LOGO
  முதல் பக்கம்    சுற்றுலா    தமிழ்நாடு சுற்றுலா Print Friendly and PDF

தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள்.

பெண்கள் தனியாகவும். குடும்பங்களாகச் சுற்றுலா செல்வதற்கும் மிகவும் பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.

 

அழகிய மலைப் பிரதேசங்கள் முதல் வசீகரமான கிராமங்கள் வரை, மிரள வைக்கும் வரலாற்று நினைவுச்சின்னங்கள் முதல் பிரமிக்கப் பழங்காலக் கோயில்கள் வரை தமிழகம் மிகவும் வெவ்வேறு வகையான சுற்றுலாத் தலங்களைக் கொண்டுள்ளது.

 

 

மகாபலிபுரம்

 

பண்டைய பாறைக் கோயில்கள் மற்றும் கல் சிற்பங்களுக்காக அறியப்பட்ட மகாபலிபுரம் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியத் தளமாகும், இது உங்களைக் காலப்போக்கில் கொண்டு செல்கிறது. கடற்கரை கோயில் மற்றும் ஐந்து ரதங்கள் போன்ற நுணுக்கமான செதுக்கப்பட்ட நினைவுச்சின்னங்களைக் கண்டு வியந்திடக் கட்டாயம் சுற்றுலாப் பயணிகள் மகாபலிபுரத்திற்கு வருகை தர வேண்டும். மகாபலிபுரத்தில் பெண்கள் பாதுகாப்பிற்கும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்கும் எந்தக் குறைவும் இல்லை. எந்த அளவு தமிழகச் சுற்றுலாப் பயணிகளை நீங்கள் மகாபலிபுரத்தில் பார்க்கிறீர்களோ, அதே அளவுக்கு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளையும் பார்க்கலாம். அந்த அளவிற்கு மகாபலிபுரம் மிகவும் பாதுகாப்பானது.

 

கோயம்புத்தூர்

 

தமிழகத்தின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் கோவையும் ஒன்று. ஆண்டு முழுவதும் இதமான வானிலை இருப்பதால் கோயம்புத்தூருக்கு நீங்கள் எந்த நேரத்திலும் செல்லலாம். மருதமலை மலைக்கோயில், பேரூர் பட்டீஸ்வரர் கோயில், ஈச்சனாரி விநாயகர் கோயில், பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம், கோவை கொண்டாட்டம், சிறுவாணி அருவி ஆகியவை இங்குப் பார்க்க வேண்டிய இடங்களாகும். கோயம்புத்தூரில், நீங்கள் உங்கள் நண்பர்களுடன் மலையேற்றம் செய்வது முதல், சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வது முதல் எல்லாமே பாதுகாப்பானது தான்.

 

தஞ்சாவூர்

 

பெயர் குறிப்பிடுவது போல, தஞ்சாவூர் தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். கோவில்களின் நகரம் என்று அழைக்கப்படும் இந்த இடம், அதன் வளமான கலாச்சார மதிப்பு, தஞ்சை ஓவியங்கள், ஜவுளி மற்றும் புடவைகள், உலோகச் சிற்பங்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் பழங்கால ஓவியங்கள் ஆகியவற்றிற்காக அறியப்படுகிறது. கங்கைகொண்ட சோழபுரம், பிரகதீஸ்வரர் கோயில், விஜயநகரக் கோட்டை, தஞ்சாவூர் அரண்மனை மற்றும் சிவகங்கைத் தோட்டம் ஆகியவை இப்போது தஞ்சாவூரில் பார்க்க வேண்டிய இடங்களாகும்.

 

கன்னியாகுமரி

 

அரபிக் கடல், வங்காள விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகிய மூன்று நீர்நிலைகளும் சங்கமிக்கும் இடமான கன்னியாகுமரி கண்கவர் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனக் காட்சி அதன் மண்ணில் சுற்றுலாப் பயணிகளைக் கொண்டு வருகிறது. கன்னியாகுமரி கடற்கரை, திற்பரப்பு அருவி, விவேகானந்தர் பாறை நினைவகம், தாணு மலைக் கோயில், திருவள்ளுவர் சிலை, பத்மநாப புரம் அரண்மனை, உதயகிரி கோட்டை மற்றும் காந்தி நினைவிடம் ஆகியவை கன்னியாகுமரியில் பார்க்க வேண்டிய இடங்களாகும்.

