LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் இலக்கணம் (Tamil Grammar )

மொழிப் பயிற்சி – 48 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! – கவிக்கோ ஞானச்செல்வன்

 

எழுதிவரும்போது இடையில் சில பகுதிகளை விட்டுவிட்டு எழுதுவதைக் காட்ட
(.....) தொடர் விடுபாட்டுக் குறியிடல் வேண்டும்.
ஒரு சொல் அல்லது பகுதிக்கு விளக்கம் கீழே தரப்பட்டிருந்தால் அச்சொல்லோடு * உடுக்குறி இடல் வேண்டும். ஒரு கருத்தை மீண்டும் எழுதும்போது அல்லது ஒருவர் பெயரே மீண்டும் வரும் போது மேற்படிக் ('') குறியிடல் வேண்டும்.
ஒரு வாக்கியத்தில் அமைந்த சொற்களுக்கு இடையே - விளக்கம் தரும் வகையில் வேறொரு சொல் இடைப்பட வரும்போது இடைப்பிறவரல் குறி (-......-) இடல் வேண்டும்.
(எ-டு) நீ எப்போதும் வெற்றி பெறுவாய் - நேர்மையாக நடந்தால் - என்பதை மறவாதே.
ஒரு சொல்லுக்கு விளக்கம் தர வேறொரு சொல் எழுதப்பட்டால் சிறுகோடு (-) இடப்படுதல் வேண்டும்.
(எ-டு) அந்தக் காட்சி அளவிடற்கரிய வியப்பை - ஆச்சர்யத்தை உண்டாக்கியது.
அது அவன் மனதில் பசுமையாக - அழுத்தமாகப் பதிந்துவிட்டது.
அடைப்புக்குள் எழுதப்படும் செய்திகளுக்குப் பிறைக்குறி இட வேண்டும். சில இடங்களில் அடைப்புக் குறிக்கும் மேல் பகர அடைப்பு ள ன வருதலும் உண்டு.
விளிப்பெயர்களில் காற்புள்ளிதான் இட வேண்டும். உணர்ச்சிக்குறிகளைப் போட்டு எழுதுதல் பிழை. இராமா, முருகா, நண்பா, அண்ணா என்பதுபோல் வர வேண்டும். இராமா! முருகா! நண்பா! அண்ணா! என்றெழுதிட வேண்டா.
மாற்றமும் மகிழ்ச்சியும்
நமது செய்தி ஏடுகளில் பல்லாண்டுகளாக எழுதப்பட்ட கருப்பு எனும் சொல் இப்போது கறுப்பு எனச் சரியாக எழுதப்படுகிறது. இயக்குனர் எனும் தவறான சொல்லும் இயக்குநர் என்று சரியாக எழுதப்படுகிறது. தொலைக்காட்சி எழுத்துகளிலும் இம்மாற்றம் கண்டு மனம் மகிழ்ச்சியடைகிறது. இன்னும் மேலாக, ""உங்களைப் பாதுகாப்பது மிகவும் இடரான வேலையாகிவிடும்'' என்ற வாக்கியத்தைப் பார்த்தபோது மகிழ்ச்சி இரட்டிப்பானது.
"கஷ்டமான வேலையாகிவிடும்' என்பதுதான் நடைமுறையில் இருந்தது. வன்முறைச் சம்பவங்களால் பதற்றம் நிலவுகிறது என்பதைப் பார்த்தபோதும் மகிழ்ச்சியே. பதட்டம் என்றே எழுதிவந்தார்கள். மாற்றம் வரவேற்கத்தக்கது. வன்முறை நிகழ்வுகளால் (சம்பவங்களால்) என்று எழுதியிருப்பின் இன்னும் சிறப்புடைத்தாகும்.
"குழந்தையின்மைக்குக் காரணிகள் என்ன?' ஏதோ ஒரு விளம்பரத்தில் படித்ததாக நினைவு. எவை என்னும் பன்மைச் சொல்லைப் பொதுவாகப் பலரும் மறந்துவிட்டோம். "விலைவாசி உயர்வுக்குக் காரணங்கள் என்ன?' " ஊழல் பெருகிவிட்டதன் அடிப்படைகள் என்ன?' என்றே பலகாலும் கேட்க நேர்கிறது. பன்மையில் "கள்' ஈறு பெற்று வரும்போது எவை எனச் சொல்ல வேண்டும் என்பதை மறக்கலாமா? அடிப்படை என்ன? என்றால் போதுமே. அடிப்படைகள் என்று தேவையின்றிக் "கள்' விகுதி ஏன்?
ஓர் ஐயமும் விளக்கமும்
செய்தி ஏடுகளில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது என்று எழுதுகிறார்கள். இதன் பொருள் என்ன? ஆர்ப்பு என்றால் ஒலித்தல் (ஓலி). ஆட்டம் என்பது ஆடுவது. கறுப்புக் கொடிக்கும் ஒலித்து ஆடுவதற்கும் என்ன தொடர்பு? இவ்வாக்கியம் கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்றிருந்தால் சரியாயிருக்கும். ஆர்ப்பாட்டம் என்பதும் தொடர் முழக்கம் (கோஷம் போடுதல்) என்பதையே குறிக்கிறது போலும்! எப்படியோ நம்மவர்க்கு இத்தொடர் நன்கு பழகிவிட்டது.
புறமும் புரமும்
நாட்டுப்புறப் பாடல்கள் என்று சொன்னால் நன்கறிவோம். கிராமியப் பாடல்கள் என்றும் சொல்வதுண்டு. அண்மையில் ஒரு பாட நூலில் நாட்டுப்புரப் பாடல்கள் என்று அச்சிட்டிருப்பதாக அறிகிறோம். நாட்டுப்புரம் என்பதே சரி என்றும் வாதிடுகிறார்களாம் சிலர். புறம் என்பது தூய தமிழ்ச் சொல்; புறநானூறு நாமறிவோம். புறஞ்சேரி இறுத்த காதை சிலப்பதிகாரத்தில் உள்ளது. இந்நாளில் புறநகர் என்று சொல்லுகிறோமே அதுவே புறஞ்சேரி எனப்பட்டது.

