ஒருவரே பல பான் கார்டுகளை பெற்று மோசடியில் ஈடுபடுவதாக, குவிந்து வரும் புகார்களை அடுத்து. பான்கார்டு பெறுவதற்கான நடைமுறைகளில் சில மாற்றங்களை வருமான வரித்துறை கொண்டுவந்துள்ளது. இதன் படி, பான்கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது, ஒவ்வொரு விண்ணப்பதாரரும், தங்கள் அடையாளத்தை நிரூபிக்கும் சான்றிதழின் நகல், முகவரி, பிறந்த தேதிக்கான சான்றிதழ்களின் நகல்களை இணைக்க வேண்டும்.பின், விண்ணப்பத்தை பான்கார்டுக்கான விண்ணப்ப மையங்களில், அளிக்கும்போது, அசல் சான்றிதழ்களை சரிபார்ப்புக்கு காட்ட வேண்டும்.
விண்ணப்ப சரிபார்ப்புக்கு பின் அசல் சான்றிதழ்கள் விண்ணப்பத்தாரிடம் திரும்ப அளிக்கப்படும். இந்த நடைமுறை பிப்ரவரி, 3ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக, வருமான வரித்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். அத்துடன், புது பான்கார்டு வாங்குவதற்காக, வருமான வரித்துறை வசூலிக்கும் கட்டணம், வரிகள் உட்பட, 105 ரூபாய் ஆக உயர்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். தற்போது பான் கார்டு வாங்குவதற்கு 94 ரூபாய் கட்டணம் என்பது குறிப்பிடத்தக்கது.
|