LOGO
  முதல் பக்கம்    சுற்றுலா    தமிழ்நாடு சுற்றுலா Print Friendly and PDF

ராமேஸ்வரத்தில் உள்ள அதிசயத் தீர்த்த கிணறு.

தமிழக ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது, ராமேஸ்வரம். இந்த இடம் மிகவும் புண்ணியம் வாய்ந்த தளமாகக் கருதப்படுகிறது. இந்தியாவின் புராணங்களில் ஒன்றான ராமாயணத்துடன் இந்த இடம் தொடர்புடையதாக இருப்பது மேலும் சிறப்பை சேர்க்கிறது.

 

ராமாயணப் போரில் ஏற்பட்ட பிரமஹத்தி தோஷத்தை போக்குவதற்காக ராமர், சீதை மற்றும் லக்ஷ்மணன் இங்கே சிவலிங்கத்தை நிறுவினார்கள் என்பது புராணம். ராமேஸ்வரம் கோவிலில் மொத்தம் 22 தீர்த்த கிணறுகள் இருக்கின்றன. இவற்றில் குளித்தால் எல்லாப் பாவங்களும் தீரும் என்பது ஐதீகம்.

 

ராமேஸ்வரத்தில் தங்கச்சிமடம் என்னும் இடத்தில் அமைந்திருப்பது தான் வில்லூண்டி தீர்த்தக்கிணறு.

 

இந்தக் கிணற்றைப் பார்ப்பதற்காகக் கூட்டம் கூட்டமாக மக்கள் வருகை தருகிறார்கள். அதற்கான முக்கிய காரணம், கடலுக்கு மிக அருகே அமைந்திருக்கும் இந்தத் தீர்த்த கிணற்றில் உள்ள தண்ணீரானது சாதாரணமாக நம் வீட்டில் குடிக்கக் கூடிய நன்னீர் போன்றே இருக்குமாம். அதுமட்டுமில்லாமல் சுவையாக இருக்கிறது என்று இங்கு வரும் பக்தர்கள் கூறுகிறார்கள்.

 

இது எப்படிச் சாத்தியம்? கடலுக்கு அருகில் உள்ள நீர் உப்புக் கரிக்காமல் சுவையாக இருப்பது எப்படி என்று கேட்பவர்களுக்கு ஒரு குட்டிக் கதை.

 

தீர்த்த கிணறுகள்

 

அதாவது ராமாயணத்தில், ராமர் போர் முடிந்த பிறகு சீதையை அழைத்துக்கொண்டு ராமேஸ்வரம் வருகிறார். அப்படி வரும்போது சீதைக்கு தாகம் எடுக்கிறது. அதனால் ராமரிடம் குடிக்க நீர் வேண்டும் என்று கேட்கிறார். ராமரோ உடனே தனது வில்லை எடுத்து ஒரு இடத்தில் ஊன்றுகிறார். அவர் வில்லை ஊன்றிய இடத்திலிருந்து நீரூற்று வந்தது. அந்த நீரைக் குடித்து சீதை தனது தாகத்தை போக்கிக்கொண்டார் என்பது வரலாறு. அப்படி ராமர் வில் ஊன்றி பிறந்ததால், இந்த நீரூற்றிற்கு வில்லூண்டி தீர்த்தம் என்று பெயர் வந்தது.

 

இந்த அதிசயக் கிணற்றைப் பார்ப்பதற்காகவே ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இந்த இடத்தைத் தேடி வருகிறார்கள். தவிர ஆன்மீக ரீதியாகவும் இங்கே பக்தர்கள் வந்து இந்த நன்னீரை வாங்கி சுவைத்துப் பார்த்துவிட்டு அதிசயித்துப் போகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

எனவே ராமேஸ்வரம் வரும் பொழுது கண்டிப்பாக இந்த அதிசயக் கிணற்றை ஒருமுறை வந்து பார்த்துவிட்டுச் செல்வது சிறந்ததாகும்.

by Kumar   on 07 Apr 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள். தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள்.
தமிழகத்தின் இந்த 'குட்டி காஷ்மீர். தமிழகத்தின் இந்த 'குட்டி காஷ்மீர்.
தமிழ்நாட்டின் 'மாளிகை' கிராமம் தெரியுமா? கட்டாயம் காண வேண்டிய இடம்... சுற்றிப் பார்க்க ரூ.50 போதும்! தமிழ்நாட்டின் 'மாளிகை' கிராமம் தெரியுமா? கட்டாயம் காண வேண்டிய இடம்... சுற்றிப் பார்க்க ரூ.50 போதும்!
சுற்றுலாப் பயணிகள் வருகையில் இந்தியளவில் தமிழகம் முதலிடம். சுற்றுலாப் பயணிகள் வருகையில் இந்தியளவில் தமிழகம் முதலிடம்.
அறுபடை வீடுகளுக்கு இலவச ஆன்மிகச் சுற்றுலாவுக்கு விண்ணப்பிக்கலாம்! அறுபடை வீடுகளுக்கு இலவச ஆன்மிகச் சுற்றுலாவுக்கு விண்ணப்பிக்கலாம்!
அஜந்தா, எல்லோரா வரிசையில் தமிழ்நாட்டின் திருப்பத்தூரில் இன்னொரு 'சித்தன்னவாசல்' அஜந்தா, எல்லோரா வரிசையில் தமிழ்நாட்டின் திருப்பத்தூரில் இன்னொரு 'சித்தன்னவாசல்'
தஞ்சையில் புதிய சுற்றுலாத் தளம் தயார்..! மன்னர்கள் படகுச் சவாரி செய்த ஏரியில் இனி நாமும் பயணம் செய்யலாம்..! தஞ்சையில் புதிய சுற்றுலாத் தளம் தயார்..! மன்னர்கள் படகுச் சவாரி செய்த ஏரியில் இனி நாமும் பயணம் செய்யலாம்..!
திருப்பூருக்குப் பக்கத்தில் ‘குட்டி திபெத்’ திருப்பூருக்குப் பக்கத்தில் ‘குட்டி திபெத்’
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.