 

கொடைக்கானல்

 

பல இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுடன், அமைதியை நாடும் தனிப் பயணிகளுக்கு இது ஒரு சிறந்த இடமாக கொடைக்கானல் தமிழகத்துச் சுற்றுலாப் பயணிகளுக்குப் பிடித்த சுற்றுலாத் தலமாக இருக்கிறது. குறிஞ்சி ஆண்டவர் கோயில், கரடி சோழா நீர்வீழ்ச்சி, சிலவர் கேஸ்கேட் அருவி, தைலயார் அருவி, கொடை ஏரி, தூண் பாறைகள், கோக்கர்ஸ் வாக் மற்றும் தற்கொலை முனை எனப்படும் பசுமை பள்ளத்தாக்கு காட்சி ஆகியவை கொடைக்கானலில் பார்த்து ரசிக்க வேண்டிய இடங்களாகும்.

 

மதுரை

 

தமிழ்நாட்டில் உள்ள சில புனிதத் தலங்களுக்குச் செல்ல நீங்கள் விரும்பினால், நகரம் முழுவதும் பரந்து விரிந்து கிடக்கும் பழமையான கோயில்களை ஆராய மதுரை உங்களை வரவேற்கிறது. மதுரையில் உள்ள கோயில்களைப் பார்க்கத் தொடங்கும் போது, அற்புதமான கட்டிடக்கலை மற்றும் சிற்பங்கள் போன்றவற்றைக் கண்டு வியந்து போவீர்கள். திருமலை நாயக்கர் மஹால், கூடல் அழகர் கோயில், மேகமலை, மீனாட்சி கோயில் மற்றும் சமணர் மலைகள் ஆகியவை மதுரையில் உள்ள சில முக்கிய இடங்களாகும். இவற்றையெல்லாம் பார்த்து விட்டு மறக்காமல் மதுரை பேமஸ் உணவுகளை ருசிக்க மறக்காதீர்கள்.

 

திருநெல்வேலி

 

பட்டியலில் கடைசி இடம் திருநெல்வேலி. தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த இடம் தமிழ்நாட்டின் சிறந்த இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்குள்ள சுற்றுலாப் பயணிகள் அருவிகளின் கண்கவர் காட்சிகளை அனுபவிக்கலாம், நெல்லையப்பர் கோயில், பாபநாசம் அருவி, ஹோலி டிரினிட்டி கதீட்ரல், களக்காடு வனவிலங்கு சரணாலயம் மற்றும் மாவட்ட அறிவியல் மையம் ஆகியவை பார்க்க வேண்டிய சில முக்கிய இடங்களாகும்.

 

இந்தப் பட்டியலில் உள்ள இடங்கள் யாவும் பெண்களாகச் சுற்றுலா செல்வதற்கும், குடும்பங்களாகச் சுற்றுலா செல்வதற்கும் மிகவும் பாதுகாப்பான இடங்களாகும்.

by Kumar   on 07 Apr 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ராமேஸ்வரத்தில் உள்ள அதிசயத் தீர்த்த கிணறு. ராமேஸ்வரத்தில் உள்ள அதிசயத் தீர்த்த கிணறு.
தமிழகத்தின் இந்த 'குட்டி காஷ்மீர். தமிழகத்தின் இந்த 'குட்டி காஷ்மீர்.
தமிழ்நாட்டின் 'மாளிகை' கிராமம் தெரியுமா? கட்டாயம் காண வேண்டிய இடம்... சுற்றிப் பார்க்க ரூ.50 போதும்! தமிழ்நாட்டின் 'மாளிகை' கிராமம் தெரியுமா? கட்டாயம் காண வேண்டிய இடம்... சுற்றிப் பார்க்க ரூ.50 போதும்!
சுற்றுலாப் பயணிகள் வருகையில் இந்தியளவில் தமிழகம் முதலிடம். சுற்றுலாப் பயணிகள் வருகையில் இந்தியளவில் தமிழகம் முதலிடம்.
அறுபடை வீடுகளுக்கு இலவச ஆன்மிகச் சுற்றுலாவுக்கு விண்ணப்பிக்கலாம்! அறுபடை வீடுகளுக்கு இலவச ஆன்மிகச் சுற்றுலாவுக்கு விண்ணப்பிக்கலாம்!
அஜந்தா, எல்லோரா வரிசையில் தமிழ்நாட்டின் திருப்பத்தூரில் இன்னொரு 'சித்தன்னவாசல்' அஜந்தா, எல்லோரா வரிசையில் தமிழ்நாட்டின் திருப்பத்தூரில் இன்னொரு 'சித்தன்னவாசல்'
தஞ்சையில் புதிய சுற்றுலாத் தளம் தயார்..! மன்னர்கள் படகுச் சவாரி செய்த ஏரியில் இனி நாமும் பயணம் செய்யலாம்..! தஞ்சையில் புதிய சுற்றுலாத் தளம் தயார்..! மன்னர்கள் படகுச் சவாரி செய்த ஏரியில் இனி நாமும் பயணம் செய்யலாம்..!
திருப்பூருக்குப் பக்கத்தில் ‘குட்டி திபெத்’ திருப்பூருக்குப் பக்கத்தில் ‘குட்டி திபெத்’
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.