பிருகு மகரிஷி, மகாலட்சுமி தன் மகளாகப் பிறக்க வேண்டி கைரவிணி புஷ்கரிணி கரையில் தவமிருந்தார். அவருக்கு ஒரு பங்குனி உத்திர நாளில்,
குளத்தில் ஒரு மலரின் மத்தியில் தவழ்ந்தாள் லட்சுமி. அவளை வளர்த்த பிருகு, திருமணப் பருவத்தில் பெருமாளுக்கே மணம் முடித்துக் கொடுத்தார்.
பிருகு மகரிஷியின் மகளாகப் பிறந்ததால் இவளுக்கு, "பார்க்கவி' என்றும் பெயருண்டு.இவள் சுவாமிக்கு வலப்புறத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறாள்.
வெள்ளிக்கிழமை தோறும் காலையில் விசேஷ ஹோமம், மாலை 6.30 மணிக்கு மணிக்கு, "ஸ்ரீசூக்த வேத மந்திரம்' சொல்லி, "வில்வ இலை'யால்
அர்ச்சனை செய்யப்படுகிறது. இந்த நேரத்தில் தாயாரை வழிபடுவது விசேஷமான பலனைத் தரும். திருமண தோஷம் நீங்க, கல்வி சிறக்க, உடல்
ஆரோக்கியமாக இருக்க வேண்டிக்கொள்ளும் பக்தர்கள், இவளுக்கு வில்வ அர்ச்சனை செய்து, 2 மணிகளை அவளது பாதத்தில் வைத்து பூஜித்து பின்பு,
சன்னதி கதவில் கட்டி வழிபடுகின்றனர். இந்த மணிகள் எப்போதும் ஒலித்து,பக்தர்களின் கோரிக்கைகளுக்காக தாயாரிடம் பிரார்த்தனை செய்வதாக
நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறிய பின்பு, மீண்டும் 2 மணிகளைக் கட்டிவிட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.
பிருகு மகரிஷி, மகாலட்சுமி தன் மகளாகப் பிறக்க வேண்டி கைரவிணி புஷ்கரிணி கரையில் தவமிருந்தார். அவருக்கு ஒரு பங்குனி உத்திர நாளில், குளத்தில் ஒரு மலரின் மத்தியில் தவழ்ந்தாள் லட்சுமி. அவளை வளர்த்த பிருகு, திருமணப் பருவத்தில் பெருமாளுக்கே மணம் முடித்துக் கொடுத்தார். பிருகு மகரிஷியின் மகளாகப் பிறந்ததால் இவளுக்கு, "பார்க்கவி' என்றும் பெயருண்டு.இவள் சுவாமிக்கு வலப்புறத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறாள்.
வெள்ளிக்கிழமை தோறும் காலையில் விசேஷ ஹோமம், மாலை 6.30 மணிக்கு மணிக்கு, "ஸ்ரீசூக்த வேத மந்திரம்' சொல்லி, "வில்வ இலை'யால் அர்ச்சனை செய்யப்படுகிறது. இந்த நேரத்தில் தாயாரை வழிபடுவது விசேஷமான பலனைத் தரும். திருமண தோஷம் நீங்க, கல்வி சிறக்க, உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டிக்கொள்ளும் பக்தர்கள், இவளுக்கு வில்வ அர்ச்சனை செய்து, 2 மணிகளை அவளது பாதத்தில் வைத்து பூஜித்து பின்பு, சன்னதி கதவில் கட்டி வழிபடுகின்றனர்.
இந்த மணிகள் எப்போதும் ஒலித்து,பக்தர்களின் கோரிக்கைகளுக்காக தாயாரிடம் பிரார்த்தனை செய்வதாக நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறிய பின்பு, மீண்டும் 2 மணிகளைக் கட்டிவிட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர். |