LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் வளர்ச்சிக் கோரிக்கைகள் Print Friendly and PDF

முதலாவது உலகத் தமிழிசை மாநாடு -2019 தீர்மானங்கள்

முதலாவது உலகத் தமிழிசை மாநாடு -2019 தீர்மானங்கள்


1. தமிழிசை மாநாடுகளைத் தொடர்ந்து நடத்துவதற்கு ஏதுவாக உலகத் தமிழிசை ஆராய்ச்சிக் கழகம் என்ற அமைப்பை ஏற்படுத்துவது என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது.
2. தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் (தொடக்க நிலை முதல் மேல் நிலை வரை) தமிழிசையை ஒரு பாடமாக முறையாகச் சேர்த்து உரிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
3. தமிழிசை படித்தவர்களுக்குத் தொடக்கப்பள்ளிகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தவேண்டும்.
4. இசை நூல்களைத் தொகுத்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழிசை ஆய்வு நூலகம் உருவாக்கப்பட வேண்டும். மேலும் தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழிசை நூல்களைத் தொகுத்து ஆங்கிலத்தில் உள்ளவற்றைத் தமிழிலும், தமிழில் உள்ளவற்றை ஆங்கிலத்திலும் மொழிமாற்றம் செய்து உலகளாவிய தமிழிசை ஆய்வுக்கு வழிகோல வேண்டும்.
5. உலகத் தமிழிசை மாநாடு இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நடத்தவேண்டும். முதல் உலகத் தமிழிசை மாநாட்டில் உருவாக்கப்படும் உலகத் தமிழிசை ஆராய்ச்சிக் கழகம் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும். இதற்குத் தமிழ்நாடு அரசு ஆக்கத்தையும், ஊக்கத்தையும் வழங்கிட கேட்டுக்கொள்கிறோம்.
6. இசைத் துறையில் சிறந்து விளங்கி துறை வளர்ச்சிக்குப் பங்களிப்பு செய்தவர்களுக்கு, ஆப்ரகாம் பண்டிதர், வி.பா.க சுந்தரம், விபுலானந்த அடிகள் ஆகியோரின் பெயரில் தமிழ் நாடு அரசின் சார்பில் விருதுகள் வழங்கிச் சிறப்பிக்க வேண்டும்.
7. இசைக் கருவிகள் உருவாக்குபவர்களின் நலனைப் பாதுகாக்க நலவாரியம் தமிழ் நாட்டு அரசு கலைப் பண்பாட்டுத்துறை சார்பில் அமைத்து இசைக்கருவிகள் அழிந்து விடாமல் காப்பாற்றப்பட வேண்டும், பயிற்சிகள் வழங்க வேண்டும்.
8. பழங்குடியின மக்களின் இசைக் கருவிகளை வாசிக்க வைத்து அதைத் தமிழக அரசு ஆவணப்படுத்த வேண்டும். அந்த இசையைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை உலகத் தமிழ்ச் சங்கத்தின் வழியாக மேற்கொள்ள வேண்டும்.
9. கலைப் பண்பாட்டுத் துறையின் சார்பில், மாவட்டந்தோறும் மார்கழித் திங்களில் தமிழிசை விழாக் கோலாகலமாக நடத்தப்படவேண்டும்.

by Swathi   on 20 Jan 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்நாட்டில் நூறு விழுக்காடு ஆட்சித்தமிழை நிலைநிறுத்துவோம்! தமிழ்நாட்டில் நூறு விழுக்காடு ஆட்சித்தமிழை நிலைநிறுத்துவோம்!
செந்தமிழ்த் திருத்தேர் தூயதமிழ் மாணவர் இயக்கம் பன்னாட்டுத் தூயதமிழ் மாணவர் மாநாடு - 2025 -மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செந்தமிழ்த் திருத்தேர் தூயதமிழ் மாணவர் இயக்கம் பன்னாட்டுத் தூயதமிழ் மாணவர் மாநாடு - 2025 -மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
உலகத் தமிழ்க் காப்புக் கூட்டியக்கம் நடத்தும் மாணவர் எழுச்சித்தமிழ் மாநாட்டுத் தீர்மானங்கள் உலகத் தமிழ்க் காப்புக் கூட்டியக்கம் நடத்தும் மாணவர் எழுச்சித்தமிழ் மாநாட்டுத் தீர்மானங்கள்
அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை- தமிழ்ப் பல்கலைக் கழகம் நடத்திய 'தமிழ்க் கூடல்-2024' மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள்  அமைச்சரிடம் ஒப்படைப்பு அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை- தமிழ்ப் பல்கலைக் கழகம் நடத்திய 'தமிழ்க் கூடல்-2024' மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அமைச்சரிடம் ஒப்படைப்பு
தமிழர்கள் தமிழ்ச் சங்கத்தினர் ஆற்ற வேண்டிய சில  குறள் சார்ந்த பணிகள்.... தமிழர்கள் தமிழ்ச் சங்கத்தினர் ஆற்ற வேண்டிய சில குறள் சார்ந்த பணிகள்....
தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சருக்கு மே  2024 ல் வழங்கப்பட்ட கோரிக்கை மனு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சருக்கு மே 2024 ல் வழங்கப்பட்ட கோரிக்கை மனு
இளையராசாவிடம்  எனக்குள்ள கிடுக்கங்களும் வேண்டுகோள்களும்-நாக.இளங்கோவன் இளையராசாவிடம் எனக்குள்ள கிடுக்கங்களும் வேண்டுகோள்களும்-நாக.இளங்கோவன்
பெயர் பலகைகள் அன்னை தமிழ் மொழியில் பெயர் பலகைகள் அன்னை தமிழ் மொழியில்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.