LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஆன்மீகத் தமிழர்கள் Print Friendly and PDF

திருமுருக கிருபானந்த வாரியார்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காங்கேயநல்லூரில் 1906 இல் பிறந்தார்.

இசை இலக்கியத்தில் வல்லவரான தந்தை, மூன்று வயதிலிருந்தே தன் குழந்தைக்கு இலக்கண இலக்கியங்களை கற்றுத்தந்தார்.

சிறுவனுக்கு 8 வயதிலேயே கவிபாடும் ஆற்றல் கிடைக்கப்பெற்றது. ஒரு முறை தான் ஒப்புக்கொண்ட சொற்பொழிவுக்கு செல்ல இயலாததால் மகனை அனுப்பி வைத்தார். மடைதிறந்த வெள்ளமாக பெருக்கெடுத்த 18 வயது இளைஞனின் சொல்லாற்றல் அவையோர்அனைவரையும் மெய்மறக்கச் செய்தது. முதல் சொற்பொழிவு பெரும் பேரும் புகழும் பெற்றுத்தந்தது.

யானைக்கவுனி தென்மடம் பிரம்மஸ்ரீ வரதாச்சாரியாரிடம் நான்கு ஆண்டுகள் வீணை பயிற்சி பெற்றார்.

சைவசித்தாந்தத்தில் ஆழ்ந்த புலமை கொண்டவர். அபரிவிதமான நினைவாற்றல் படைத்தவர்.

மிகச்சிறந்த முருக பக்தர்.

திருமுருகாற்றுப்படை, திருவாசகம், தேவாரம், திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், திருவருட்பா உள்ளிட்டவற்றில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாக்களை மனப்பாடமாக அறிந்தவர். சொற்பொழிவின் போது அவற்றை அழகாக இசையோடு இணைந்து பாடுவார்.

"திருப்புகழ் அமிர்தம்" என்ற மாத இதழை 37 ஆண்டுகளாக நடத்தினார் "சிவனருட் செல்வர்" "கந்தவேல் கருணை" "ராம காவியம்" "மகாபாரதம்" உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட நூல்கள் 500க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளார். குழந்தைகளுக்காக "தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்" என்ற நூலை எழுதியுள்ளார். அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் இவரது நூல்கள் தெளிவாக எளிய நடையில் இலக்கியத்தரம் வாய்ந்தவையாக இருக்கும்.

சொற்பொழிவுக்கு நடுவே குழந்தைகளிடம் ஆன்மீக கேள்விகள் கேட்பார். சரியாக பதில் சொல்லும் குழந்தைகளுக்கு விபூதி, சிறிய கந்த சஷ்டி கவசம் புத்தகங்களை அன்பு பரிசாகத் தருவார். இதற்காகவே முன் வரிசையில் இடம் பிடிக்க சிறுவர்கள் போட்டி போடுவார்கள்.

படித்தவர், பாமரர், முதியோர், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் ரசிக்கும் படியாக சுவாரசியமாக பேசுவார்.

பெண்மையை போற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி கூறுவார் குழந்தைகளுக்கு தாயின் பெயரை முதல் எழுத்தாக போடவேண்டும் என்பதை முதன் முதலாக கூறியவர் இவர்தான்.

தியாகராஜ பாகவதரின் "சிவகவி" படத்திற்கு வசனம் எழுதினார். துணைவன், தெய்வம், திருவருள் போன்ற திரைப்படங்களிலும் நடித்தார்.

எம்ஜிஆருக்கு "பொன்மனச்செம்மல்" என்ற பெருமைமிகு பட்டத்தைச் சூட்டியது இவர்தான்.

ஏராளமான கோயில்களில் திருப்பணி நடைபெற உதவியவர். ஆன்மீக அறப் பணிகளுக்காக ஏராளமான விருதுகள் பெற்றவர்.

சென்னை தமிழிசை மன்றம் "இசைப்பேரறிஞர்" என்ற பட்டம் வழங்கி பெருமைப்படுத்தி சிறப்பித்தது. தனது வாழ்நாள் முழுதும் ஆன்மீக சொற்பொழிவுகள் மூலம் பக்தி நன்னெறியை மக்களிடையே வளர்த்தார்.

தமிழ்கடவுள் முருகன், அந்த முருகனுக்கு ஏகபட்ட அடியவர்களும் புலவர்களும் இங்கு இருந்தார்கள்,, அவ்வையார், அருணகிரி நாதர் என பலர் இருந்தார்கள். அவர்களை எல்லாம் நாம் கண்டதில்லை

ஆனால் இவர்களை எல்லாம் நாம் வாழும் காலத்தில் ஒரு உருவத்தில் மொத்தமாக கண்டோம் என்றால் அது கிருபானந்த வாரியார்.

