தென் இந்திய சினிமாவை பொறுத்த வரை பிரமாண்டமான இயக்குனர்கள் என்றால் அது ஷங்கரும், எஸ்.எஸ்.ராஜமௌயும் தான். ஏனென்றால் அவர்களின் இயக்கத்தில் உருவாகும் படங்களில் அவர்கள் அமைக்கும் காட்சிகளின் நேர்த்தியும், பயன்படுத்தும் தொழில்நுட்பமும், பலராலும் பேசப்படும்.
இந்த இரு இயக்குனர்களும், இன்றைய பெரும்பாலான இளம் ரசிகர்கள் பலரைப் பெற்றிருக்கிறார்கள். ஆனால் அந்த விஷயத்தில் இயக்குனர் ராஜமௌலி, ஷங்கரை ஓவர் டேக் செய்துவிட்டார். சமூக வலைத்தளங்களில் ராஜமெளலி மிகவும் ஆக்டிவ்வாக இருப்பார். அவருடைய படத்தைப் பற்றியும் இன்னும் சில விஷயங்களைப் பற்றியும் ஏதாவது ஒரு பதிவு போட்டுக் கொண்டேயிருப்பார். அதனால் அவரை சமூக வலைத்தளங்களில் தொடர்பவர்களின் எண்ணிக்கை பல லட்சத்தைப் பெற்றிருக்கிறது.
பேஸ்புக்கில் ராஜமௌலியை 26 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தொடர்கிறார்கள். டிவிட்டரில் நேற்றுதான் 10 லட்சத்தைக் கடந்தார் ராஜமௌலி. ஆனால், ஷங்கருக்கு பேஸ்புக்கில் 14 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள்தான் தொடர்கிறார்கள். டிவிட்டரில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களே தொடர்கிறார்கள்.
ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த ஐ திரைப்படம் வெற்றி நடைபோட்டுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ராஜமௌலி இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் பாகுபலி படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
|