தேர்தல் கருத்து கணிப்புகளை கட்டுபடுத்த கோரி, காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் அங்கு நடத்தப்பட்ட தேர்தல் கருத்துக் கணிப்பில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிய வந்துள்ளது. மேலும் டெல்லியில் காங்கிரஸ் வேட்பாளர் ஷீலா தீட்சித் தோல்வி அடைவார் என்றும், ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. இந்த கருத்துகணிப்பால் கவலை அடைந்துள்ள காங்கிரஸ் கட்சி, தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், இந்த மாதிரியான கருத்துக் கணிப்புகளில் நன்பகத்தன்மை இல்லை என்றும், அதன் முடிவுகள் மக்கள் மனதை மாற்ற தவறாக பயன்படுத்தப்படும் என்றும் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.
|