இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் உப்பு மண் விபூதி பிரசாதமாக வழங்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் திருப்பணிக்காக கோயிலை தோண்டும் போது ஒரு நீண்ட கல் கண்டெடுக்கப்பட்டது. அதில் ஒரு குதிரையும், ஒரு மரமும், அதன் கீழ் உள்ள லிங்கத்தை பார்வதி தேவி பூஜை செய்வது போலவும் செதுக்கப்பட்டிருந்தது. சிவனுக்கு ரிஷபமே வாகனம்.
ஆனால், இங்கு குதிரை வாகனமாக சுவாமி வந்துள்ளது விசேஷ அம்சம்.பார்வதி பூஜை செய்து வரம் பெற்றதை போன்று வடிக்கப்பட்டிருப்பதால், பெண்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற இந்த சிலையை வணங்கி பயனடைகிறார்கள். திருமணத் தடை உள்ள பெண்கள் அம்பிகையை வணங்கி, நலம் பெறுகின்றனர்,'' என்றார். |