மூலவர் வீரராகவர் முன்புறம் அஞ்சலி ஹஸ்த கோலத்தில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை கிருஷ்ணபரம
ராஜன் எனும் மன்னர் ஆட்சி செய்து வந்தார். வரதராஜபெருமாளின் சிறந்த பக்தரான இவர், ஒருசமயம் தாமிரபரணியிலுள்ள பத்மநாபதீர்த்தத்தில் குளித்துக்கொண்டிருந்த போது நீலநிற கல்லால் ஆன பெருமாள் சிலை கிடைத்தது. அதை தனியே கோயில் அமைத்து பிரதிஷ்டை செய்தார். வரதராஜப் பெருமாள் என திருநாமம்சூட்டினார்.ஒருமுறை எதிரி நாட்டு அரசர், கிருஷ்ணராஜ மன்னர் மீது போர் தொடுத்து வந்தார். சிலை கிடைத்த பிறகு பெருமாள் வழிபாட்டில் மட்டுமே கவனம் செலுத்தியதால், போரில் எதிரி மன்னரை எதிர்த்துப் போரிட தக்க படைபலமின்றி இருந்தார். தனது நாட்டு மக்களைக்காத்து அருள்புரிந்திடும்படி பெருமாளிடம் மனம் இரங்கி முறையிட்டார்.அவரது முறையீட்டிற்கு செவிசாய்த்த பெருமாள், மன்னர் வேடத்தில் போர்க்களத்திற்கு சென்று எதிரிநாட்டுப் படை வீரர்களை எதிர்த்து போரிட்டு வெற்றி பெற்றார்.இவ்வாறு, மன்னருக்காக போர்க்களத்தில் வீரத்தளபதியாக அவதரித்து வந்த பெருமாளே இவ்விடத்தில் மூலவராக வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.
மூலவர் வீரராகவர் முன்புறம் அஞ்சலி ஹஸ்த கோலத்தில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை கிருஷ்ணபரமராஜன் எனும் மன்னர் ஆட்சி செய்து வந்தார். வரதராஜபெருமாளின் சிறந்த பக்தரான இவர், ஒருசமயம் தாமிரபரணியிலுள்ள பத்மநாபதீர்த்தத்தில் குளித்துக்கொண்டிருந்த போது நீலநிற கல்லால் ஆன பெருமாள் சிலை கிடைத்தது.
அதை தனியே கோயில் அமைத்து பிரதிஷ்டை செய்தார். வரதராஜப் பெருமாள் என திருநாமம்சூட்டினார்.ஒருமுறை எதிரி நாட்டு அரசர், கிருஷ்ணராஜ மன்னர் மீது போர் தொடுத்து வந்தார். சிலை கிடைத்த பிறகு பெருமாள் வழிபாட்டில் மட்டுமே கவனம் செலுத்தியதால், போரில் எதிரி மன்னரை எதிர்த்துப் போரிட தக்க படைபலமின்றி இருந்தார். தனது நாட்டு மக்களைக்காத்து அருள்புரிந்திடும்படி பெருமாளிடம் மனம் இரங்கி முறையிட்டார்.
அவரது முறையீட்டிற்கு செவிசாய்த்த பெருமாள், மன்னர் வேடத்தில் போர்க்களத்திற்கு சென்று எதிரிநாட்டுப் படை வீரர்களை எதிர்த்து போரிட்டு வெற்றி பெற்றார். இவ்வாறு, மன்னருக்காக போர்க்களத்தில் வீரத்தளபதியாக அவதரித்து வந்த பெருமாளே இவ்விடத்தில் மூலவராக வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். |