2012 ம் ஆண்டு இந்தியாவில் பல்வேறு விரும்பத்தக்க மற்றும் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெற்றன.அந்த நிகழ்வுகளை கோர்வைகளாக கோர்த்து வரிசை படுத்தி இருக்கிறது வலைத்தமிழ்.காம் இணையத்தளம்.
ஜனவரி
2 : சீனாவில் சிறை பிடிக்கப்பட்ட இரண்டு இந்தியர்களை விடுவிக்க சென்ற இந்திய தூதரக அதிகாரி சீனாவில் தாக்கப்பட்டார்.
3 : முல்லை பெரியாறு ஆணை நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என்ற கேரளா அரசின் கோரிக்கையை கேரளா நீதி மன்றம் நிராகரிப்பு
14 : ஊதிய பிரச்சனை காரணமாக இந்திய விமானிகள் வேலைநிறுத்தம்.பல விமானங்கள் ரத்து.
25: இஸ்ரோ தலைவராக இருந்த மாதவன் நாயர் அரசு பதவியில் இருந்து நீக்கியது மத்திய அரசு.
பிப்ரவரி
8:கர்நாடக சட்டசபையில் ஆபாச படம் பார்த்த மந்திரிகள் ராஜினாமா.
13 : வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணம் 24 லட்சம் கோடி என CBI இயக்குனர் அறிவிப்பு.
மார்ச்
3 : இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக விக்ரம்சிங் நியமனம்
6 : உத்திரபிரதேச சட்ட சபை தேர்தலில் முலாயம் சிங் வெற்றி
10 : உத்திர பிரதேச முதல் மந்திரியாக அகிலேஷ் யாதவ் பதவி ஏற்பு
14 : ரயில்வே பட்ஜெட்டில் பயணசீட்டு கட்டணம் உயர்த்தப்பட்டது.
16 : வருமான வரி உச்ச வரம்பு 2 லட்சமாக உயர்வு.
18 :மம்தா-வின் எதிர்ப்பை அடுத்து ரயில்வே அமைச்சர் பதவியில் இருந்து தினேஷ் திரிவேதி ராஜினாமா.
21 : ஓரின சேர்க்கையை சுப்ரீம் கோர்ட் சட்டபூர்வமாக அங்கீகரித்தது.
25 : டெல்லியில் உண்ணாவிரதம் மேற்கொண்டர் அன்னா ஹசாரே.
ஏப்ரல்
8 : டெல்லி வந்த பாகிஸ்தான் அதிபருடன் மன்மோகன் சிங் சந்தித்து பேசினார்.
9 : இலங்கையில் தமிழர்களின் மறுவாழ்வு பணிகளை பார்வையிடுவதற்காக சுஷ்மா தலைமையிலான எதிர்கட்சி குழு இலங்கை பயணம்.
19 : கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கி அழிக்க கூடிய அக்னி -5 ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக செய்துமுடித்தது.
21 : சத்தீஸ்கர் மாநிலத்தில் தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகள் கலெக்டர் அலெக்ஸ் பால்மேணனை கடத்தி சென்றனர்.
26 : இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் டெல்லி மேல்சபை எம்.பி யாக மத்திய அரசு நியமித்தது.
சட்டபூர்வ செக்ஸ் உறவுக்கு வயது வரம்பை 18 ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு.
மே
3 : மாவோஸ்டுகள் கடத்திய அலெக்ஸ் பால்மேனன் விடுதலை.
4 : முல்லை பெரியாறு ஆணை உறுதியாக இருப்பதாகவும், மாற்று அணை தேவையில்லை என நீதிபதிகள் குழு அறிவிப்பு.
13 : பாராளுமன்றத்தின் 60 -வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
15 : 2ஜி வழக்கில் ராசாவுக்கு விடுதலை
22 : மத்திய அரசின் மீது நிலக்கரி ஊழல் புகார்.
23 : பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 7.50 உயர்வு.
24 : ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி
28 : டெல்லியில் நடைபெற்ற காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக மறுப்பு.
31 : பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
ஜீன்
3 : டெல்லியில் அன்னா ஹசாரேவுடன் பாபா ராம்தேவ் உண்ணா விரதம்.
5 : இரயில் பார்சல் கட்டணம் 25 % அதிகரிப்பு.
6: தலைமை தேர்தல் கமிஸ்னராக வி,எஸ். சம்பத் நியமனம்
8 : உத்திர பிரதேச பாராளுமன்ற இடைதேர்தல் அகிலேஷ் யாதவ் மனைவி போட்டியின்றி தேர்வு.
