LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் செய்திகள் (Thirukkural News )

தமிழ்ச்சமூகம் ஆய்வுகளின் நம்பிக்கையில்லாமல் தேங்கிநிற்கிறதா?

தமிழ்ச்சமூகம் ஆய்வுகளின் நம்பிக்கையில்லாமல்  தேங்கிநிற்கிறதா?

 

 

மேடைகளில் பேசுபவர்கள் , நூல்களில் மொழிபெயர்ப்பு குறித்து குறிப்பிடுவார்கள் , கலந்துரையாடலில் கருத்து பகிர்பவர்கள் என்று திருக்குறள் சார்ந்த மொழிபெயர்ப்பு புள்ளிவிவரங்களை  இன்னும் தொடர்ந்து தவறாகக்  குறிப்பிடுகிறார்கள். அது தமிழை வளர்க்காது.  திருக்குறள் மொழிபெயர்ப்புகளைத் தொட்டு இதுவரை பேசியது, எழுதியது, இனி பேசப்போவது அனைத்தும் தவறான புள்ளிவிவரமாகவே இருக்கும். இதற்கு ஒரே தீர்வு   "Thirukkural Translations in World Languages"  நூலை வாங்கி ஒருமுறையேனும் திருக்குறள் பேசுபவர்கள் வாசித்துவிடுங்கள். ஆவணப்படுத்துங்கள்..

 

பெரும் உழைப்பில் திரட்டியுள்ள திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய பட்டியலில் ஒரு மொழிபெயர்ப்பை செய்ய ஆகும் செலவு 2-3 இலட்சம் ரூபாய் மட்டுமே, அதுவும் மொழிபெயர்ப்பாளருக்கு ஆகும் செலவாகும். பத்து கோடி தமிழ் மக்களில் 100 நாடுகளுக்கு மேல் வசிக்கும் தமிழ் மக்கள்தொகையில் , ஐந்து நாடுகளில் அலுவல் மொழியாக தமிழ் இருக்கும் நிலையில் இதை 158 பேர் கையில் எடுத்தால் உலகில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள் என்பது இன்னும் ஓரிரு ஆண்டுகளில் உறுதியாகும்.  திருக்குறள் மொழிபெயர்ப்பில் துணைநிற்பவர்கள், ஒருங்கிணைப்பவர்களின் பெயர்கள் காலத்திற்கும் பேசப்படும், ஆவணத்தில் இடம்பெறும்.  இதற்கு நாம் செய்யவேண்டியது  இதுவரை நாம் கேள்விப்பட்டதை விடுத்து,  தரவுகளை உள்வாங்கவேண்டும், வாசித்துப் பார்க்கவேண்டும், கேள்வி கேட்டு தெளிவுபெறவேண்டும்.

 

இந்நூல் புத்தகத்  திருவிழாக்களில் சந்தைப்படுத்தும் நெருக்கடியிலோ, இத்தனை நூல்களை எழுதிவிடவேண்டும் என்ற எண்ணிக்கைக்காகவோ, அரசு நூலகங்களுக்கு விற்கவேண்டும் என்ற இறுதித்தேதிக்குள் முடிப்பதற்காகவோ எழுதப்பட்ட நூல் அல்ல.  இது ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆராய்ந்து தொகுக்கப்பட்ட செயல்பாட்டு இறுதி அறிக்கை, உலகத் தமிழர் கரங்களில் தவழவேண்டிய மிக முக்கியத்  திருக்குறள் ஆவணம். 

 

ஏப்ரல் 2024 வரை திருக்குறள் 58 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது ,158 மொழிகளில் மொழிபெயர்க்கவேண்டும் , ஒரே மொழியில் பலமுறை வெளிவந்துள்ள மொழிபெயர்ப்புகளை சேர்த்தால் 351 முறை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்ற புள்ளிவிவரங்கள்  முறையாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. மலையாளத்தில் 30 முறை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது , ஆங்கிலத்தில் 130 முறை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்று எண்ணிக்கை மட்டுமல்ல , ஒரு மொழியில்  வெளிவந்துள்ள அனைத்து மொழிபெயர்ப்புகளின் முழு விவரமும் , ஆண்டு, மொழிபெயர்ப்பாளர், பதிப்பகம், அதுசார்ந்த வரலாற்றுக் குறிப்புகளோடு முழுமையாகத் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது இதுவே முதல் முறை.  இதுவரை திருக்குறளில் இந்த ஆழத்தில் மொழிபெயர்ப்பு விவரங்கள் குறித்து ஒரு நூல் வந்ததில்லை என்று சொல்லும் அளவிற்கு இதற்கு உழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.  எங்கள் பணியின் முதல்கட்டம் முடிந்தது.   உலகத் தமிழர்களின் கரங்களில் இவ்வறிக்கை நூலை கையளிக்கிறோம், அவர்கள் அடுத்து கொண்டுவரவேண்டிய மொழிபெயர்ப்புகளை கொண்டுவருவது எப்படி என்று சிந்திக்கவேண்டும். 

