LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் செய்திகள் (Thirukkural News )

கேரளத்தில் திருவள்ளுவர் ஞானமடம்: திருக்குறள் அன்னையின் திருப்பணி நின்றது.

18-april-2021

திருக்குறள் அன்னையின் திருப்பணி நின்றது.
 
கேரளம் ,எர்ணாகுளம் மாவட்டம். மூவாற்றுப்புழை வட்டம், வாரப்பட்டியில் வாழ்ந்து வந்த திருமதி சரஸ்வதி அவர்கள் 17.O4 .2021 சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் இயற்கை எய்தினார். கேரளம் பகவான் ஆதி திருவள்ளுவர் ஞானம் மடத்தின் நிறுவனர் திருமிகு சிவானந்தர் அவர்களின் துணைவியார் தான் சரஸ்வதி அவர்கள்.
 
திருக்குறள் எழுதப்பட்ட காலம் முதல் இதுவரை உலகில் திருக்குறள் நெறியில் வாழ்ந்த சமூகம் என்பது பெரிய அளவில் அமையப் பெறவில்லை. ஆனால் கேரளத்தில் திருவள்ளுவர் ஞானமடம் எனும் பெயரில் கடந்த 35 ஆண்டுகளாக 30 ஆயிரம் மக்களை திருக்குறளில் நெறியில் ஒருங்கிணைத்து பெரியதொரு மக்கள் திரளை உருவாக்கியவர்கள்தான் சிவானந்தரும் சரஸ்வதி அவர்களும் ஆவர்.
 
சிவானந்தர் அவர்கள் திருவள்ளுவர் ஞானமடத்தின் நிறுவனராகவும் தலைவராகவும் உருவாவதற்கு முழுமையான அடித்தளம் சரஸ்வதி அவர்களே ஆவார். சிவானந்தர் அவர்கள் சிறந்த சிந்தனையாளர். பேச்சாளர், ஆனால் அவரை செயல்படுத்திய இயக்குநர் சரஸ்வதி ஆவார்.
 
கேரளம் முழுமையும் திருவள்ளுவர் ஞானமடங்களை உருவாக்குவதற்காக கடுமையான களப்பணியில் அறிவையும் உழைப்பையும் நல்கியவர் சரஸ்வதி அவர்கள். வழிபாட்டு முறைகளையும், பாடல்களையும் மகளிர் அமைப்பின் நெறிமுறைகளையும் உருவாக்கியவர் சரஸ்வதி அவர்கள்.
 
உலக வரலாற்றில் திருக்குறளை வாழ்வியலாக நிறுவுவதற்காக இப்படி உழைத்த உயர்ந்த அன்னை இதுவரை யாரும் வாழ்ந்தது இல்லை என்பதே வரலாற்று உண்மையாகும். அத்தகைய அறநெறி வளர்த்த அன்னை இவ்வுலகை விட்டு மறைந்தார் என்பது அறத்திற்கே பேரிழப்பாகும்.
 
#அம்மாவை இழந்து வாடும் ஐயா உள்ளிட்ட உறவுகள் மற்றும் அன்பர்களுக்கு ஆழ்ந்த துயரை பகிர்கிறோம்!
by Swathi   on 16 May 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
லண்டன் ஆக்ஸ்போர்ட்டில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின்  183 ஆவது திருவள்ளுவர் சிலை திறப்பு விழா லண்டன் ஆக்ஸ்போர்ட்டில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 183 ஆவது திருவள்ளுவர் சிலை திறப்பு விழா
தேசிய நூலாகத் திருக்குறள் அறிவிக்கப்பட வேண்டும் - உத்தரப் பிரதேசத்திலிருந்து எழுந்த கோரிக்கை! தேசிய நூலாகத் திருக்குறள் அறிவிக்கப்பட வேண்டும் - உத்தரப் பிரதேசத்திலிருந்து எழுந்த கோரிக்கை!
தவத்திரு அழகரடிகளின் மாபெரும் குறள் செயல்திட்டம் தவத்திரு அழகரடிகளின் மாபெரும் குறள் செயல்திட்டம்
கேரளாவில் வள்ளுவர் ஞான மடங்களை உருவாக்கியவர் சிவானந்தர் கேரளாவில் வள்ளுவர் ஞான மடங்களை உருவாக்கியவர் சிவானந்தர்
திருக்குறள் முன்னோடி விருதுகள் அறிவிப்பு திருக்குறள் முன்னோடி விருதுகள் அறிவிப்பு
தவத்திரு குன்றக்குடி அடிகளார் பரப்பிய திருக்குறள் தவத்திரு குன்றக்குடி அடிகளார் பரப்பிய திருக்குறள்
உலகத் திருக்குறள்  முற்றோதல் இயக்கத்தின் ஐந்தாம் ஆண்டு  செய்திக் குறிப்பு உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் ஐந்தாம் ஆண்டு செய்திக் குறிப்பு
வள்ளுவம் காட்டும் வாழ்வியல் நெறி – நா.தனராசன் வள்ளுவம் காட்டும் வாழ்வியல் நெறி – நா.தனராசன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.