பிறவி ஞானி. பக்தி அவர் ரத்தத்தில் இயல்பாக வந்தது. முருகன் அவர் கருவில் இருக்கும்பொழுதே அவரை ஆட்கொண்டான்.

அது அவர் வளர வளர வளர்ந்தது, 12 வயதிலே ஆயிரக்கணக்கான பாடல்களை மனப்பாடம் செய்திருந்தார், 16 வயதினிலே அவர் தனியாக உபன்யாசமும், மத விளக்க உரையும் கொடுக்கும் அளவு அவருக்கு ஞானம் மிகுந்திருந்தது

நிச்சயம் அகில இந்திய அளவு, விவேகானந்தர் அளவு வந்திருக்கவேண்டிய மகான் அவர், ஆனால் முருகன் ஆலயம் நிரம்பிய தமிழகத்திலே தன்னை நிறுத்திகொண்டார்

இந்துமதத்தின் கொள்கைகள், உபநிஷத்துகள் உணர கஷ்டம் எனும் நிலையில், பாமர மக்கள் அதை புரிந்து கொள்ளும் வகையில் மிக எளிய தமிழில் சொன்னவர் அவர்.

சாந்தமான முகம் , பார்த்தால் வணங்கத்தக்க தோற்றம், அமைதியான மொழி, அழகு தமிழ், வாய்திறந்தால் எம்பெருமான் என தொடங்கும் அந்த கீர்த்தி எல்லாம் இனி யாருக்கும் வாய்க்காதவை.

எந்த வாதத்திலும் அவரை வெல்ல முடியாது, எந்த சபையிலும் அவர் தோற்றதுமில்லை.

சங்க காலத்திலிருந்து வந்த ஆழ்வார்கள், அடியார்கள், புலவர்கள் வரிசையில் நாம் கண்ட மாபெரும் மனிதர் கிருபானந்தவாரியார்

அதில் சந்தேகமே இல்லை

அந்த அற்புதமான, அமைதியான, அர்த்தமுள்ள, ஆன்மீக சொற்பொழிவினை இனி கொடுக்க யாருமில்லை

முருகன், ராமாயணம், பாரதம் என இந்து மத பாரம்பரியங்களை அவர் விளக்கினால் பசியின்றி, தூக்கமின்றி கேட்டுகொண்டே இருக்கலாம். அவ்வளவு உருக்கமும் அழகும் வாய்ந்த சொற்கள் அவை.

இன்று அவர் இல்லாவிட்டாலும் அவரின் பெரும் உழைப்பும் அவரின் பேச்சும், எழுத்தும் என்றும் ஆன்மீக உலகில் நிற்கும், நிலைக்கும். சாட்சாத் முருகபெருமான் அவர் நாவில் இருந்து தமிழ் கொடுத்தான் என்பதை பல இடங்களில் காண முடிந்தது.  இந்த நூற்றாண்டின் மிக சிறந்த தமிழறிஞர்களில் அவரும் ஒருவர், கண்ணில் ஒற்ற கூடிய அழகு தமிழ் அது...

இன்று அவரின் பிறந்த நாள், அந்த ஆன்மீக பெரியவருகு பக்தி அஞ்சலிகள். இந்துமதத்தின் சிறப்புக்களை, பெருந்தன்மையினை பலாச்சுளையினை தேனில் நனைத்து இனிக்க இனிக்க கொடுத்தவர் அவர். முருகபெருமானோடு கலந்துவிட்ட அந்த பக்தனுக்கு மீண்டும் அஞ்சலிகள்

"செந்தமிழ் கடல்" "அருள்மொழி அரசு" "திருப்புகழ் ஜோதி" என்றெல்லாம் போற்றப்பட்ட திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் தனது 87வது வயதில் 1993ல் விமான பயணத்தின் போது மறைந்தார்.

by Swathi   on 25 Aug 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
திருவையாற்றில் தியாகராஜ சுவாமிகளின் 177-வது ஆராதனை விழா - பஞ்சரத்தினக் கீர்த்தனைகளைப் பாடி கலைஞர்கள் இசையஞ்சலி. திருவையாற்றில் தியாகராஜ சுவாமிகளின் 177-வது ஆராதனை விழா - பஞ்சரத்தினக் கீர்த்தனைகளைப் பாடி கலைஞர்கள் இசையஞ்சலி.
தமிழும் சமயமும் ஒரு சிறப்பு கட்டுரை தமிழும் சமயமும் ஒரு சிறப்பு கட்டுரை
தங்கம்மா அப்பாக்குட்டி தங்கம்மா அப்பாக்குட்டி
பத்திரகிரியார் பத்திரகிரியார்
முரளீதர சுவாமிகள் முரளீதர சுவாமிகள்
முகவை கண்ண முருகனார் முகவை கண்ண முருகனார்
மத்துவர் மத்துவர்
வேங்கடரமண பாகவதர் வேங்கடரமண பாகவதர்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.