இத்தல அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.சுயம்புவாகத் தோன்றிய கவுமாரியம்மன் வளம் கொழிக்கும் வராக நதியின் தென்கரையில் வீற்று பக்தர்களுக்கு அருள் புரிகிறாள்.மேலும், இத்தலத்தில் அம்பாள் அமர்ந்து அருள்புரிவதாலேயே இப்பகுதி விவசாயத்தில் சிறந்தும், குறிப்பாக மாம்பழ விளைச்சலில் முன்னிலை பெற்றும் திகழ்கிறது என்று மக்கள் நம்புகின்றனர்.
அம்மை மற்றும் தோல் சம்பந்தமான நோயால் தாக்கப்பட்டவர்கள் இத்தலத்திற்கு வந்து வராக நதியில் நீராடி, அம்பாளை வணங்கி கோயிலில் தரும் தீர்த்தத்தை பருகிட நோய் நீங்கும் என்பது நம்பிக்கை.திருப்புகழில் குழந்தை மாநகர் என குறிப்பிடப்பட்டுள்ள பெரியகுளம் நகரில் கிழக்கு நோக்கியபடி காவல் தெய்வமாக கவுமாரியம்மன் திகழ்கிறாள். |