பவுர்ணமி, அமாவாசை நாட்களில் இரவில் ஹோமத்துடன், நாககாளியம்மனுக்கு பூஜை நடக்கும். பவுர்ணமி இரவு பூஜைக்குப்பின், அம்பிகைக்கு பிரசித்தி பெற்ற 108 அம்பிகையரில் ஒருவரைப்போல அலங்காரம் செய்கின்றனர். உதாரணமாக சமயபுரம் மாரியம்மன், மதுரை மீனாட்சியம்மன் போன்ற அலங்காரங்கள் செய்யப்படும். மார்கழியில் ஆண்டாள் அலங்காரம் செய்யப்படுவது விசேஷம்.
சரஸ்வதி பூஜையன்று அம்பிகை வெண்ணிற பட்டு அணிந்து சரஸ்வதியாக காட்சி தருவாள். அன்று, தாமரை மொட்டால் குழந்தைகள் நாக்கில் எழுதி அட்சராப்பியாசம் செய்கின்றனர். அந்தந்த ஊர்களிலுள்ள அம்பிகைக்கு எந்த முறைப்படி பூஜை நடக்குமோ, அதே போல இங்கும் பூஜை நடக்கும். நைவேத்யமும் மாறுபடும். அடுத்த பவுர்ணமி வரையில் அம்பிகை இதே அலங்காரத்தில் காட்சி தருவது இன்னும் விசேஷம்.இங்குள்ள சொர்ணலிங்கேஸ்வரர் அஷ்டோத்ர லிங்கமாக காட்சி தருகிறார். |