நவகிரகம் அனைத்தும் தமது தேவியருடன் உட்கார்ந்த நிலையில் அனுக்கிரக மூர்த்திகளாக அருள்பாலிக்கிறார்கள். கோயிலின் சிறப்பம்சமே ராசிக்கட்டமும், ராசிக்கு அதிபதியும் இருப்பது தான்.என்ன ராசி, என்ன நட்சத்திரம் என தெரியாவிட்டாலும் விருதுநகரிலிருந்து 8 கி.மீ., தூரத்தில் உள்ள சோலைக்கவுண்டன்பட்டி சீனிவாசப்பெருமாள் கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்தால் அதன் பலன் அவரவர் ராசி, நட்சத்திரத்திற்கு வந்து சேர்ந்து விடும் என கோயில் தல வரலாறு கூறுகிறது.
இப்படி அந்தந்த ராசி, நட்சத்திரத்திற்குரிய பலனை பெருமாள் அள்ளிவழங்குவதால் இவரை "நம்பெருமாள்' என் இப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள்.மூலவர் திருவேங்கட முடையான் என்ற சீனிவாசப்பெருமாள். ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.கோயிலின் சிறப்பம்சமே ராசிக்கட்டமும், ராசிக்கு அதிபதியும் இருப்பது தான். எனவே ராசி நட்சத்திரம் தெரியாமல் இருக்கும் பக்தர்கள் இத்தலம் வந்து பெருமாளுக்கு அர்ச்சனை செய்தால் அவரவர்களுக்குரிய பலன் கிடைக்கிறது. |