LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF

தியானம் தியானம்- ஒரு “பத்தி” (பாரா) கதை

ஐயோ இன்னைக்கு மழை வரும்னு சொல்லியிருந்தானே?

 

   இந்த வருசமாவது ‘இன்கிரிமெண்டு’ ஜாஸ்தி கொடுப்பாங்களா? அன்னைக்கு பார்க்கறப்ப கூட மானேஜர் “நல்லா வேலை செய்யறீங்க” அப்படீன்னு பாராட்டியிருக்காரு பார்க்கலாம், கிடைக்கும்.

    இந்த இளங்கோ வாய் கொடுக்காம இருந்திருந்தா அந்த பார்ட்டியோட “பைல்” எங்கிட்ட வந்திருக்கும். கெடுத்துட்டான்.

    தினேஷ் புது வண்டி வாங்கி கொடுன்னு ஒத்தை கால்ல நிக்கறான், இப்ப பயம்மா இருக்கும் பசங்களுக்கு வண்டி வாங்கி கொடுக்கறதை நினைச்சா..

    மகிழோட ஜாதகம் கொடுத்து இதுவரைக்கும் பதிலை காணோம், கொடுத்த மரியாதைக்காவது பொருத்தம் இருக்கு, இல்லை அப்படீன்னு சொல்றதுக்கு கூட அவங்களுக்கு முடை

    நம்ம தொகுதியில யார் ஜெயிச்சா நல்லா இருக்கும்? அன்னைக்கு ஜெயக்குமார் நமக்கு ஹெல்ப் பண்ணியிருக்காரு, அவருக்கு ஓட்டை போட்டுடலாம், ஆனா பக்கத்து வீட்டுக்காரனாச்சே பாலு, அவனை விட்டுட்டு எப்படி ஜெயக்குமாருக்கு ஓட்டு போடறது/

   விலைவாசி ஏன் இப்படி ஜிவுன்னு ஏறிகிட்டு போகுதுன்னு தெரியலை? வாங்கற சம்பளம் மளிகைக்கே சரியா போகுது

    இன்னைக்கு என்னமோ அந்த விமலா ட்ரஸ் பிரமாதாமா இருந்துச்சு, நமக்கு ஏன் அவளை மாதிரி ட்ரஸ் பண்ணா நல்லா இருக்கறதில்லை…?

    இதுவேற எப்ப முடியப்போகுதுன்னு தெரியலை, வீட்டுக்கு போற நேரமாச்சு, இழுக்கறாங்க….!

        இதுவரை நம் அலுவலக பணியாளர்கள் அனைவரும் ஒன்று கூடி இந்த மண்டபத்தில் தியானம் செய்து இருக்கிறோம். இதில் கிடைத்த அனுபவத்தை பற்றி ஓரிருவர் முன் வந்து பேசுமாறு கேட்டு கொள்கிறோம். முதலாவதாக நமது அக்கவுண்டண்ட் சோமையாவிய அழைக்கிறேன்.

     இன்று தியானத்தின் மூலம கிடைத்த அனுபவம் சொல்லி மாளாது, உள்ளத்தில் அமைதி அமைதி என்றால் அப்படி ஒரு அமைதி….

    மேற்கண்டதை போல பலரும் தங்களுடைய இந்த தியானத்தால் கிடைத்த ஆத்மீக அனுபவங்களை அந்த கூட்டத்தில் சொல்லி கொண்டு போனார்கள். “வாட்சையும்”, “செல் போனையும்” பார்த்தபடி பலர் அதை காதில் வாங்கி கொண்டிருந்தார்கள்.

Meditation
by Dhamotharan.S   on 01 Jul 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இறுதி இறுதி
உறவுகளோடு உறவாக உறவுகளோடு உறவாக
யானையும் மூப்பனும் யானையும் மூப்பனும்
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.