 

எழுதிவரும்போது இடையில் சில பகுதிகளை விட்டுவிட்டு எழுதுவதைக் காட்ட

 

(.....) தொடர் விடுபாட்டுக் குறியிடல் வேண்டும்.

 

ஒரு சொல் அல்லது பகுதிக்கு விளக்கம் கீழே தரப்பட்டிருந்தால் அச்சொல்லோடு * உடுக்குறி இடல் வேண்டும். ஒரு கருத்தை மீண்டும் எழுதும்போது அல்லது ஒருவர் பெயரே மீண்டும் வரும் போது மேற்படிக் ('') குறியிடல் வேண்டும்.

 

ஒரு வாக்கியத்தில் அமைந்த சொற்களுக்கு இடையே - விளக்கம் தரும் வகையில் வேறொரு சொல் இடைப்பட வரும்போது இடைப்பிறவரல் குறி (-......-) இடல் வேண்டும்.

 

(எ-டு) நீ எப்போதும் வெற்றி பெறுவாய் - நேர்மையாக நடந்தால் - என்பதை மறவாதே.

 

ஒரு சொல்லுக்கு விளக்கம் தர வேறொரு சொல் எழுதப்பட்டால் சிறுகோடு (-) இடப்படுதல் வேண்டும்.

 

(எ-டு) அந்தக் காட்சி அளவிடற்கரிய வியப்பை - ஆச்சர்யத்தை உண்டாக்கியது.

 

அது அவன் மனதில் பசுமையாக - அழுத்தமாகப் பதிந்துவிட்டது.

 

அடைப்புக்குள் எழுதப்படும் செய்திகளுக்குப் பிறைக்குறி இட வேண்டும். சில இடங்களில் அடைப்புக் குறிக்கும் மேல் பகர அடைப்பு ள ன வருதலும் உண்டு.

 

விளிப்பெயர்களில் காற்புள்ளிதான் இட வேண்டும். உணர்ச்சிக்குறிகளைப் போட்டு எழுதுதல் பிழை. இராமா, முருகா, நண்பா, அண்ணா என்பதுபோல் வர வேண்டும். இராமா! முருகா! நண்பா! அண்ணா! என்றெழுதிட வேண்டா.