 

 தமிழில் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் எப்படி இதை எடுத்துக்கொண்டு அடுத்தக்கட்டத்திற்கு  நகர்த்துகிறார்கள், இந்நூலை எப்படி நேர்மையாக அணுகுகிறார்கள் என்று ஆவலோடு பார்த்துக்கொண்டிருக்கிறோம். விருப்பு வெறுப்பு இல்லாமல் ஒரு நேர்மையான உரையாடலை ஒவ்வொரு அமைப்பும் அங்குள்ள ஆய்வு மாணவர்களைக்கொண்டு நிகழ்த்தவேண்டும் , அதில் குறைகள் ஏதும் இருந்தால் சுட்டிக்காட்டவேண்டும் என்று அறிவார்ந்த சமூகத்தின் எதிர்ப்பார்ப்பு.

 

இது மற்றொரு உரைநூலோ, உவமைநூலோ அல்ல.  திருக்குறளை உலகிற்கு பரவலாக்கல் செய்யவேண்டிய இலக்கிற்கு  வலுசேர்க்கும் ஆய்வு சார்ந்த கையடக்கக் கருவி.  செயல்பாட்டு நூல். திருக்குறளை யுனெசுகோ அங்கீகாரம் பெறவும், தேசியநூலாக அங்கீகரிக்கவும் பன்னெடுங்காலமாக உள்ள கோரிக்கையை நோக்கி நம்மை கூர்மையாக நகர்த்தும் நூல்.  

 

மொழியுணர்வு மிகுந்த உலகின் பிறமொழிகளில் இதுபோல் அவர்களுக்கு முதன்மையான நூலில் ஒரு ஆய்வு  வெளிவந்திருந்தால்  உணர்வுள்ள, அறிவார்ந்த  அந்தச் சமூகங்கள் என்ன செய்திருப்பார்கள்?

 

  1. ஆய்வு சிந்தனையுள்ள பல்கலைக்கழகங்கள் தொடர்புகொண்டு விவரம் பெற்று சில பிரதிகளை வரவழைத்து வாசித்து, கூட்டம் போட்டு விவாதித்து , மாணவர்களுக்கு ஆய்வுசெய்யவேண்டிய முறைகளை , உலக அளவில் ஒரு ஆய்வுக்காக தரவுகளைத் திரட்டும் உத்திகளை பேசச்சொல்லியிருப்பார்கள். நூலங்களில் சில பிரதிகளை வாங்கி வைத்திருப்பார்கள். பாராட்டுக்கடிதம், திறனாய்வு, விமர்சனக் கடிதம்  அனுப்பியிருப்பார்கள். 
  2. தமிழ் சார்ந்த அரசுத் துறைகள் தொடர்புகொண்டு விவரம் திரட்டி, நாங்கள் பயன்படுத்தும் எண்ணிக்கை மாறுபட்டுள்ளதே, என்ன செய்யலாம்?. மாணவர்களுக்கு சரியான புள்ளிவிவரங்கள் கொண்டு சேர்க்கவேண்டும் என்று அக்கறைகொண்டு சிந்தித்திருப்பார்கள்.
  3. தமிழில் முன்னிற்கும் ஆய்வாளர்கள் ஊடகங்களில் பார்த்த செய்தி உண்மையா, திருக்குறளுக்கு இத்தனை ஆண்டுகால மொழிபெயர்ப்பு ஆய்வு அடங்கலை ஒருமுறை பார்த்துவிடவேண்டும், உடன் ஒரு பிரதியை நான் பார்த்தாகவேண்டுமே, எப்படி பெறுவது என்று ஆர்வம் கொண்டிருப்பார்கள்.
  4. திருக்குறளுக்காக இயங்கும் அமைப்புகள் திருக்குறள் குறித்து இப்படி ஒரு நூல் வந்துள்ளதே, இந்த விவரங்களை பார்த்துவிடவேண்டும், நாம் இனி பங்கேற்கும் மேடைகளில் இதுகுறித்து குறிப்பிட்டு தயங்கித் தயங்கிப் பேசாமல், குத்துமதிப்பாக ஒரு எண்ணிக்கையை கூறாமல் வெளிவந்துள்ள ஆய்வுத்தகவலை புள்ளிவிவரங்களோடு குறிப்பிடவேண்டும். எங்கு பெறுவது? என்று  முந்நூற்றிக்கும் அதிகமான திருக்குறள் அமைப்புகளில்  ஒரு சிலராவது முன்வந்திருப்பார்கள்.

