LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

சுதந்திர தின கவிதை - சரஸ்வதி ராசேந்திரன்

இன்று
சுதந்திர தினமாம்
தேசியக் கொடியை
தூசிதட்டி எடுத்து
ரத்தம் சிந்தியவர்களை பற்றி
சத்தம் போட்டு முழக்கிவிட்டு
இனிப்பு வழங்கி
அருமையாக சுதந்திரதினத்தை
கொண்டாடிவிட்டு
அத்துடன் மறந்து போவதுதான்
சுதந்திரமாம்
பாரதி இருந்தால்
இப்படித்தான் பாடியிருப்பார்
Bar  க்குள்ளே நல்ல  நாடு
எங்கள் பாரத நாடு
ஊர் இரண்டு பட்டால்
இங்கு வாழ்வு அது
இல்லையெனில்
அனைவருக்கும் தாழ்வு
ஜாதி மதங்களால்
அரசியல் செய்வார்

ஜென்மம் எடுத்ததே
அதற்குதான்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பதில்லயே
அக்கிரமங்கள் செய்வதற்கு
அச்சமில்லையே
எங்கும் ஊழல் என்பதேபேச்சு
எல்லோரும் ஏற்றுக்கொள்வது
என்பதே உறுதியாச்சு
காக்கை குருவி எங்கள்ஜாதிஅதை
அழிப்பதுதான் எங்கள்  நீதி
பாதகம் செய்வோரை கண்டால்
பயந்து பதுங்கி விடு பாப்பா

ஓடி விளையாடு பாப்பா நீ
ஓயும் வரை வீடியோ கேம் விளையாடு

- சரஸ்வதி ராசேந்திரன்

by Swathi   on 13 Aug 2015  1 Comments
Tags: Suthanthira Thinam Kavithai   Suthanthira Thinam   Aug 15   Suthanthira Thinam Poetry   சுதந்திர தினம்   சுதந்திர தின கவிதை   நாட்டுப்பற்று கவிதை  
 தொடர்புடையவை-Related Articles
சுதந்திர தின கவிதை - சரஸ்வதி ராசேந்திரன் சுதந்திர தின கவிதை - சரஸ்வதி ராசேந்திரன்
அனைவருக்கும் இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். அனைவருக்கும் இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
கருத்துகள்
13-Aug-2020 12:56:08 Janani shakthi said : Report Abuse
Poor kavithai😝
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.