத்தில் நரம்பு புடைக்கப்பெற்ற பிருகுமுனிவரின் அகங்காரம் அழிந்த தலமென்பதால் இங்கு வணங்கிட நரம்புத்தளர்ச்சி நீங்கும் என்பதும், பொன்ன மரத்தின் அடியிலுள்ள சந்தான கோபாலகிருஷ்ணரை வணங்க புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. |