11. ராணுவ ஊழல் தொடர்பாக BEML தலைவர் நடராஜனை மத்திய அரசு பணி நீக்கம் செய்தது.
13 : தலைமறைவாக இருந்த நித்தியானந்தா சரண் அடைந்தார்.
15 : குடியரசு தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளராக பிரணாப் முகர்ஜி அதிகாரபூர்வ அறிவிப்பு.
20 : தேசியவாத கட்சியில் இருந்து பி.ஏ. சங்கமா விலகல்.
25 : மும்பை தாக்குதலின் முக்கிய தீவிரவாதி சவூதி அரேபியாவில் கைது.
26 : ஊழல் வழக்கி சிக்கிய மத்திய மந்திரி வீரபத்திர சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
28 : கச்சா எண்ணை விலை குறைந்ததை அடுத்து பெட்ரோல் விலை ரூ.3.13 குறைக்கப்பட்டது.
29 : தட்கல் டிக்கெட் முன்பதிவு காலை 10 முதல் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்தது.
ஜூலை
5 : திருவனந்தபுரம் பத்மநாப கோவில் ரகசிய அறைகள் திறக்கப்பட்டு கோடிக்கணக்கான தங்க வைர நகைகள் கண்டுபிடிக்கப்பட்டது.
16 : பா.ஜ.கா வின் துணை ஜனாதிபதி வேட்பாளராக ஜஸ்வந்த் சிங் அறிவிப்பு.
19 : இந்திய ஜனாதிபதி தேர்தலுக்கான ஒட்டு பதிவு நடைபெற்றது.
20 : ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜி அமோக வெற்றி.
23 : சுதந்திர போராட வீராங்கனை லட்சுமி செகல் மரணம்.
25 : இந்தியாவின் 13-வது ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி பதவி ஏற்றார்.
29 : வலுவான லோக்-பால் மசோதாவை நிறைவேற்ற கோரி அன்னா ஹசாரே மீண்டும் உண்ணாவிரதம்.
ஆகஸ்ட்
7 : துணை ஜனாதிபதியாக ஹமிது அன்சாரி வெற்றி.
9: ராம்லீலா மைதானத்தில் பாபா ராம் தேவ் உண்ணாவிரதம்.
14 : மத்திய மந்திரி விலாஸ்ராவ் தேஷ்முக் மரணம்
ராம் தேவ் போராட்டம் வாபஸ் பெற்றார்.
17 : நிலக்கரி ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு 3 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய தணிக்கை துறை அறிவிப்பு.
20 : வட மாநிலங்களில் ஏற்பட்ட வதந்தியை அடுத்து 250 இணைய தளங்கள் அரசால் தடை செய்யப்பட்டது.
21 : நிலக்கரி ஊழல் விவகாரத்தால் பிரதமர் பதவி விலக எதிர் கட்சிகள் போர்க்கொடி,பாராளுமன்றத்தில் இரு அவைகளும் முடங்கின.
24 : மத்திய தணிக்கை குழுவின் அறிக்கை தவறானது என மத்திய அரசு விளக்கம்.
26 : அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் பிரதமர், சோனியா வீடுகளை முட்றுகையிட்டனர்.
29 : சுப்ரீம் கோர்ட் அஜ்மல் கசாப்பின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.
31 : ராஜினாமா செய்யும் பேச்சிற்கே இடமில்லை என பிரதமர் திட்டவட்ட அறிவிப்பு.
செப்டம்பர்
4 : அரசு பணி பதவி உயர்வில் SC/ST இனத்தவருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல்.
8 : இந்தியாவின் நூறாவது ராக்கெட் BSLV-C 21 வெற்றிகரமாக ஏவப்பட்டது.
13 : டீசல் விலை ரூ.5 உயர்த்தப்பட்டது.
14 : டீசல் விலை உயர்வுவை திரும்ப பெற மத்திய அரசுக்கு மம்தா பானார்ஜி இரண்டு நாட்கள் கெடு.
17 : ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கடத்த முயன்ற அப்துல் ரகுமானை போலீசார் கைது செய்தனர்.
18 : ஐ.மு.க கூட்டணியில் இருந்து மம்தா பானார்ஜியின் திரினாமூல் காங்கிரஸ் விலகல்.
19 : டெல்லியில் நடைபெற்ற காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில் தமிழகத்துக்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீர் தரும்படி பிரதமர் உத்தரவு.கர்நாடக முதல்வர் வெளிநடப்பு.
இலங்கை அதிபர் வருகையை எதிர்த்து மத்திய பிரதேசத்தில் ஆர்பாட்டம் நடத்த சென்ற வைகோ மற்றும் அவரது கட்சியினர் அம்மாநில போலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
20 : டீசல் விலை உயர்வு- காஸ் சிலிண்டர் கட்டுபாடு ஆகியவற்றை எதிர்த்து எதிர்கட்சிகள் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம்.
