இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலம் சைவ-வைணவ ஒற்றுமை தலமாக விளங்குகிறது.முன்பு பெரிய அளவில் இருந்த இக்கோயில்
காலப்போக்கில் நந்தி சிலையுடன், லிங்கம் போன்ற தோற்றத்துடன் சிறுகல்லாக உள்ள இடமாக மட்டுமே காட்சி தருகிறது. "தென்திருவண்ணாமலை'
என்றழைக்கப்படும் இத்தலத்தில் பரமசிவனுக்கு திருத்தலம் அமைக்க முற்பட்ட போது கிடைத்த சுயம்பு லிங்கமாகவும், கோயிலின் பின்புறம் அமைந்துள்ள
கூவலிங்க மலையில் தினமும் மாலையில் ஜோதி வடிவிலும் காட்சி தருகிறார்.இவ்விடத்தில் தினமும் உச்சிகால பூஜை நடைபெறும் நேரத்தில் இத்தலத்திற்கு
வரும் வெள்ளைக் கழுகு ஒன்று சுயம்புவிற்கு மேலே மூன்று முறை சுற்றிவிட்டுச் செல்வதாக நேரில் கண்ட பக்தர்களும், பூசாரிகளும்
தெரிவிக்கின்றனர்.இத்தலத்தின் வட கிழக்கில் மரக்காலிங்கம், தென்மேற்கில் ஜோதி லிங்கம், தென்கிழக்கில் மல்லிங்கேஸ்வரர், வடமேற்கே மேலசொக்கையா
என நான்கு திசைகளிலும் சுயம்பு லிங்கங்கள் மலைகளில் அமைந்ததுடன், மலைகளே லிங்கம் போல காட்சி தரும் அதிசங்களின் நடுவே, பரமசிவன் காட்சி
தருவது சிறப்பு.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலம் சைவ வைணவ ஒற்றுமை தலமாக விளங்குகிறது. முன்பு பெரிய அளவில் இருந்த இக்கோயில் காலப்போக்கில் நந்தி சிலையுடன், லிங்கம் போன்ற தோற்றத்துடன் சிறுகல்லாக உள்ள இடமாக மட்டுமே காட்சி தருகிறது. "தென்திருவண்ணாமலை' என்றழைக்கப்படும் இத்தலத்தில் பரமசிவனுக்கு திருத்தலம் அமைக்க முற்பட்ட போது கிடைத்த சுயம்பு லிங்கமாகவும், கோயிலின் பின்புறம் அமைந்துள்ள கூவலிங்க மலையில் தினமும் மாலையில் ஜோதி வடிவிலும் காட்சி தருகிறார்.
இவ்விடத்தில் தினமும் உச்சிகால பூஜை நடைபெறும் நேரத்தில் இத்தலத்திற்கு வரும் வெள்ளைக் கழுகு ஒன்று சுயம்புவிற்கு மேலே மூன்று முறை சுற்றிவிட்டுச் செல்வதாக நேரில் கண்ட பக்தர்களும், பூசாரிகளும் தெரிவிக்கின்றனர். இத்தலத்தின் வட கிழக்கில் மரக்காலிங்கம், தென்மேற்கில் ஜோதி லிங்கம், தென்கிழக்கில் மல்லிங்கேஸ்வரர், வடமேற்கே மேலசொக்கையா என நான்கு திசைகளிலும் சுயம்பு லிங்கங்கள் மலைகளில் அமைந்ததுடன், மலைகளே லிங்கம் போல காட்சி தரும் அதிசங்களின் நடுவே, பரமசிவன் காட்சி தருவது சிறப்பு. |