LOGO
  முதல் பக்கம்    சுற்றுலா    தமிழ்நாடு சுற்றுலா Print Friendly and PDF
- மதுரை

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வரலாறு

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வரலாறு

சுப்பிரமணிய சுவாமி

அறுபடை வீட்டினை கொண்ட முருகப்பெருமானுக்கு திருப்பரங்குன்றம் முதல் படை வீடாகும். இந்த கோவிலில் மூலவர் முருகனுக்கு அபிஷேகம் நடை பெறாமல், முருகனின் வேலுக்கு அபிஷேகம் நடப்பது மற்றொரு சிறப்பு. இந்த திருத்தலத்தில் முருகர் திருமண கோலத்தில் காட்சி தருகின்றார். அது மட்டுமல்லாமல் மற்ற ஐந்து தலங்களில் நின்ற படியாக காட்சி தரும் முருகன் இந்த திருப்பரங்குன்றத்தில் மட்டும் தெய்வானையுடன் மணக் கோலத்தில் அமர்ந்தபடி காட்சி தருகிறார். முருகர் தெய்வானையுடன், நாரதர், இந்திரன், பிரம்மா, இவர்களும் வீணை ஏந்தாத சரஸ்வதி தேவியும், சாவித்திரி தேவியும், மேல் பகுதியில் சூரிய சந்திரரும் காட்சி தருகின்றனர். சுப்பிரமணியருக்கு வாகனமாக யானையும், ஆடும் இத்தலத்தில் உள்ளது. முருகன் குடைவரையில் வீற்றிருப்பதால் இங்கு முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. அறுபடை வீடுகளில் வேலுக்கு அபிஷேகம் செய்யப்படுவது இந்த கோவிலில் மட்டும் தான் நடக்கின்றது. சூரனை வதம் செய்த முருகப்பெருமான் வெற்றிவேல் உடன் வந்து இந்த கோவிலில் அமர்ந்ததால் இந்த கோவிலில் வேலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

சில வருடங்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் கோவிலுக்கு பின்புறம் தென்பரங்குன்றம் குடைவரை கோவில் முருகப்பெருமானை வழிபட்டு வந்தார்கள். ஆனால் அந்த கோவில் சரியாக பராமரிக்காமல் இருந்ததால் சிதிலமடைந்தது. இதன்மூலம் கோவிலை வேறு ஒரு பக்கத்திற்கு மாற்றி வடக்கு திசை நோக்கி புதியதாக அமைத்தனர். முருகனை வடக்கு திசை நோக்கி திருப்பி அமர வைத்ததால் ‘திருப்பிய பரங்குன்றம்’ என்ற பெயர் திருப்பரங்குன்றம் என்று மாறியது.

தல வரலாறு

தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தும் அசுரர்களை அழிப்பதற்காக சிவபெருமானால் உருவாக்கப்பட்டவர் தான் முருகப்பெருமான். சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணிலிருந்து தீப்பொறிகளை உருவாக்கி, அந்த தீப்பொறியில் இருந்து ஆறு முகங்களுடன் முருகப்பெருமான் பூமியில் அவதாரம் எடுத்தார். பூமியில் அட்டகாசம் செய்து கொண்டிருந்த சூரர்களை வதம் செய்து மயிலாகவும், சேவலாகவும் மாற்றி தன் கையிலேயே வைத்துக் கொண்டார். இந்தப் போரானது திருச்செந்தூரில் நடந்தது. போரில் வெற்றி கண்ட முருகப்பெருமான் கையில் வேலுடன் திருப்பரங்குன்றம் வந்தடைந்தார். அசுரர்களை அழித்து வெற்றி கொண்ட முருகப்பெருமானுக்கு இந்திரன் தனது மகளான தெய்வானையை மணம் செய்து தந்தது இந்த திருப்பரங்குன்றத்தில் தான். திருமணத்திற்கு அனைத்து தெய்வங்களும், தேவர்களும், மகரிஷிகளும் முப்பெரும் தேவியரும் வந்து ஆசி வழங்கினர். அந்த நாரத முனியின் முன்னணியில் தான் முருகனுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடந்தது. இதே திருமண கோலத்தில்தான் அந்த முருகப்பெருமான் திருப்பரங்குன்றத்தில் இன்றளவும் பக்தர்களுக்கு காட்சி தந்து கொண்டிருக்கின்றார். இந்த சம்பவத்திற்குப் பிறகு சுவாமிக்கு சுப்பிரமணியசுவாமி என்ற பெயர் சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பலன்கள்

திருமணத்தில் தடை உள்ளவர்கள் குழந்தை பேறு இல்லாதவர்கள் இங்கு வந்து அந்த முருகப் பெருமானை மனதார வேண்டிக் கொண்டால் திருமணம் விரைவில் நடக்கும் என்பது நம்பிக்கை. ராகுகாலத்தில் இந்த கோவிலில் இருக்கும் துர்கை அம்மனை வழிபட்டால் அனைத்து விதமான பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

by Swathi   on 14 May 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மதுரையில் உள்ள கூடல் அழகர் கோயிலின் பெருமை மதுரையில் உள்ள கூடல் அழகர் கோயிலின் பெருமை
அனைவரும் சென்று பார்க்க வேண்டிய மதுரை காந்தி மியூசியம்-Gandhi museum அனைவரும் சென்று பார்க்க வேண்டிய மதுரை காந்தி மியூசியம்-Gandhi museum
மதுரையில் ஒரு அதிசயம் ஆயிரங்கால் மண்டபம் மதுரையில் ஒரு அதிசயம் ஆயிரங்கால் மண்டபம்
மதுரைக்கு அழகு சேர்க்கும் வண்டியூர் தெப்பக்குளம் மதுரைக்கு அழகு சேர்க்கும் வண்டியூர் தெப்பக்குளம்
மதுரை திருமலை நாயக்கர் மஹால் சிறப்பு-thirumalai nayakar mahal மதுரை திருமலை நாயக்கர் மஹால் சிறப்பு-thirumalai nayakar mahal
மதுரை அழகர் கோவில் வரலாறு மதுரை அழகர் கோவில் வரலாறு
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிறப்பு தகவல்கள்-meenakshiamman temple மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிறப்பு தகவல்கள்-meenakshiamman temple
மதுரை மாவட்ட சுற்றுலா தளங்கள் மதுரை மாவட்ட சுற்றுலா தளங்கள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.