இலங்கை அதிபருடன்,பிரதமர் மற்றும் குடியரசு தலைவர் சந்திப்பு.
28 : தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகாவிற்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை.
அக்டோபர்
2 : அரவிந்த் கெஜ்ரிவால் புதிய கட்சியை தொடங்குவதாக அறிவிப்பு.
4 : மத்திய நிபுணர் குழு காவிரி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகம் - தமிழகத்தில் ஆய்வு.
5 : பிரியங்க கணவர் ராபர்ட் வதேராவுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றசாட்டு.
ஊழல் புகார் காரணமாக கோவாவில் உள்ள இரும்பு தாது சுரங்கத்துக்கு தடை விதித்தது மத்திய அரசு.
11 : மன்மோகன் சிங்குடன் இலங்கை தமிழ் எம்.பிக்கள் சந்தித்தனர்.
15 : அந்நிய முதலீடுக்கு சுப்ரீம் கோர்ட் ஆதரவு தீர்ப்பு
27 : மத்திய மந்திரி சபையில் பெரிய மாற்றம் செய்யப்பட்டு 22 புதிய மந்திரிகள் நியமிக்கப்பட்டனர்.
நவம்பர்
2 : மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன் இலாக்க மாற்றப்பட்டு புதிய மற்றும் புதுபிக்கத்தக்க எரி சக்தி துறை மந்திரியாக நியமிக்கப்பட்டார்.
9 : சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் பதுக்கியவர்களின் பட்டியலை வெளியிட்டார் அரவிந்த் கெஜ்ரிவால்.
17 : சிவசேனா கட்சி தலைவர் பால்தாக்கரே மரணமடைந்தார்.
18 : பால் தாக்கரேவின் இறுதி ஊர்வலத்தில் 20 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.
20 : பால் தாக்கரே மறைவையொட்டி நடைபெற்ற கடை அடைப்புக்கு இணையதளத்தில் கருத்து தெரிவித்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
24 : மத்திய அரசு பயனாளிகளின் மானிய தொகையை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தும் திட்டத்தை ஜனவரி - 1 முதல் நடைமுறை படுத்தப்படும் என அறிவித்தது.
27 : சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடுக்கு அனுமதி வழங்கும் மசோதாவுக்கு வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த மத்திய அரசு ஒப்பு கொண்டது.
28 : கர்நாடக முன்னாள் முதல்வர் எடியுரப்பா கர்நாடக ஜனதா என்ற புதிய கட்சியை தொடங்கினார்.
முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜரால் மரணம்.
டிசம்பர்
5 : சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான வாக்கெடுப்பில் காங்கிரஸ் கூட்டனி வெற்றி பெற்றது.
6 : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஏற்று கர்நாடகா காவிரியில் தண்ணீர் திறப்பு.
7 : சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான வாக்கெடுப்பில் மேல் சபையிலும் காங்கிரஸ் வெற்றி.
8 : தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்த கோரி மண்டியாவில் முழு அடைப்பு போராட்டம்.
10 : தமிழகத்துக்கு 12 tmc தண்ணீர் திறந்து விட சுப்ரீம் கோர்ட் உத்தரவு.
வால் மார்ட் நிறுவனம் இந்தியாவில் கடைகளை திறக்க 125 கோடி செலவு செய்யப்பட்டதாக வெளியிடப்பட்ட அறிக்கையை அடுத்து மேல்-சபையில் எதிர் கட்சிகள் இதனை விசாரிக்க கோரினார்கள்.
16 : ஓடும் பஸ்ஸில் காம கொடுரன்களால் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
20 : குஜராத் சட்டசபை தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்றார், இமாச்சல பிரதேச சட்ட சபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றது.
21 : உலகம் அழியும் என மாயன் கலான்டரின் கணிப்பு பொய்யானது.
24 : ரஷ்ய அதிபர் டெல்லி வந்தார்.இந்திய - ரஷ்யா இடையே பத்து ஒப்பந்தங்க கையெழுத்தாயின.
26 : ஓடும் பஸ்ஸில் கற்பழிக்கப்பட்ட மாணவி மேல் சிகிச்சைக்காக சிங்கபூர் அனுப்பப்பட்டார்.
27 : தேசிய வளர்ச்சி குழுகூடத்தில் பேசுவதற்கு குறைவான நேரம் ஒதுக்க பட்டதாக கூறி தமிழக முதல்வர் வெளிநடப்பு.
29 : சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவ மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
|