 

மாற்றமும் மகிழ்ச்சியும்

 

நமது செய்தி ஏடுகளில் பல்லாண்டுகளாக எழுதப்பட்ட கருப்பு எனும் சொல் இப்போது கறுப்பு எனச் சரியாக எழுதப்படுகிறது. இயக்குனர் எனும் தவறான சொல்லும் இயக்குநர் என்று சரியாக எழுதப்படுகிறது. தொலைக்காட்சி எழுத்துகளிலும் இம்மாற்றம் கண்டு மனம் மகிழ்ச்சியடைகிறது. இன்னும் மேலாக, ""உங்களைப் பாதுகாப்பது மிகவும் இடரான வேலையாகிவிடும்'' என்ற வாக்கியத்தைப் பார்த்தபோது மகிழ்ச்சி இரட்டிப்பானது.

 

"கஷ்டமான வேலையாகிவிடும்' என்பதுதான் நடைமுறையில் இருந்தது. வன்முறைச் சம்பவங்களால் பதற்றம் நிலவுகிறது என்பதைப் பார்த்தபோதும் மகிழ்ச்சியே. பதட்டம் என்றே எழுதிவந்தார்கள். மாற்றம் வரவேற்கத்தக்கது. வன்முறை நிகழ்வுகளால் (சம்பவங்களால்) என்று எழுதியிருப்பின் இன்னும் சிறப்புடைத்தாகும்.

 

"குழந்தையின்மைக்குக் காரணிகள் என்ன?' ஏதோ ஒரு விளம்பரத்தில் படித்ததாக நினைவு. எவை என்னும் பன்மைச் சொல்லைப் பொதுவாகப் பலரும் மறந்துவிட்டோம். "விலைவாசி உயர்வுக்குக் காரணங்கள் என்ன?' " ஊழல் பெருகிவிட்டதன் அடிப்படைகள் என்ன?' என்றே பலகாலும் கேட்க நேர்கிறது. பன்மையில் "கள்' ஈறு பெற்று வரும்போது எவை எனச் சொல்ல வேண்டும் என்பதை மறக்கலாமா? அடிப்படை என்ன? என்றால் போதுமே. அடிப்படைகள் என்று தேவையின்றிக் "கள்' விகுதி ஏன்?

 

ஓர் ஐயமும் விளக்கமும்

 

செய்தி ஏடுகளில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது என்று எழுதுகிறார்கள். இதன் பொருள் என்ன? ஆர்ப்பு என்றால் ஒலித்தல் (ஓலி). ஆட்டம் என்பது ஆடுவது. கறுப்புக் கொடிக்கும் ஒலித்து ஆடுவதற்கும் என்ன தொடர்பு? இவ்வாக்கியம் கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்றிருந்தால் சரியாயிருக்கும். ஆர்ப்பாட்டம் என்பதும் தொடர் முழக்கம் (கோஷம் போடுதல்) என்பதையே குறிக்கிறது போலும்! எப்படியோ நம்மவர்க்கு இத்தொடர் நன்கு பழகிவிட்டது.

 

புறமும் புரமும்

 

நாட்டுப்புறப் பாடல்கள் என்று சொன்னால் நன்கறிவோம். கிராமியப் பாடல்கள் என்றும் சொல்வதுண்டு. அண்மையில் ஒரு பாட நூலில் நாட்டுப்புரப் பாடல்கள் என்று அச்சிட்டிருப்பதாக அறிகிறோம். நாட்டுப்புரம் என்பதே சரி என்றும் வாதிடுகிறார்களாம் சிலர். புறம் என்பது தூய தமிழ்ச் சொல்; புறநானூறு நாமறிவோம். புறஞ்சேரி இறுத்த காதை சிலப்பதிகாரத்தில் உள்ளது. இந்நாளில் புறநகர் என்று சொல்லுகிறோமே அதுவே புறஞ்சேரி எனப்பட்டது.

 

by Swathi   on 09 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.