பெருமாள் அதிகபட்சமாக நான்கு கைகளுடன் அருள்பாலிப்பார் ஆனால் இங்கு பெருமாள் எட்டு கைகளுடன் அருள்பாலிக்கிறார். இங்குள்ள கருடாழ்வார், ராமாயணத்தில் சீதையைக் காப்பாற்ற முயன்ற ஜடாயுவாகக் கருதப்படுகிறார். ஏனெனில், இறகுகள் கத்தரிக்கப்பட்ட நிலையில் இங்குள்ள கருடன் சிலை உள்ளது. இந்த விஷ்ணுவுக்கு எட்டுக்கரங்கள் உள்ளன. இதில் இரண்டு கைகள் மகாவிஷ்ணுவுக்குரியவை. கீழேயுள்ள இரண்டு கரங்கள் கிருஷ்ணாவதார கைகள்.
நான்கு கைகள் பலராமனுக் குரியவை.இடது கன்னம் பெண் கன்னம். தொட்டுப்பார்த்தால் வழுவழுப்பாக இருக்கும். வலது கன்னம் ஆண் கன்னம். சொர சொரப்பாக இருக்கும். தலைக்கு மேல் ஏழு தலை ஆதிசேஷன் உள்ளது. இடது கால் பெண்கால், இதன் மேல் பகுதியில் "பஞ்சகச்சம்" வைத்து கட்டியது போல புடவை அமைப்பு உள்ளது.வலது ஆண்கால். வலதுபக்கம் பசுவும், கன்றும், இடது பக்கம் பசுவும், காளையும் உள்ளன.
அஷ்டமி, நவமி, ஏகாதசி திதிகளில் மரகதவல்லி மீனாட்சிக்கு அபிஷேகம் நடக்கும். வசிஷ்டர் இந்த சிலையை பிரதிஷ்டை செய்ததாக தல வரலாறு கூறுகிறது.இங்குள்ள கருடாழ்வார், ராமாயணத்தில் சீதையைக் காப்பாற்ற முயன்ற ஜடாயுவாகக் கருதப்படுகிறார். ஏனெனில், இறகுகள் கத்தரிக்கப்பட்ட நிலையில் இங்குள்ள கருடன் சிலை உள்ளது. வாசலில் வீர ஆஞ்சநேயர் உள்ளார். |