 

  1. ஆய்வு மாணவர்கள், திருக்குறளில் ஆராய்ச்சி மாணவர்களை வழிநடத்தும் பேராசிரியர்கள் தங்களுக்கு போதிய தகவல்களும், விவரங்களும் தேவை என்று அகல கண்விரித்து தேடி ஆய்வு மாணவர்களை இதுகுறித்து அறிவுறுத்தியிருப்பார்கள்..

 

  1. உலக நாடுகளில் ஆங்கிலத்தில், அதுவும் முழு வண்ணத்தில் வெளிவந்துள்ளது எங்கள் தமிழ்ச்சங்கத்திற்கு, எங்களுக்கு ஒரு பிரதி அனுப்புங்கள் என்று வரவழைத்து உலக மொழிகளில் வெளிவந்துள்ள நம் திருக்குறள் வரலாற்றுச் செய்திகளை குறிப்பெடுத்து , நாங்கள் இதற்கு ஒரு அறிமுக விழா எங்கள் தமிழ்ச்சங்கத்தில் , தமிழ்ப்பள்ளியில் நடத்தவிரும்புகிறோம். இதைப் பேசுவதைவிட மதிப்புமிக்க செயல், பெருமைதரும் செயல் தமிழ்ச்சங்கங்களுக்கு என்ன இருக்கும்? இவற்றை ஊக்கப்படுத்துவதுதானே அமைப்பின் நோக்கம், என்று நூலாசிரியர்களை தூங்கவிடாமல் செய்திருப்பார்கள்.
  2. மூத்த அறிஞர்கள் நூலைப் பற்றி கேள்விப்பட்டவர்கள், பார்த்தவர்கள், அதுகுறித்து பாராட்டி, குறைகளை சுட்டிக்காட்டி விமர்சித்து ஊடங்களில் எழுதியிருப்பார்கள். அவர்கள் இதுவரை கடந்துவந்த பெரும் ஆய்வு வட்டத்திற்கு இதை பகிர்ந்திருப்பார்கள்.

 

  1. பன்னாட்டு நூலகங்களில் கொண்டுவைக்க அமைப்புகளும், தனி மனிதர்களும் வரலாற்றுக்கடமையாக களம் இறங்கியிருப்பார்கள்.           

 

  1. தமிழால் வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் பெறாமல், எவ்வித பலனையும் எதிர்பார்க்காமல் பிற துறைகளிலிருந்து வரும் இதுபோன்ற ஆய்வுகள், பங்களிப்புகள் வரவேற்கப்படவேண்டும் என்று அறிந்து தமிழை வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள் ஆரத்தழுவியிருப்பார்கள். உங்கள் தொழில்நுட்ப அறிவு, தரவுகள் திரட்டும் உத்தி, அறிவியல் பார்வை, உலகளாவிய பார்வை, மாற்று சிந்தனை தமிழுக்குத் தேவை என்று உச்சிமுகர்ந்திருப்பார்கள்

 

இப்படி எதுவும் தமிழில் இதுவரை , இவ்வளவு பரப்புரைகளுக்குப்பின் , ஊடகச் செய்திகளுக்குப்பின், உலகின் பல நாடுகளில் வெளியிட்டு இலவச நூல்களை அனுப்பியதற்குப்பின் இன்னும் நிகழவில்லை.  உலகின் மூத்த மொழி தமிழ், தமிழில் முதன்மையானது திருக்குறளும், தொல்காப்பியமும்.  அந்த திருக்குறள் ஆய்வுக்கே இந்த நிலைமை என்றால் பிற இலக்கிய ஆய்வுகளுக்கு, பிற முயற்சிகளுக்கு , எங்களைப்போல் சிறிதளவேனும்  வெளித்தொடர்பு இல்லாதவர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு என்ன நிலைமை என்பது கவலைப்படும் நிலையில் தமிழ் ஆய்வுகள்  உள்ளது.  தமிழ்ச்சமூகம் உயிரை மட்டும் வைத்துக்கொண்டு  உயிர்ப்பு இல்லாத ஊசலாடும் நிலையில் , பெருமைபேசிப்  பயணிக்கிறதா?  என்பதை நாம் ஒவ்வொருவரும் நமக்குள்  சுய விசாரணை செய்யவேண்டும்.

