|
|||||
ஓட்டுக்கு பணம் வாங்கினால் ஒரு வருட சிறை !! |
|||||
வரும் இடைத்தேர்தலில், ஓட்டுக்கு பணம் கொடுப்பது மட்டுமல்ல, பணம் பெறுவதும் குற்றம் என்பதால், பணம் பெறுபவர் மீதும், வழக்கு பதிவு செய்து, ஓராண்டு வரை சிறை தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார்.
ஏற்காடு இடைத்தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற தலைமை தேர்தல் அதிகாரி, செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஏற்காடு தொகுதியில் இடை தேர்தல் வரும் டிசம்பர் 4 தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான மனுத்தாக்கல், நவம்பர் 9ம் தேதி துவங்க இருக்கிறது. ஏற்காடு தொகுதியில், 2.34 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதற்காக, 120 இடங்களில், 290 ஓட்டுச் சாவடி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் பணிக்கு, சுமார் 2,000 பேர் தேவைப்படுவர். அரசு பணி துவங்குவது, சுவர் விளம்பரம் செய்வது, நலத்திட்ட உதவி வழங்குவது உள்ளிட்டவை, ஏற்காடு தொகுதிக்குள் தடை செய்யப்பட்டுள்ளது. தேர்தல் குறித்து புகார் செய்வதற்காக, கன்ட்ரோல் ரூமுடன் கூடிய, 1800 425 7050 என்ற, "டோல்பிரீ' போன் இணைப்பு அமைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்க, இரண்டு பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பறக்கும் படைகள், கூடுதலாக அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில், 11 இடங்களில் வாகன சோதனை சாவடி அமைக்கப்பட்டு, அனைத்து வாகனங்களும் தணிக்கை செய்யப்படுகின்றன. சேலம், அரசு மருத்துவமனைக்கு, சுகாதாரத்துறை அமைச்சர், அரசு வாகனத்தில் ஆய்வுக்கு வந்தது குறித்து, தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிக பண பரிமாற்றம் குறித்து, வங்கிகளுக்கும் தகவல் தர உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தலில் குறிப்பிட்ட கட்சிகளுக்கு வாக்களிக்க, பணம் கொடுப்போர் மட்டுமின்றி, பணம் பெறுபவர் மீதும், வழக்கு பதிவு செய்து, ஓராண்டு வரை சிறை தண்டனை பெற்றுத்தரப்படும். தொகுதிக்கு வெளியில், பொருட்களை வினியோகம் செய்தாலும், அவை பறிமுதல் செய்யப்படும். தேர்தல் விதிமுறை அமல்படுத்துவது மற்றும் ஒரு சில செயல்பாடுகள் குறித்து, அரசியல் கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன. புகார்களுக்கு இடமளிக்காத வகையில், நடுநிலைமையாக தேர்தல் கமிஷன் செயல்படும். இவ்வாறு, தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார். |
|||||
Money for votes will be punished with One year imprisonment | |||||
The Chief Electoral Officer of the TN Election Commission, Praveen Kumar said persons who give or receive money for votes during the Yercaud by-elections, will be punished with 1 year imprisonment. |
|||||
by Swathi on 18 Oct 2013 0 Comments | |||||
Tags: ஏற்காடு தொகுதி ஓட்டு பணம் சிறை தண்டனை ஒரு வருட சிறை தேர்தல் அதிகாரி தமிழக தேர்தல் அதிகாரி | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|