இத்தலத்தில் அம்பிகை புற்று வடிவில் அருள்பாலிக்கிறாள்,இத்தலத்தில் வளையல் பிரசாதமாக தரப்படுகிறது.இக்கோயில் நான்கு பகுதிகளிலும் வயல்கள் சூழ்ந்து நடுவில் அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ளது. பொதுவாக அம்பாள் கோயில்கள் வடக்கு பார்த்துதான் இருக்கும். ஆனால், இக்கோயிலில் அம்பாள் தெற்கு நோக்கியிருப்பது விசேஷம்.
இக்கோயிலுக்கு எதிரேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் கோயில் கொண்டுள்ள கண்ணகி, வடக்கு நோக்கியிருக்கிறாள். இதனை இரு அம்பாள்களும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டிருக்கிறார்கள். இங்கு அம்பாளைவிட புற்று விசேஷமானதாக கருதப்பட்டு வணங்கப்படுகிறது. இவ்வூருக்கு அருகில் கம்பத்தில் உள்ள கம்பராய பெருமாளுக்கு, சாமாண்டி அம்மன் தங்கை முறை என்று பாவித்து வருகின்றனர். |