|
||||||||
தமிழ்ச் சிந்தனை மரபின் உச்சம் |
||||||||
தமிழ்ச் சிந்தனை மரபின் உச்சம் சான்றோன் அறிஞர்கள் திருக்குறளின் இயல்பையும் படிப்பினைகளையும் உலகளாவிய அறச்சிந்தனைகளின் மேம்பட்ட கருத்துகளோடு - குறிப்பாகக் கிரேக்கத் தத்துவங்களோடும். கொன்பூசியசின் விழுமியங்களோடும், புனித நூல்களின் உயர்சிந்தனைகளோடும் ஒப்பிட்டு நோக்குகின்றார்கள். மானுட அறிவின் உன்னத வெளிப்பாடான திருக்குறள் மதசார்பற்ற நூலாக விளங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, திருவள்ளுவரிடத்து வேறொரு வகையான சார்பைக் காணமுடிகின்றது. சான்றோன் என்ற பெயரால் அறவொழுக்கத்தால் சிறந்த, முன்மாதிரி மானிடனைப் பற்றிக்கூறச் சில அதிகாரங்களை ஒதுக்கியுள்ளார். இதனால், இன, மொழி, மதம் மற்றும் பிரதேச வேறுபாடுகளைக் கடந்து. உலகப் பொதுநூலாக விளங்குகின்ற தகுதியும், பெருமையும் திருக்குறளுக்கு உரித்தாகின்றது. அமைப்பு மற்றும் இலக்கிய வடிவம் இத்தமிழ்ச் செவ்விலக்கியம் 1330 குறட்பாக்களை; ஒவ்வொரு அதிகாரத்துக்கும் பத்துப் பத்துக் குறள்களாக 133 அதிகாரங்களில் உள்ளடக்கியுள்ளது. இவ்வகையில் ஒவ்வொரு தலைப்பும் பத்துக் குறள்களால் விளக்கப்பட்டுள்ளது. இந்நூலின் மூன்று தொகுதிகளில் அறத்துப்பால் 380 குறள்களையும், பொருட்பால் 700 குறள்களையும், காமத்துப்பால் 250 குறள்களையும் கொண்டுள்ளது. இதில் உள்ள ஒவ்வொரு பாடலும் குறட்பா என்னும் தமிழ் இலக்கிய யாப்பிலக்கணத்தின் படியான வெண்பா வகையில் கட்டுக்கோப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சங்கப் பாடல்களின் பாடுபொருள்களாக அகம், புறம் ஆகிய திணை மரபுகள் அமைந்துள்ளன. இவ்வாறான பாடல் மரபுகளின் தொடர்ச்சியைத் திருக்குறளில் நாம் காண்கின்றோம். குறிப்பாக, திருக்குறளின் முதற்பகுதியான அறத்துப்பாலானது. இல்லறம் பற்றியும் துறவறம் பற்றியும் பேசுகின்றது. இரண்டாவது பகுதியான, பொருட்பாலானது மாந்தரின் நிறைவான வாழ்க்கைக்கு வேண்டிய வளங்களைப் பற்றிக் கூறுகின்றது. இவை புறம் சார்ந்தன. அடுத்து, காமத்துப்பாலானது. திருமணத்துக்கு முன்னான காதல் வாழ்க்கை பற்றியும் மற்றும் திருமணத்துக்குப் பின்னதான கற்பு வாழ்க்கை பற்றியும் பேசுகின்றது. இது அகம் சார்ந்தது. உலகளாவிய வரவேற்பு திருக்குறளின் அனைத்துலகப் பொதுநோக்கு உலக அளவில் பல்வேறு அறிஞர்களின் கவனத்தைத் தன்பால் ஈர்த்துள்ளது. அவ்வகையில், திருக்குறளானது உலக மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. யேர்மனிய அறிஞரான சீகன்பால்க் (Ziegenbalg) திருக்குறளின் சுருக்கத்தை 1708ஆம் ஆண்டு யேர்மன் மொழியில் எழுதினார். இத்தாலியரான வண. பெஸ்கி (Constantine Joseph Beschi) 1730ஆம் ஆண்டு. திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார். கனடாவில் பிறந்தவரான ஜி.யூ. போப் (G.U. Pope) திருக்குறள் முழுமையையும் 1886ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். உலகப் புகழ் வாய்ந்த பல அறிஞர்களும் திருக்குறளின் மேன்மையைப் போற்றியுள்ளனர். மாநாட்டின் நோக்கங்கள் |
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
by Swathi on 18 Apr 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|