LOGO
  முதல் பக்கம்    மற்றவை    அறிவியல் Print Friendly and PDF

இயற்கையான முறையில், ஒரே செடியில் தக்காளியும், உருளைக் கிழங்கும், விளைவித்து இங்கிலாந்து நிறுவனம் சாதனை !!

விவசாயத்தில் ஒரு புதிய புரட்சியாக, இயற்கையான முறையில், ஒரே செடியில் தக்காளியும், உருளைக் கிழங்கும், விளைவிக்கும் ஒரு புதிய முறையை இங்கிலாந்தை சேர்ந்த தாம்சன் அண்டு மார்கன் என்ற நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இது குறித்து அந்நிறுவன உயரதிகாரிகளுள் ஒருவரான, பவுல் ஹான்சர்டு கூறியதாவது:  இரு வெவ்வேறு காய்கறிகளை, ஒரே செடியில் விளைவிப்பது என்பது மிகவும் கடினமான காரியம். இது போன்ற செயல்களை விஞ்ஞானிகள் மரபியல் மாற்றங்களை செய்துதான் வெற்றி கண்டுள்ளனர். எனினும், அவ்வகையான மாற்றங்கள் செய்யாமல், முற்றிலும் இயற்கையான முறையில், இரு செடிகளை இணைத்து அவற்றில் விளையும் காய்கறிகளை, ஒரே செடியில் முதல் முறையாக விளைவித்துள்ளோம். இரு தாவரங்களின் திசுக்களையும் பிரித்து, ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பின், இரண்டும் ஒன்றாக ஒரே தொட்டியில் வளர்க்கப்பட்டன. இதன் பின், சரியான நேரத்தில், தக்காளிகள் காய்க்கத் துவங்கின, வேர்ப் பகுதியில், உருளைக்கிழங்கும் முளைத்திருந்தது. இயற்கை முறையில் முதன் முதலாக ஒரே தாவரத்தில் இரு வேறு காய்கறிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது மகிழ்ச்சியை அளிக்கிறது. சோதனை முறையில் மட்டுமின்றி, வியாபார ரீதியாகவும் இந்த முறை வெற்றி பெற்றுள்ளதாக தெரவித்த அந்நிறுவனம். இதில் விளையும் காய்கறிகள் மிகுந்த சுவையுடன் இருப்பதால், மக்கள் விரும்பி வாங்கிச் செல்வதாகவும் தெரிவித்துள்ளது. ஒரே செடியில் இருவேறு காய்கறிகளை வளர்க்கும் இந்த புதிய முறையை நியூசிலாந்து நாட்டு விவசாயிகள் பின்பற்ற துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

by Swathi   on 27 Sep 2013  2 Comments
Tags: தக்காளி   உருளைகிழங்கு   ஒரே செடி   தாம்சன் அண்டு மார்கன்   Tomato   Potatoes   Planet  
 தொடர்புடையவை-Related Articles
வரகரிசி தக்காளி சாதம் வரகரிசி தக்காளி சாதம்
இயற்கையான முறையில், ஒரே செடியில் தக்காளியும், உருளைக் கிழங்கும், விளைவித்து இங்கிலாந்து நிறுவனம் சாதனை !! இயற்கையான முறையில், ஒரே செடியில் தக்காளியும், உருளைக் கிழங்கும், விளைவித்து இங்கிலாந்து நிறுவனம் சாதனை !!
கருத்துகள்
17-Nov-2016 09:30:04 R.MUNUSAMY said : Report Abuse
very great the man
 
21-Nov-2013 05:18:08 Harish said : Report Abuse
சில நல்ல கண்டுபிடிப்புகளை பாரட்ட வேண்டும்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.