சுந்தர்.சி. இயக்கத்தில், விஷால் நடிப்பில் உருவாகி கடந்த பொங்கல் அன்று வெளியான ஆம்பள திரைப்படம் இது வரை நல்ல வசூலை வாரிக்குவித்து வருகிறது.
இதனைத்தொடர்ந்து, ஆம்பள படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது.
அதில் படத்தின் நாயகனும், தயாரிப்பாளருமான விஷால் பேசும் போது,
இனிமேல் என் படங்களுக்கு இசை வெளியீட்டு விழாவே கிடையாது. அப்படி வைத்தாலும் நண்பர்களை நான் அழைக்கப் போவதில்லை என தடாலடியாக கூறினார்.
தொடர்ந்து அவர் பேசிய போது, இதற்கு முன் விஷ்ணு லட்சுமி மேனனுக்கும் எனக்கும் தொடர்பு இருப்பதாக பேசிவிட்டு போனார். அதை சரிசெய்யவே படாத பாடு பட்டேன். இப்போது அடுத்ததாக ஆர்யா ‘எவனா இருந்தாலும் வெட்டுவேன்’ என கூறியதாக சொல்லிவிட்டார். சத்தியமாக நான் அப்படி சொல்லவே இல்லை.
சொல்லாததை ஆர்யா கொளுத்தி போட்டதால் சில நாட்கள் பயத்திலேயே இருந்தேன். யாரேனும் தகராறுக்கு வருவார்களோ, போலீஸ் வீட்டுக்கு வருமோ என்றெல்லாம் பயந்தேன். அப்படி எதுவும் நடக்கவில்லை. இனிமேல் எனது பட விழாக்களுக்கு ஆர்யா போன்ற நண்பர்களை அழைப்பது இல்லை என்று முடிவு எடுத்துள்ளேன்.
ஆம்பள படத்திற்கு தராமன திருட்டு விசிடி வரவில்லை என கூறிய விஷால், முன்பெல்லாம் புரஜெக்டர் ரூமிலிருந்து படத்தை பதிவு செய்வார்கள்.
இப்போது அவனால் செய்ய முடியவில்லை, நானும் எனது ‘ஆம்பள’ படத்தின் திருட்டு விசிடியை பார்த்தேன், ‘ஐ’ படத்திற்கும் வந்துள்ளது. ஆனால் ‘ஆம்பள’ படத்தின் திருட்டு விசிடியை சீட்டில் அமர்ந்தே எடுத்திருக்கிறான். பாவம் ரொம்ப கஷ்ட பட்டிருக்கிறார். அது நல்ல விஷயம் தான் ஓரளவிற்கு பயம் வந்திருக்கிறது.
படம் வேறு தியேட்டர், படத்தின் வசனங்கள் வேறுதியேட்டர் என எடுத்து தனியாக இணைத்து அவர்கள் ஒரு போஸ்ட் புரடக்ஷன் யூனிட்டாக செயல்பட்டதாக கேள்விபட்டேன். அதில் எவ்வளவு கலெக்ஷன் வந்திருக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை எனக் கூறி சிரித்த விஷால், எந்த ஒரு படமும் கேமரா பிரிண்ட் மாத்திரமே வந்து ஒரிஜினல் காப்பி வராதவரை அதுவே மிகப்பெரும் வெற்றி என தெரிவித்துள்ளார்.
|