LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் மொழி

ஆதிசிவனால் அருளப்பட்டு அகத்தியரால் வளர்க்கப்பட்ட மொழி - ஆர். வெங்கட்ராமன்

தமிழ்மொழி உலகிலேயே தொன்மையான மொழி. அதன் காலத்தைக் கண்டறிந்தார் எவரும் இலர். ""கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி'' என்று பாராட்டப்படுவது.

பலபல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் "லெமூரியா' என்ற கண்டம் தமிழகத்துடன் தென்பகுதியில் நிலவியிருந்தது எனவும், அது கடலால் கொள்ளப்பட்டுவிட்டது எனவும், இமயம் அதன் பின்பே தோன்றியது எனவும் புவி இயல் ஆராய்ச்சியாளர் கருத்து வெளியிட்டிருக்கின்றனர். இதனைப் பலமுறை கடலால் அழிக்கப்பட்ட குமரிக்கண்டம் என ஏற்பதற்குச் சான்றுகள் பல உள.தமிழ்மொழி ஆதிசிவனால் அருளப்பட்டு அகத்தியரால் வளர்க்கப்பட்டது என்பது பாரதியார் வாக்கு.

""வடமொழியைப் பாணினிக்கு வகுத்து அருளி அதற்கு இணையாத் தொடர்புடைய தென்மொழியை உலகமெலாம் தொழுது ஏத்தும் குடமுனிக்கு வகுத்துஅளித்தார் கொல் ஏற்றுப் பாகர் எனில் கடல்வரைப்பில் அதன்பெருமை யாவரே கணித்து அறிவார்''என்று காஞ்சிப் புராணத்தில் கூறியுள்ளது, தமிழ்மொழியின் தொன்மையையும் சிறப்பையும் எடுத்துக்காட்டுகின்றது. இலக்கியம், இசை, நாடகம், கணிதம், வைத்தியம் என்ற எண்ணற்ற துறைகளிலும் தமிழ்மொழி உலகுக்கு முன்னோடியாக இருந்துள்ளது. அதன் இனிமையும், எளிமையும், ஆழ்ந்த சிந்தனைகளும் உள்ளம் கவர்கொள்வன. ""யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்'' என்ற புலமை வாக்குப் பொய்யாகாது.

தமிழ்மொழி, தமிழ்க்கலை, தமிழ்ப்பண்பாடு அனைத்தும் உலகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவியிருந்ததென்பது உலகறிந்த உண்மை. ""திரைகடல் ஒடியும் திரவியம் தேடு''வது தமிழர் பண்பு அதே வழியில் இன்று தமிழர்கள் இல்லாத நாடுகள் இல்லையென்றே சொல்லாம்.

by Swathi   on 27 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.