திரு.கி. ஆ. பெ. விசுவநாதம், திரு.பாவலரேறு பெருஞ்சித்திரனார், திரு.ம. பொ. சிவஞானம், திரு.இலக்குவனார் போன்ற பல்வேறு உண்மையான தமிழுணர்வு கொண்ட தமிழ் அறிஞர்கள் வாழ்ந்த காலத்தில் அரசும், முதல்வர் பொறுப்பில் வந்தவர்களும்  தமிழுக்கும், தமிழறிஞர்கள் கருத்துகளுக்கு மதிப்பு கொடுத்தார்கள், இவர்கள் என்ன நினைப்பார்களோ , போராட்டத்தில் இறங்கிவிடுவார்களோ , அறிக்கை விட்டு அரசுக்கு கெட்டபெயர் வந்துவிடக்கூடாதே என்ற சூழல் தமிழ்நாட்டில் இருந்தது என்று நினைக்கிறேன். தமிழ் அறிஞர்கள்  பின்னால் இளையோர் இருந்ததால் , சமூகம் இருந்ததால் ஆளும் அரசுகள் இவர்களது கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்ததாக பார்க்கவேண்டியுள்ளது.

 

அப்படியானால், கீழ்காணும் கேள்விகள் எழுகிறது.

 

  1. இன்று அப்படிப்பட்ட தமிழ்க்காக்கும் அறிஞர்கள் இல்லையா?
  2. புலமைத் தட்டுப்பாடா? எதற்கும் விலைபோகாத, தன்னலமற்ற, சமரச தலைமைப்பண்பு அறிஞர்களிடம் இல்லையா?
  3. விருதுக்கும் , வசதி வாய்ப்புகளும் காத்து ஏங்க ஆரம்பித்துவிட்டதா அறிவுச் சமூகம் ?
  4. இளைஞர்கள் அறிஞர்களை ஏற்றுக்கொண்டு அவர்கள் கருத்துகளுக்கு மதிப்பளித்து பின்னால் திரள்வதில்லையா?
  5. மக்கள் திரளும் அளவுக்கு தரமும், நம்பிக்கையையும் அறிஞர் சமூகம் வென்றெடுக்கவில்லையா?
  6. தலைமைப்பண்பு கொண்ட அறிஞர்கள் குறைந்துவிட்டார்களா?
  7. மேலோட்டமான அரசியல்,சாதி, மதம் தொடர்புடைய தகுதி குறைவானவர்கள் தமிழ் அமைப்புகளின் தலைமைப்பொறுப்புகளுக்கு சென்று அரசியல் செய்வதால், அறிஞர்கள் ஒதுங்கிவிட்டார்களா?
by Swathi   on 23 Mar 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்த  6ஆவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு - பேரா. இல. சுந்தரம் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்த 6ஆவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு - பேரா. இல. சுந்தரம்
வள்ளுவர் கோட்டத்தில் ஓர் குறளங்காடி! வள்ளுவர் கோட்டத்தில் ஓர் குறளங்காடி!
வள்ளுவம் ஏன் வாழ்வியலாகவில்லை? தீர்வுகளை நோக்கி… வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி வள்ளுவம் ஏன் வாழ்வியலாகவில்லை? தீர்வுகளை நோக்கி… வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி
2025 ஆம் ஆண்டு உலகத் திருக்குறள் முற்றோதல் விருதுபெற்றவர்கள் 2025 ஆம் ஆண்டு உலகத் திருக்குறள் முற்றோதல் விருதுபெற்றவர்கள்
வள்ளுவத்தைப் வாழ்வியலாக்க ஐந்து திருக்குறள் கட்டமைப்புகள் வள்ளுவத்தைப் வாழ்வியலாக்க ஐந்து திருக்குறள் கட்டமைப்புகள்
விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் நிறுவிய திருவள்ளுவர் சிலைகள் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் நிறுவிய திருவள்ளுவர் சிலைகள்
திருக்குறள் மற்றும் திருவாசகம் தொடர்பான ஆய்வாளர்களுக்கு விருது - விண்ணப்பிக்க அழைப்பு திருக்குறள் மற்றும் திருவாசகம் தொடர்பான ஆய்வாளர்களுக்கு விருது - விண்ணப்பிக்க அழைப்பு
“உலகப் பொதுமறை திருக்குறள்” கையடக்கப் பதிப்பை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின் “உலகப் பொதுமறை திருக்குறள்” கையடக்கப் பதிப்பை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.