காட்டாரம், கேதாரம் என்ற புராணப்பெயர்களும் இவ்வூருக்கு இருந்துள்ளன. கிருஷ்ணாநதியின் மிக ஆழமான பகுதி இங்குள்ளது. அடிக்கடி
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஊர் அழிந்துவிட்டது. இப்போது, வயல்களும் காடுகளுமாக காட்சியளிக்கிறது. குறைந்த அளவு மக்களே வசிக்கின்றனர்.
மலைக்கோயிலுக்குச் செல்ல 600 படிகள் ஏற வேண்டும். சுயம்பு நரசிம்மரின் உருவம், ஒரு பாறையில் உள்ள இவரது உருவம் தெளிவில்லாமல்
இருக்கிறது. தாயாரை செஞ்சுலட்சுமி என்கின்றனர். செஞ்சு என்றால் வேடுவச்சி. காட்டில் வேடுவர் இனத்தினர் வசித்ததால், தாயாருக்கும் அவர்கள்
தங்கள் இனத்தின் பெயரையே சூட்டியுள்ளனர்.வைரக்குளம்: இங்கு ஒரு காலத்தில் குளம் ஒன்றை வெட்டினர். அப்போது ஒரு ஊழியரின் காலில் ஏதோ
இடித்து ரத்தம் வழிந்தது. இடித்த பாறையைச் சோதித்ததில், அது வைரப்பாறை எனத் தெரிய வந்தது. அந்தப்பகுதியை மேலும் தோண்டிய போது,
அதனுள் சில சிலைகளும் இருந்ததைக் கண்டுபிடித்தனர். எனவே, இங்குள்ள நரசிம்மருக்கு வஜ்ராலயர் என்று பெயர் சூட்டினர். வஜ்ரம் என்றால் வைரம்.
காட்டாரம், கேதாரம் என்ற புராணப்பெயர்களும் இவ்வூருக்கு இருந்துள்ளன. கிருஷ்ணாநதியின் மிக ஆழமான பகுதி இங்குள்ளது. அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஊர் அழிந்துவிட்டது. இப்போது, வயல்களும் காடுகளுமாக காட்சியளிக்கிறது. குறைந்த அளவு மக்களே வசிக்கின்றனர். மலைக்கோயிலுக்குச் செல்ல 600 படிகள் ஏற வேண்டும். சுயம்பு நரசிம்மரின் உருவம், ஒரு பாறையில் உள்ள இவரது உருவம் தெளிவில்லாமல் இருக்கிறது. தாயாரை செஞ்சுலட்சுமி என்கின்றனர். செஞ்சு என்றால் வேடுவச்சி.
காட்டில் வேடுவர் இனத்தினர் வசித்ததால், தாயாருக்கும் அவர்கள் தங்கள் இனத்தின் பெயரையே சூட்டியுள்ளனர். இங்கு ஒரு காலத்தில் குளம் ஒன்றை வெட்டினர். அப்போது ஒரு ஊழியரின் காலில் ஏதோ இடித்து ரத்தம் வழிந்தது. இடித்த பாறையைச் சோதித்ததில், அது வைரப்பாறை எனத் தெரிய வந்தது. அந்தப்பகுதியை மேலும் தோண்டிய போது, அதனுள் சில சிலைகளும் இருந்ததைக் கண்டுபிடித்தனர். எனவே, இங்குள்ள நரசிம்மருக்கு வஜ்ராலயர் என்று பெயர் சூட்டினர். வஜ்ரம் என்றால் வைரம். |