சுவாமி உளி படாத லிங்கம் சித்திரை 3ம் தேதியிலிருந்து 10ஆம் தேதி வரை சுவாமி மீது சூரியன் ஒளி படுவது சிறப்பு வசிஷ்ட மாமுனி வேள்வி செய்த
தலம் என்ற சிறப்பு பெற்றது. ஒரே கல்லிலான குதிரை வாகனம் இத்தலத்தில் உள்ளது.3 சூலாயுதம் போல் சுவாமி அம்பாள் இருவரும் சேர்ந்து இருப்பது சிறப்பு.
யாழி வாய்க்குள் உருண்டைக்கல் உருள்வது போல் உள்ள சிற்பம் இங்கு உள்ளது, வன்னி மரத்தடியில் சனீஸ்வர பகவான் உள்ளார். மா பலா இலுப்பை மரங்கள்
மூன்றும் ஒரே மரமாக இருப்பது இத்தலத்தின் அதிசயம். தான்தோன்றீசுவரர் வழிபாட்டிற்காக அவ்வாலயத்தில் பலாமரம் ஒன்றை வசிட்டர் உண்டாக்கினார்.
இம்மரத்திற்காக கோயில் கட்டப்படும் காலத்திலேயே மூடுகற்களில் வளைவுகள் வெட்டி ஒதுக்கப்பட்டிருப்பதை பார்க்கையில்இம்மரம் ஆலயத்திற்கு
முற்பட்டதெனத் துணியப்படும். வசிஷ்ட மாமுனி யாகம் செய்ய வேண்டி பரமசிவனை வேண்ட அவர் விரும்பிய வண்ணம் இத்தலத்தில் வசிஷ்ட முனிவர்
தங்கினார்.வசிஷ்டர் செய்த யாக பூமியில் உள்ள திருமண்ணே இன்றும் கோயிலில் திருநீறாக வழங்கப்படுகிறது.வசிஷ்ட முனிவரது யாக சாலையில் பொருந்திய
விபூதியானது மேனியில் பட்டால் மதிக்கத்தக்க செல்வம் பெருகும்.
சுவாமி உளி படாத லிங்கம் சித்திரை 3ம் தேதியிலிருந்து 10ஆம் தேதி வரை சுவாமி மீது சூரியன் ஒளி படுவது சிறப்பு வசிஷ்ட மாமுனி வேள்வி செய்த தலம் என்ற சிறப்பு பெற்றது. ஒரே கல்லிலான குதிரை வாகனம் இத்தலத்தில் உள்ளது.3 சூலாயுதம் போல் சுவாமி அம்பாள் இருவரும் சேர்ந்து இருப்பது சிறப்பு. யாழி வாய்க்குள் உருண்டைக்கல் உருள்வது போல் உள்ள சிற்பம் இங்கு உள்ளது, வன்னி மரத்தடியில் சனீஸ்வர பகவான் உள்ளார்.
மா பலா இலுப்பை மரங்கள் மூன்றும் ஒரே மரமாக இருப்பது இத்தலத்தின் அதிசயம். தான்தோன்றீசுவரர் வழிபாட்டிற்காக அவ்வாலயத்தில் பலாமரம் ஒன்றை வசிட்டர் உண்டாக்கினார். இம்மரத்திற்காக கோயில் கட்டப்படும் காலத்திலேயே மூடுகற்களில் வளைவுகள் வெட்டி ஒதுக்கப்பட்டிருப்பதை பார்க்கையில்இம்மரம் ஆலயத்திற்கு முற்பட்டதெனத் துணியப்படும்.
வசிஷ்ட மாமுனி யாகம் செய்ய வேண்டி பரமசிவனை வேண்ட அவர் விரும்பிய வண்ணம் இத்தலத்தில் வசிஷ்ட முனிவர் தங்கினார். வசிஷ்டர் செய்த யாக பூமியில் உள்ள திருமண்ணே இன்றும் கோயிலில் திருநீறாக வழங்கப்படுகிறது. வசிஷ்ட முனிவரது யாக சாலையில் பொருந்திய விபூதியானது மேனியில் பட்டால் மதிக்கத்தக்க செல்வம் பெருகும். |